Showing posts with label துரோகி. Show all posts
Showing posts with label துரோகி. Show all posts

Thursday, January 31, 2008

"ஆங்கிலேயனுக்கு அடியாலாக இருந்த தேச துரோகியின் அஸ்தி கரைப்பு"

மும்பை: மகாத்மா காந்தியின் கடைசி அஸ்திக் கலசம் இன்று அரபிக் கடலில் கரைக்கப்படுகிறது.மகாத்மா காந்தி, 1948ம் ஆண்டு, ஜனவரி 30ம் தேதி டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது 60வது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன.
....
வெள்ளைக்காரனுக்கு வேலை செய்து நாட்டை காட்டி கொடுத்த துரோகி 'காந்தி'. ஆனா திட்டமிட்டு மூடிமறைத்து ஆளும் வர்க்கம் அவரை தேச தந்தையாக காட்டுகிறது. ஆனால் 60 ஆண்டுகால சுதந்திரத்தின் யோக்கிதை என்னவென்றும், நாடு வளரும் என்று மண்மோகன், சிதம்பரம் என அருவருடிகள் இன்னும் புருடா விடுவதில் இருந்து ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளனும், எவனுக்கு ஆதர்வாக காந்தி செயல்பட்டார் என.

இதற்கு பகத்சிங் பார்வையில் அணுக வேண்டும். இதேபோல காந்தியின் இந்து மதவெறியினை கண்டுகொள்ள பெரியாரையும், அம்பேத்காரையும் படிக்க வேண்டும். அப்போது தான் இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கும், இந்து பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கும் 'காந்தி செய்த வேலை'யினை தெரிந்து கொள்ள முடியும்.
.

  • இணைப்புகள்

  •