Saturday, January 26, 2008

"ஆளும் வர்க்கத்துக்கு ஒத்துதான் ஊதினோம் - ஊதுவோம்" - சிபிஎம்- யின் தொடரும் அதிரடி


ஐக்கிய முற்போக்கு கூட்டணி (கூட்டணி என்றால் சந்தர்ப்பவாதம்) ஆட்சியே கிட்டதட்ட ஓராண்டில் முடியபோகுது. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கைகள் ஒவ்வொன்றாக டிக் ஆகி கொண்டே வருகிறது.

இந்த போலிகளும் கொஞ்சங்கூட கூச்சம் இல்லாமல், மக்கள் கஷ்டபடுகின்றனர் என குரல் கொடுத்துக்கொண்டே 'ஆட்சியை' முட்டுகொடுத்துவருகின்றனர். தே.ஜ கூட்டணி ஆட்சியின் கொள்கையினையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியும் கடைபிடிக்கிறது என வெளிப்படையாகவே அறிவிக்கும் அளவு என்ன ஐ.மு கூட்டணி மதச்சார்பின்மைக்காக புடுங்கியது என தெரிவிக்க முடியுமா.

முடியாது என்பதே நிதர்சன உண்மை. உலகவங்கியின் திட்டம் டிக் ஆவதுபோல, ஆர்.எஸ்.எஸ்-யின் பார்ப்பன பாசிச கொள்கைக்கான தயாரிப்புகளும் டிக் ஆகிக்கொண்டே இருக்கிறது. அரசுக்கு வெளியிலே பார்ப்பன பாசிச கொள்கை ரீதியில் திரட்டபட்ட படை ரெடியாக காத்து இருக்கிறது, குஜராத்தில் நிகழ்த்தியதை நாடு முழுவதும் நிகழ்த்துவதற்கு.

இதனை மூடிமறைக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தாமல் ஆளும் வர்க்கத்தை முறியடிக்க முடியாது என்பதே வெள்ளிடைமலை

Friday, January 25, 2008

"தமிழனை அழிக்காமல் ஓய மாட்டோம்" - கலைஞர்


தினம் ஒரு பன்னாட்டு கம்பெனி, மருத்துவ நகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என தமிழனுக்காக காலை 4 மணிக்கு எழுந்து வேலை செய்யும் ஒரே முதல்வர் கலைஞர் என்றால் அது மிகையில்லை. மின்சாரத்தட்டுபாட்டை ஏற்படுத்தி இன்று தனியாருக்கு அனுமதி அளித்தது இவரின் சமீபத்திய சாதனை.


இந்த சாதனைகளால் மக்கள் பெரும்பான்மையினர் வீதிக்கு வந்துவிட்டார்கள். அன்றாடம் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி சென்னை போன்ற பெருநகரங்களில் கால்வாய் ஓரமாக, சாலை ஓரமாக கூலித் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். காசு இருந்தா கல்வி என்பது கொள்கையாகவே மாற்றிவிட்டார்கள். தமிழ் படித்தவனுக்கு வேலை இல்லை. ஆங்கிலமாவது தெரியுமா என்றால் அதுவும் அரைகுறை. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்களை கசக்கி பிழிந்து ஒரு சிலரை வேலைக்கு பொறுக்கி எடுக்கும் அவலம். விண்ணை முட்டும் வீட்டு வாடகை ஏற்றத்தால் ஏழை - நடுத்தர மக்கள் நகரத்தை விட்டு துரத்தியடிக்கப்படுகின்றனர்.


திரும்பிய பக்கம் எல்லாம் சாமியர் வருகை பற்றி அறிவிப்புகள், வாஸ்த்து சாஸ்திர நிபுணர்கள், ராசிகல் & பெயரியல் நிபுணர்கள்.


வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகள், கல்வியினை வியாபாரமாக்கும் போஸ்டர்கள் என நாடே திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.


இவ்வளவினையும் செய்துவிட்டு தங்கள் படங்களை பேனர்களாக வீதிக்கு வீதி வைத்துக்கொண்டும், பழம் தின்று கொட்டை போட்டவர்க்ள் (ஜெ, கலைஞர், ராமதாஸ்) என்றால் பல தொலைக்காட்சிகள் உருவாக்கி அதன் மூலம் புகழ் பாடி கொண்டும் வலம் வருகின்றனர்.மக்களை அழித்துவிட்டு கலையினை காப்பாற்றுகிறோம் என சென்னை சங்கமம் நடத்துவது போல தமிழனை அழித்துவிட்டு தழிழை பாதுகாப்போம் என சூளுரைக்கின்றனர்.


இந்த அட்டை கத்தி வீரர்களை மக்கள் தெரிந்து கொள்ளாத வரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

"GH பெயருக்கு தான், மற்றபடி தனியார் நிறுவனம் தானுங்க" - இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் (எ) உலகவங்கி

GH என்ற அரசு பொது மருத்துவமனை 2005-ல் புதிதாக பெரிய அளவில் உலகவங்கி நிதியுடன் கட்டப்பட்டது. அப்பவே உள்ளே போக உலக வங்கி சொன்னபடி ரூ5 கட்டணமாக முன்னாள் அருவருடி ஜெயலலிதா அறிமுகப்படுத்தி பின் தேர்தல் பயம் காரணமாக அதை நீங்கியதை (உலக வங்கியின் தொடர் கொள்ளைக்கு உத்தரவாதம் அளித்துவிட்டு தானுங்க) நாம்பார்த்தோம்.

மருத்துவமனை கட்டும்போதே காசு வசூல் பண்ண ஏற்பாடு ஆயிடுச்சு என தெரியும். தெரிந்த அந்த விஷயம் நடைமுறைக்கு இப்ப வந்துவிட்டது. அறிவிச்சாச்சு... "PAY WARDS" நான்கு படுக்கை கொண்ட அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 2000. இரண்டு படுக்கை கொண்ட அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 3000, ஒரு படுக்கை மட்டும் கொண்ட தனி அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 6000 என அறிவிச்சுட்டானுங்க. ஆரம்பிச்சுட்டானுங்க.

மக்களுக்காக தான் அனைத்தும் என தொழிற்சாலையினை, பொதுதுறையினை ஆரம்பித்து உழைப்பில் ஈடுபடுத்தி அதன் மூலம் கிடைக்கும் அனைத்தையும் மக்களுக்கே பயன்படுத்துவது தான் மக்கள் அரசு என்பது. அவ்வாறு உழைப்பில் ஈடுபடஅவர்களுக்கு கல்வி கொடுத்து, இடையில் உடல்நலக் குறைவு ஏற்படும் போது அவர்களுக்கு மருத்துவம் கொடுத்து மீண்டும் உழைப்பில் ஈடுபடுத்தும். அனைத்தும் அரசு பொறுப்பில் தான் இருக்கும். சந்தையினை மட்டுமே உயிர்மூச்சாக கொண்ட ஏகாதிபத்திய முதலாளிகள் என்ற பேய்களை நாட்டுக்குள்ளே விடாது இந்த மக்கள் அரசு. பெரும்பான்மை மக்களுக்கான அரசு என்றால் இது தான். இந்த அரசு தான் சிறுபான்மையினரான உழைக்காத கும்பலை ஒரு வழிக்கு கொண்டு வந்து இந்த மனித சமூகத்தையினையே ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டது.

ஆனால் இன்று சிறு கும்பலான பன்னாட்டு நிறுவனங்களை நலனுக்காக கோடான கோடி மக்களை அன்றாடம் வீதியிலே வீசியெறிகின்றனர் அவர்களின் அடியாட்களான ஏகாதிபத்திய தாசர்கள். மக்கள் நல அரசு என்ற போர்வையில் கூசாமல் புளுகி திரிகிறார்கள்.

இவர்கள் தான் இன்று நல்ல மருத்துவம் வேணும்னா என்றால் தனியார் மருத்துவமனைக்கு போகத்தான் வேண்டும் என்ற நிலையினை உருவாக்கிவிட்டு இன்று அரசு மருத்துவமனையிலே பணம் வசூல் பண்ணுகின்றனர். எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி அறிவிக்க முடிகிறது என யோசிக்க தேவையில்லை. மக்களை முன்னரே அதனை ஏற்றுக்கொள்ளும் படி பழக்கிவிட்டார்கள் இந்த அருவருடிகள். எப்படி பழக்குகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணம்.

குடிதண்ணீரை எடுத்துக் கொள்வோம். என்னப்பா "தண்ணீரை கூட தனியார் நிறுவனம் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க" என கேட்டுப்பாருங்க, பதில் என்ன வரும் என்றால் "அரசாங்கத்திற்கே தெரியாததப்பா, நாம என்ன செய்ய முடியும்" என்று. இந்த பதிலுக்கு அரசியல் ரீதியில் அவர்களை அடிமையாக்கிட்டார்கள் என அர்த்தம். அடுத்து "நல்ல தண்ணீர் வேணும் என்றால் பணம் செலவழிச்சுதான் ஆகணும்" என அவர்களை மாதம் ரூ 300 யை ஏற்கும் மனநிலைக்கு கொண்டு வருகிறார்கள். இது பொருளாதார ரீதியில் அவர்களை அடிமையாக்கிட்டார்கள் என அர்த்தம். கடைசியில் "உங்க வீட்டுல கேன் தண்ணீர் இல்லையா?" என கேட்கும் நிலைக்கு அதாவது பண்பாட்டு ரீதியிலே அவர்களை அடிமையாக்கிட்டார்கள்.

இப்படிதான் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் ஒவ்வொரு விஷயத்திலும் அடிமைதனத்தை உருவாக்குகிறது ஆளும் வர்க்கமும், அதன் நிறுவனங்களும். இன்று மருத்துவம் என்பது சேவைக்கானது அல்ல, வணிகம் சம்பந்தப்பட்டது என பெருவாரியாக மாற்றப்பட்டு வருகிறது. செட்டிநாடு மருத்துவ நகரம் என பெரிய தொழிற்சாலை போல மருத்துவத்தை கொண்டு செல்கிறது உலகவங்கி (பன்னாட்டு நிறுவனங்களின் கட்டப்பஞ்சாய்த்துகளில் ஒன்று). இதனை திறந்து வைத்து கொண்டுயிருப்பவர் தற்போது மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகவங்கி ஆபிஸர் கலைஞர்.

அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் அடிமைத்தனத்தை ஸ்டாரங்காக கட்டிவிட்டு வேலை வெகு சுலபமாக தற்போது வீறுநடைபோடுகிறது. ஆனால் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே என்ற கொள்கை முற்றுபெறுவது தவிர்க்க முடியாது. ஏனென்றால் சிலருக்கான ஜனநாயத்தை மட்டும் கொண்டு வெகுநாள் காலம் தள்ள முடியாது என்பதே வரலாற்று உண்மை.

"பணத்தை கொடு இல்லைன்னா வண்டியினை நிறுத்து" - காவல்துறையினர் (எ) அங்கிகரீக்கப்பட்ட ரவுடிகள்

சாலை இருக்குதோ, இல்லையோ ஓரமாக அங்கிகரீக்கப்பட்ட ரவுடிகள் இருக்கின்றனர். இவர்கள் வசூல் செய்வதற்கென்றே பல வழியினை ஏற்படுத்தியிருக்கிறது ஆளும் வர்க்கம். தனது அடியாட்களுக்காக இதை கூட செய்யலைனா எப்படி. அதுல புதுச சேர்த்த வழிதான் "தலைகவசம்".

பல லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் நகரத்தில் ஆயிரம் , இரண்டாயிரம் என பேருந்துகளை விட்டுட்டு அதல பாதி ஓட்ட உடைசல். புதுசா வாங்குற வண்டியும் டீலக்ஸ், ஏ/சி தான். எல்லாம் தனியாரின் லாபவெறிக்கு அதாவது இருசக்கர வாகன விற்பனைக்கு தான். இப்படி கடனுல வண்டியினை வாங்கி 4,000, 5,000 ரூபாய் சம்பளத்துக்கு அலைகின்றது பெரும்பான்மையான சென்னை நகர மக்கள் கூட்டம். வாடகை என்ற பெரிய சுமை, பின் அத்தியாவசிய பொருட்கள் விலை என்ற சுமை, கல்வி, மருத்துவம், என கூடுதலாக வண்டிக்கு மாத தவணை என தலையே சுற்றுகிறது மக்களுக்கு.

இதுல இவனுங்க என்னான்னா ஓரமாக நின்னுக்கிட்டு கையினை போட்டு கொள்ளையிட்டு விடுகிறார்கள். 250, 500 ரூபாய் கொடு என சொல்லும் போது ஏற்கனவே வண்டி மாத தவணையில் இருக்கு விட்டுட்டு போனா கட்டின பணம் போச்சு. கூடவே சட்டப்படி 250, 500 ரூபாய் கொடுக்க முடியாத வயிற்று பிரச்சினை. இறுதியில் கையூட்டாக 50, 100 என அவர்கள் திட்டம் சுலபமாக நிறைவேறுகிறது. சிக்னல்-களில் கேமரா இருக்கு என சொல்லியே கையூட்டு வாங்குவது தான் இதுல சிறப்பு அம்சம். கேமரா இருக்கு என்றால் சட்டபடி வாங்குவார்கள் என்று யோசிப்பது தான் யதார்த்தம். ஆனால் கேமரா இருக்கு என சொல்லி கையூட்டு என்றால் என்ன அர்த்தம், சரியாக வாங்குகின்றனரா என சோதிக்கின்றனர் மேலிடம். வெளிநாட்டு காவல்துறையினர் இதை கேட்டானா வாயினால சிரிக்க மாட்டான்.

மக்களை விட்டு தனியாக இருக்கும் இந்த அரசு உறுப்பாகிய காவல்துறை வெள்ளைக்காரனுக்காக டவுசர் போட்ட படை. மக்களின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டு இருந்தால் இதனை அழித்துவிட்டு மக்கள் படையினை கட்டி இருக்க முடியும். ஆனால் ஆகஸ்ட் 15 என்ற அதிகாரமாற்றத்தை நடத்தி மக்களின் ஆட்சி என "மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எவனும் "சட்டப்படி" என்ற ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிகளுக்கு மட்டுமே சேவை செய்ய முடியும்" என்பதை மூடிமறைத்துவிட்டார்கள்.

Thursday, January 24, 2008

"விவசாயிகள், தொழிலாளிகள் தற்கொலை செய்துகொண்டா நான் என்ன செய்ய முடியும்" - ப.சிதம்பரம்

பங்கு சந்தை என்ற ஊதப்படுகின்ற பலூன் சில நாட்களுக்கு முன் புஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஆன உடன் ( பின்னனியில் இருப்பவர்களும் ஊதியவர்கள்தான்) தொலைக்காட்சியில் தோன்றி ப.சிதம்பரம் அறிவிக்கின்றார் "கவலைபடாதீர்கள்...நிலைமை சரியாகிவிடும்" உடனே ஏற ஆரம்பிக்கின்றது பலூன்.
இத்தனை லட்சம் கோடி, அத்தனை லட்சம் கோடி நஷ்டம் என்கின்றார்கள். நாட்டுல அவனவன் பசி, பட்டினியில் இருக்கும் போது இவனுங்க நஷ்டம் எல்லாம் கோடியில தான்.
ஆனால் பெரிய பணக்காரனாக மாறிய அம்பானி உள்பட எவனுக்கும் சொத்து குறையமாட்டேன் என்கிறது. குறிப்பாக ரிலைன்ஸ் என்றால் லாபம் தான் என்று போட்டா போட்டி தான். பங்கு சந்தை என்ற பலூன் ஊதிய போது அது அரசின் சாதனையாகவே காட்டிய ஆளும் வர்க்கம், புஷ்ஷ்ஷான உடன் அமெரிக்காவின் மீது கையினை நீட்டி தனது உண்மை முகத்தை காட்டுகிறது.

நாட்டில விவசாயி கொத்து கொத்தாக சாகும் போது வராத அமைச்சர் ப.சிதம்பரம் திரையில் தோன்றி விளக்கம் அளிக்கின்றார். பன்னாட்டு நிறுவனத்துக்கே என்றே மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என கரக்டாக ஆளுங்க உருவாவது இந்தியாவின் சாபக்கேடு. அப்படி ஒரு இழிப்பு, ஒரு நயவஞ்சக பார்வை என அருவருடிகளுக்கு என்ற டிஸ்னரி செய்தது போல தோற்றம்.

இவர்கள் போன்ற நேரடியான ஆளும் வர்க்க பிரதிநிதியினை அம்பலபடுத்தும் போது போலிகளையும் திரும்ப திரும்ப சொல்லவேண்டி உள்ளது. பின்வருமாறு போலிக் கம்யூனிஸ்டுகள் யோக்கியதை பற்றி இரண்டு வரிகள் சொல்லி முடிக்கலாம்.

இவர்கள் ஆளும் மாநிலத்திலேயே இந்த மக்கள் விரோத கொள்கையினை அறிவிப்புகளோடு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மத்தியில் petrol விலை ஏறும்போது, 123க்கான வேலை நடக்கும் போது எதிர்ப்பு தெரிவிப்போம், வாக்கெடுப்பு கூட வேணாம் என தாங்கி நிற்பார்கள்.

"இது வெறும் அரட்டை மரம் தான்"- ஆவுடையப்பன்

சட்டசபையில் முல்லை பெரியார் அணை நீர்தேக்கத்தை 142 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என எதிர்கட்சி கேள்வி கேட்கும் போது சில விளக்கங்களை கொடுத்துவிட்டு இறுதியில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இது குறித்து மேலும் விவாதிக்க முடியாது என சபாநாயகர் அறிவித்து விட்டார்.(அதிமுக என்றால் சில விளக்கங்கள் கூட தரப்பட மாட்டாது. தனி நபர் பாசிஸ்ட் இயக்கம் யாச்சே)

உங்க சட்டப்படி கொடுத்த தீர்ப்பை ஒரு மாநிலம் அமுல்செய்ய மறுக்கிறது என்றால் வரும் பதில் இப்படி. மக்கள் பிரதிநிதி என செல்லும் இங்கே நடப்பது வெற்று பேச்சுகள் மட்டும்தான் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். நீதிமன்றத்தைவிட நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புதான் உயர்ந்தது என்பது வெளியில மட்டும் சொல்லுவாங்க.

Tuesday, January 22, 2008

"முதலாளிகளை பாதுகாக்க அணுஆயுதம் தேவைதான்" - கலாம் அறிவிப்பு

அமெரிக்காவுடன் செய்து கொள்ள வேலைகள் நடந்துவரும் அடிமை சாசனமான அணு ஆயுத ஒப்பந்தத்தை நாட்டு நலனுக்கு நல்லது என அறிவித்தவர்தான் இந்த கோமாளி கலாம். இன்று அணு ஆயுதம் தேவை என்று சொல்கின்றார். ஏனுங்க, நாட்டில இருக்கின்ற பொதுத்துறை, நிறுவனங்கள் என அனைத்தும் தனியார் (தரகு) முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஏறைக்குறைய மாற்றப்பட்டு விட்டது.
.
இது இவனுக்கு சொந்தம், அது அவனுக்கு சொந்தம் என்கின்றனர், ஆனா நாடு மட்டும் இந்தியனுக்காக என்று மக்கள் யோசிக்கமாட்டானுங்க என்ற தைரியத்தில் கலாம் உள்பட ஏகாதிபத்திய அடிமைகள் அனைவரும் கருதுகின்றனர். ஆனால் அப்படி கேள்வி கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

மாடுகளை கொன்றதற்கு சஸ்பெண்டு என்றால், மக்களை கொன்றதற்கு என்ன தண்டனை?

ராமேஸ்வர கோவிலில் 24 மாடுகளை பட்டினி போட்டு கொன்றவர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அப்படியானால் 1.5 லட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்த ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

11 பேரை தண்டிக்க 5 ஆண்டுகள் என்றால் மோடி உள்பட ஆயிரக்கணக்கானவர்களை தண்டிக்க !

2002 குஜராதில் பாப்பன பாசிஸ்டுகள் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையில் 2500க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான நபர்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3000 பேர். இதில் இன்று சிறையில் இருப்பவர்கள் 100 -150 பேர்தான். மீதி அனைவரும் போலீஸ் மற்றும் நீதிதுறையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்களால் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இப்போது அதில் பில்கிசு பானு என்ற கர்ப்பினி பெணை பலாத்காரம் செய்து, 8 பேர்களை கொலை செய்த பாசிஸ்டுகள் 11 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்ட காவலர் சோமாபாய் கோரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்திகூட பெரும்பாலான பத்திரிக்கையில் முழுமையாக இல்லாமல், எங்கோ ஒரு பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். தெகல்ஹா வெளியிட்ட வீடியோ காட்சிகளுடன் கூடிய பாப்பன பாசிஸ்டுகளின் ஒப்புதல் வாக்குமூலத்தையே முடிமறைத்த ஊடகங்கள் ஆயிற்றே!

சரி இந்திய நீதித்துறையில் 11 பேரை தண்டிக்கவே 5 ஆண்டுகள் எனில் குற்றமே சாட்டபடாமல் வெளியில் திரிந்து கொண்டு இருக்கின்றன மீதி ஆயிரக்கானக்கவர்களுக்கு....குறிப்பாக பாசிஸ்டுகளின் தலைவன் மோடிக்கு எப்ப தண்டனை கிடைக்கும்.

இதனை இந்திய நீதிமன்றங்களால் கொடுக்க முடியாது. அதற்கு தேவை மக்கள் மன்றங்கள் தான்.

Monday, January 21, 2008

"பார்ப்பன பாசிஸ்ட் தானுங்க நானு" - ஜெயலலிதா

அன்றாடம் மகராஷ்டிரம், உத்திர பிரதேசம், ஆந்திரா உள்பட நாடெங்கும் விவசாயிகள் பசிபட்டினியால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். ஆமா, 1 லட்சம் விவசாயிகள் மேல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று ஆளும் வர்க்கமே ஒத்துக்கொண்ட இந்திய நாட்டில் வாயில்லாத ஜீவன்களான மாடுகளை பட்டினி போட்டு சாகடித்துவிட்டது என்பது பெரிய பாவச்செயல் என கொக்கரிக்கிறது பாசிஸ்ட் பாப்பாத்தி.

  • இணைப்புகள்

  •