Saturday, March 22, 2008

போயஸ் கார்டனிலிருந்து கோபாலபுரத்துக்கு போகும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் ரவுடிகளின் அடியாள் ஜோதி!

சென்னை: ஜெயலலிதா மீது திமுக அரசு தொடர்ந்த வழக்குகள் பொய் வழக்குகள், பழிவாங்கும் நடவடிக்கை என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய அடுத்த சில நாட்களிலேயே, ராஜ்யசபா சீட் கிடைக்காததால், அதிமுகவிலிருந்து விலகிய வழக்கறிஞர் என்.ஜோதி, நேற்று தடாலடியாக திமுகவில் இணைந்தார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ஜோதி. ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் வழக்குகளை இவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.இவருடைய திறமையை மதித்து, ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாகவும் ஜோதியை ஆக்கினார். ஆனால் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் ஜோதிக்கு சீட் தரவில்லை. இதனால் கோபமடைந்த ஜோதி, திடீரென அதிமுகவிலிருந்து விலகினார்.
அதிமுக தொடர்பான வழக்குகளை இனிமேல் பார்க்கவும் மாட்டேன் என்றும் அறிவித்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, நம்பிக்கைத் துரோகி என்று வர்ணித்து ஜோதியை கடுமையாக சாடி அறிக்கை விட்டார். அவரை கட்சியை விட்டும் நீக்கினார்.இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதி, ஜெயலலிதா, சசிகலாவின் பிடியில் இருப்பதாக பேட்டி அளித்தார். மேலும், ஜெயலலிதா மீதான வழக்குகள் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, அனைத்தும் பொய் வழக்குகள் என்ற எனது கருத்தில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தடாலடியாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கனிமொழி, மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.

கேள்வி - திறமையான வழக்கறிஞரான ஜோதியை, திமுக எந்தவிதத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது?
கருணாநிதி - பொறுத்திருந்து பாருங்கள்.

Sunday, February 24, 2008

"மக்களை கொன்றால் சிறப்பு காவல், மக்களுக்காக போராடினால் சிறப்பு அதிரடிப்படை" - இந்திய ஓட்டுப்பொறுக்கி ஜனநாயகம்


பீகாரில் கொலைகுற்றவாளியாக சந்தேகித்த ஒருவரை காவல் நிலையத்திலிருந்து இழுத்து வந்து அடித்து கொன்று உள்ளார்கள் எதிர்தரப்பினர். இதற்கு காவல் துறை பலத்தகாவல். இதற்கு முன் பலமுறை இது போன்ற சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இதுவும் நிகழ்ந்துயுள்ளது.

இதனை பின்புலமாக கொண்டு இந்திய ஜனநாயகத்தின் மற்றோரு முகத்தை கொஞ்சம் ஆராய்வோம்.

மக்கள் விரோதிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிலவுடைமை பண்ணைகளுக்கும் சேவை செய்வதற்காகவே இந்திய அரசை 1947ல் உருவாக்கினர். ஆனால் மக்கள் நலனுக்கானது 'இந்திய அரசு' என்ற கருத்து உருவாக்கப்பட்டு ஓட்டுபொறுக்கிகளாலும், கல்வி & மதம் போன்ற நிறுவனங்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதும், இந்து பயங்கரவாத அமைப்புகளும் வெகுவிரைவாகவும் - வெளிப்படையாகவும் வளர்ந்து வருகிறது. சமீபத்திய உதாரணங்களான 123 அடிமைசாசனமும், ராமன் பால புரட்டையும் நாம் பார்க்கலாம்.

123 ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்றும் பணி போலிக்கம்யூனிஸ்டுகளின் பலத்த ஆதரவுகளுடன் நடைபெற்றுவருகிறது. பாஜக இதனை ஆரம்பித்தது முதல் திமுக கனிமொழி, ராமதாஸ் வரை அனைவரின் கரகோஷ ஆதரவோடு நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வெளிப்படையாகவே 123 நாட்டுக்கு நலன்பயக்கும் என்று இந்த கயவர் கூட்டம் சொல்லுவதை விட "மறுகாலனியாக்கத்துக்கு இந்திய அரசு பீடுநடை போடுவதற்கு" சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இதே போல சேது கால்வாய் திட்டத்தை ஆரம்பித்த பாஜக & அதிமுக பார்ப்பன கும்பல் இன்று ராமன் பால புராண புரட்டை கொண்டு அரசியல் செய்து வருவதும் அதற்கு நீதிமன்றம் அங்கிகாரம் தருவதும் வெள்ளிடைமலை. மேலும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்ததை 'தெகல்கா' என்ற இதழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் அது குறித்து எந்த நடவடிக்கைகளும் இல்லை. இவையெல்லாம் இந்து பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சியினையே காட்டுகிறது.

மேலும் இன்று 'ராஜ் தாக்ரே' என்ற பார்ப்பன பாசிஸ்ட் மக்கள் பிரச்சனையினை திசைதிருப்பி ஆதாயம் அடையும் நோக்கத்தோடு வேற்று மாநிலத்துகார்கள் வருகையினால் தான் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லி தனது குண்டர் படையினர் மூலம் மக்களை அடிக்கிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் அடிப்படையிலேயே மக்கள் நலனுக்கான எதையும் இந்த அரசின் மூலம் பெற முடியாது என்பதை மக்களுக்காக போராடும் அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறு சோனியா, அத்வானி, மோடி, ராஜ்தாக்ரே, கலைஞர், ஜெ, ராமதாஸ்.................... போன்ற அனைத்து மக்கள் விரோதிகளும் Z பிரிவு உள்பட பலத்த பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

இவர்களால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கான போராடுபவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கம் 'சிறப்பு அதிரடிபடை'யும், அதற்கு கோடிக்கணக்கான பணமும் செலவுசெய்து வருகிறது.

"நாளை முதல் அரட்டைமடம் கூடுகிறது" - பன்றி தொழுவம் அறிவிப்பு


நாட்டின் 70 % மக்களின் தினசரி வருமானம் ரூ 20,
20% மக்களின் தினசரி வருமானம் ரூ 9,
10 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை,
மனிதவள மேம்பாட்டில் உலகில் இந்தியாவிற்கு 128வது இடம்,

--இவையெல்லாம் மக்களை 60 ஆண்டுகளாக ஏய்த்து வரும் ஓட்டுபொறுக்கிகளின் சாதனைகள் & பாராளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதைகளில் சில.

இந்த சாதனைகளை நிறைவேற்ற கூட லஞ்சம் பெற்ற (கேள்வி கேட்க) ஓட்டுபொறுக்கிகள் என்பதால் "இவர்கள் பற்றி மேலும் கூறி மலத்தை நோண்ட வேண்டாம்" என இத்துடன் முடித்துக்கொள்வோம்.

"உண்மையான மக்கள் நீதி மன்றங்கள்"

மக்கள் நீதி மன்றங்கள் என்ற பெயரில் சமரச நீதிமன்றங்களை நீதித்துறை தற்போது செயல்படுத்தி வருகிறது. இதன் அடைப்படையில் தஞ்சையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள் என கூறப்படுகிறது.

மக்களிடையே உள்ள செக் மோசடி, வாடகை பிரச்சனை உள்பட்ட வழக்கினை ஏற்று கொண்டு சமரசம் செய்து வைப்பது தான் இதன் பணியாகும்.

ஆனால் உண்மையான "மக்கள் நீதிமன்றம்" என்பது இதுவல்ல.
நாளை பெரும்பாண்மை மக்கள் ஆட்சி இந்தியாவில் மலரும் போது, இதுவரை நாட்டை சீரழித்த ஓட்டுபொறுக்கிகளையும், குஜராத் படுகொலை போன்றவற்றை செய்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் காலிகளையும் பிடித்து அவர்களுக்கு மக்களே நேரடியாக விசாரனைசெய்து தண்டனை தருவது தான் உண்மையான மக்கள் நீதிமன்றம்.

அன்று சங்கர ராமனை கொலை செய்த "கொலைகாரன் காஞ்சி ஜெயந்திரன்", சொத்து குவிப்பு வழக்கில் "பாப்பாத்தி ஜெயலலிதா" போன்றவர்கள் தற்போது போல 'பெயிலில்' சுதந்திரமான நடமாட முடியாது.

"ஒடுக்குபவனும், ஒடுக்கபடுவனும் இரட்டை குழந்தைகள்" - ராமதாஸ் & திருமா அறிவிப்பு

'முத்துராமலிங்க தேவர்' என்ற சாதிவெறியனுக்கு 'அரசு விடுமுறை' அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியும், வன்னியர்களுடன் தமிழ் பாதுகாப்பு என்று கூட்டனி அமைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை பாதுகாக்கும் திருமா தற்போது வன்னியர்களும் நாங்களும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என கோஷம் போடுகிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை இந்த 'சந்தர்ப்பவாதி' மூலம் பெற முடியும் என யோசிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதே திருமாவின் அறிவிப்புகள், செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

பண்ணையார் வாசன்.


மக்களை கேவலமான பார்த்து சிரிக்கும் இந்த பண்ணையின் பெயர் ஜி.கே வாசன்.

மூப்பனார் என்ற நிலப்பிரபுவின் மகனான இவர்,நிலவுடைமையாளர்களின் நலனுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இன்று தேர்தலில் நிற்காமல் எம்.பி பதவியும், அமைச்சர் பதவியும் வாங்கி கொண்டவர்.


"முதலாளிகளும், அவர்களின் அடியாள் அரசாகிய நாங்களும் யாரையும் வேலையிலிருந்து நீக்கலாம்" - வேதாந்தி மன்றம்

ஊழியரைகளை அரசாங்கமும் சரி, தொழிலதிபர்களும் சரி எப்ப வேணாலும் வேலையிலிருந்து நீக்கலாம் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது . இதன் மூலம் பெரும்பாண்மை உழைக்கும் மக்களின் எதிரியான சிறுபாண்மை முதலாளிகளையும், அவர்களின் அரசையும்( ஒரு வர்க்கத்தின் ஒடுக்குமுறை கல்வி) வெளிப்படையாக நியாப்படுத்தி உள்ளார்கள்.

நீதித்துறை மீது சிறிதளவு நம்பிக்கை உள்ளவர்களையும் முகத்தில் அறைந்து, வெளிப்படையாக சொல்கிறது "நாங்களும் முதலாளி வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவிதான்" என்று.

  • இணைப்புகள்

  •