Thursday, June 5, 2008

பெட்ரோல் விலையேற்றம் : சொரணையே இல்லையாட நமக்கு!!


விலைவாசி மிக கடுமையாக உயர்ந்த பின்னும் மீண்டும் பெட்ரோல் விலையினை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலையினை ரூ3ம், சிலிண்டருக்கு ரூ50ம் விலை ஏற்றி அறிவித்து உள்ளது மத்திய அரசு.

இதனை அரங்கேற்றிய எல்லா ஓட்டுப்பொறுக்கி நாய்களையும் - கிழித்து எறிவதற்கு முன்னர், பெட்ரோல் விலை ரகசியம் - இதனை ஏற்றவேண்டி இவர்கள் கூறிய காரணத்தோட யோக்கியதைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை பிரச்சாரமாக எடுத்து சென்றால் தான் இந்த நாய்களை அம்பலப்படுத்த முடியும்.

1.
பெட்ரோல் விலை (தற்போதைய விலை) - ரூ 49.61 (இது சாதங்க, சூப்பர் ரூ53 அதுவே ஷெல்ல ரூ58)
இதுல சுங்கவரி, கலால் வரி, விற்பனை வரி, கல்வி (!) வரி என மத்திய - மாநில அரசுகள் பிடுங்குவது ரூ28
அதாவது 1 லிட்டருக்கு 57% வரி.
இதனை கழித்துவிட்டு பார்த்தால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 21 தான்.

2.
கச்சா எண்ணெய் மொத்த தேவையில் 30 % நமது நாட்டில் கிடைக்கிறது.
இதையும் இறக்குமதி செய்யப்படும் 70 % கச்சா எண்ணெய்க்கு ஈடாக வரியினை போடுகிறார்கள் இந்த மோசடி வியாபார ஓட்டுப்பொறுக்கிகள்.

3.
அடுத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு யார்- யார் ஈடுபடுறானுங்க பார்த்தோமானால்,
நமது நாட்டில் உள்ள 19 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 18 அரசு வசமும், ஒன்று திருட்டு அம்பானி வசமும் உள்ளது. ஆனால் 18 ஆலை வச்சிருக்கிற அரசு உற்பத்தி திறன் 74%, ஒத்த திருட்டு அம்பானி ஆலையின் உற்பத்தி திறன் 26%. இந்த அயோக்கியத்தனத்தை போல பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனில் அம்பானியின் ஆலை 59% ஆக உள்ளது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப்
பாசத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

4.
இவ்வாறு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் 2004-2005 ஆம் ஆண்டில் அரசுக்கு கிடைத்த வருமானம் 1,20,946 கோடி.
ஆனால் இவனுங்க 2005-2006 ஆம் ஆண்டில் மண்ணெண்ணெய்க்கும் சமையல் எரிவாயுக்கும் கொடுத்த மானியமோ 2,535 கோடி ரூபாய் தான்.

இப்படி வரியினை போட்டு கொள்ளையடிக்கும் அரசு எங்க எண்ணெய் ஆலைகளுக்கு நஷ்டம் என கதை விடுகிறது. ஆனால் இது பெரிய பித்தலாட்டம். இதனை தோலுரிக்காமல் நேற்று நமட்டு சிரிப்புடன் விலையேற்றத்தை நியாயப்படுத்திய மண்மோகன் அடிமை போன்றவற்றை முச்சந்தியில் நிறுத்த முடியாது.

இவனுங்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டுமானம், ராணுவ தளவாடங்கள் போன்றவற்றுக்காகவே தாக்கல் செய்கின்ற பட்ஜெட் என்ற மோசடியில் வருமானத்துக்கு வரி போடுவது, பொதுத்துறையினை விற்பது என்பதை மட்டுமே வழக்கமாக கொண்டு இருக்குறானுங்க. இந்த வரி விதிப்பில் பெரும்பங்கு பெட்ரோலிய பொருட்களின் மீது போடுவது.

இப்ப தெரியுதா, மேலே உள்ள உண்மை நிலையினை இவன் ஏன் மறைத்து நட்ட கணக்கு காட்டுகிறான் என்று. வரியினை போட்டாதான் தங்க நாற்கர சாலையும், ராக்கெட்டையும் விட முடியும். ஒரு வரியில் சொல்லனும்னா "நம்ம வீட்டை கொளுத்திவிட்டு அதுல குளுரு காய்றானுங்க".

இந்த விலையேற்றத்தை எதிர்ப்பது போல போராட்டத்தை அறிவிக்கும் பாஜக, சிபிஎம் - எந்த அருகதையும் இல்லை. இதே பாஜக ஆட்சியும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல் விலையினை ஏற்றியவர்கள் தான். 123 ஒப்பந்தத்திற்கு ஆரம்ப சுழி போட்டவன், தற்போதைய மறுகாலனிய கொள்யினை அச்சு அசலாக பின்பற்றியவர்கள். ஆட்கள் தான் மாறுகின்றனர் கொள்கை அதே தான் இந்திய திருநாட்டில்.

அடுத்து சிபிஎம் -சொல்லவே தேவையில்லை இவனுங்க ஆதரவுடன் தான் 4 ஆண்டு கொள்ளையே நடக்குது. 123 இருந்து இந்த விலையேற்றம் வரை "மக்களை திரட்டி போராடுவோம்" என்று கூறி கொண்டே ஆட்சிக்கு முட்டு கொடுத்து மக்களை கொலை செய்து வருகின்றனர். இதைவிட மக்களை கேவலப்படுத்த முடியாது.

அடுத்து திமுக, ராமதாஸ் போன்ற ஓட்டுப்பொறுக்கிகள். இந்த மதவெறி எதிரான ஆட்சியின் காவலர்கள் தான் போன பாஜக ஆட்சியின் குஜராத் படுகொலைகளையும், மறுகாலனியாதிக்க கொள்ளைகளையும் முழுக்க ஆதரத்து குளிர் காய்ந்த நாதாரிகள் என்பது சிபிஎம் போலிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மக்களாகிய நாமும் இதனை நம்பி இருப்பதை எந்த வகையில நியாயப்படுத்த முடியும்.


எல்லாவற்றையும் உடன் இருந்து அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்துவிட்டு நாட்டில் இதனை விட முக்கிய பிரச்சனை இருப்பது போல திரிகிறார் ஐபிஎல் ரசிகர் கலைஞர். மேலும் தனது 50 ஆண்டுகால இது போன்ற சாதனைகளுக்காக வரலாறு காணாத வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகிறார் நம்ம தமிழின தலைவர். இந்த காரியவாத தலைவரின் சொத்து இன்று பல்லாயிரக்கணக்கான கோடி .

அப்பறம் ராமதாசு, தனது மகன் அங்க ஒப்புதல் கொடுப்பார் - இவரு தீவிர மக்கள் நலன் விரும்பி போல அறிக்கை விடுவார். இந்த ஓட்டுப்பொறுக்கியும் பாஜக காலத்துல இருந்து மத்திய அமைச்சரவையில இருக்கு. 123 யினை ஆதரிக்கும் அடிமை. இந்த கவர்ச்சிவாத தலைவரின் சொத்து இன்று ஆயிரக்கணக்கான கோடி.

அடுத்து மக்கள் விலைவாசியில கஷ்டப்படுவதை தாங்காமல் உதகையில் இருந்து அறிக்கை விடும் நம்ம ஜெயலலிதா அம்மா. இது காலத்து வரலாற்றை கூற வேண்டிய தேவையில்லை என்பதால் இத்துடன் முடிக்கலாம்.

இந்த விலையேற்றத்தை தொடர்ந்து நாளை அனைத்து பொருட்களும் மீண்டும் விலையேற போகிறது.

ஆக மொத்தத்தில் காசு இல்லாதவனை பார்த்து சாங்கடா என்கிறது அரசு. ஆனால் நாம் மவுனம் காத்து கொண்டுயிருக்கிறோம். இது நமக்கு நாமே சவக்குழியினை தோண்டிக் கொள்வதை போலத்தான். இதனைவிடுத்து மவுனத்தை உடைத்தெறிந்து வீதியில் இறங்கி போராடுவது தான் அத்தனை பிரச்சனைகளையும் தீரக்க முடியும்.

இந்த பதிவினை கிரகிக்க நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வி தான் பதிவின் தலைப்பு - "சொரணையே இல்லையா நமக்கு".

Tuesday, May 6, 2008

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - போலிக் கம்யூனிஸ்ட்கள்



டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை '30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்' தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.


தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.


தற்போது அம்மணமான பின்னும் நாங்கள் மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் என தொடர்ந்து அறிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை சேர்ந்த பெண்களை ஓட்டுப் போட மறுத்த காரணத்தால் நிர்வாணப்படுத்தி ஓட விட்டு உள்ளனர் இந்த பாசிஸ்டுகள்.


இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.

மேற்கு வங்கத்தின் 'மின்வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள் மாற்று சங்கம் அமைத்து போராடியதை' மக்கள் கூடும் இடத்தில் சிஐடியு குண்டர் படை சென்று தாக்கி ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

முக்கிய இடத்தில் மக்கள் முன்னிலையில் இவ்வாறு என்றால் நந்திகிராமில் கேட்கவே தேவையில்லை. இதனை மறுப்பவர்கள் நந்திகிராமில் நடத்திய பாசிசத்தை மறுப்பதில் வியப்பில்லை.

இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை, 'மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் உண்மையான எதிரிகளை' புரட்சிகர சக்திகள் இனம் காட்ட முடியாது

Sunday, May 4, 2008

இந்தியர்கள் வாயினால் சாப்பிடக் கூடாது - உலக பயங்கரவாதி புஷ் எச்சரிக்கை!

ஏழை எளிய நாடுகள் முழுவதும் இன்று விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக அந்நாடுகளில் உணவு உற்பத்தி திருப்பிவிடப்பட்டது, ஊக வணிகம் என்ற பெயரில் உணவில் சூதாடிகளை நுழைத்தது என பல காரணங்கள்.

இந்தியாவில் உணவு உற்பத்தி, கொள்முதல், விற்பனை என அனைத்திலும் இருந்து அரசு தன்னை விடுவித்து கொண்டு அதனை பன்னாட்டு நிறுவனங்களிடமும் தரகு முதலாளிகளிடமும் ஒப்படைத்தது காரணம்.

இதனை எந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களும் சொல்வதில்லை. ஏனென்றால் இதனை அரங்கேற்றியதில் "அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளுக்கும் குறிப்பாக 4 ஆண்டுகளாக காங்கிரஸ் துரோகிகளை ஆதரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும்" முழு பங்கு உண்டு.

இன்று உலக நாடுகளை சூறையாடும் உலகப்போலீஸ்காரனும், அமெரிக்காவின் தலைவனும் ஆன புஷ் அறிவிக்கிறான் "விலைவாசி உயர்வுக்கு இத்திய மக்கள் அதிகம் சாப்பிடுவதே" காரணம் என்று.

இலவசமாக உணவு பொருக்களை இந்தியர்கள் பெறுவது போல சித்தரிக்கும் இந்த பயங்கரவாதி தான் 'பயோ ப்யூல்' காக ஏழை எளிய நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் விவசாயத்தை உணவு உற்பத்தியிலிருந்து விலகி காட்டாமணக்கு போன்றவற்றை பயிரிட வைத்தவன்.

விலைவாசி உயர்வுக்கு காரணமான தனியார்மயம், ஊகவணிகம் என அனைத்தையும் இத்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்ற காரணமானவனே இவனுடைய அமெரிக்கா தான். அங்குள்ள ஆக பெரும்பாண்மையான பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக தான்.

புஷ் சொல்லும் இதைதான் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளும் முன்னர் சொன்னது, "தேவை அதிகரித்ததே" என்று. அதனை வெளிப்படையாக "அதிகம் திண்ணுகின்றனர்" என புஷ் அறிவிக்கிறான் இன்று.

புஷ்யை கண்டிக்கும் அருகதை இந்திய ஓட்டுப்பொறுக்கிகளுக்கு இல்லை என்பதே இதிலிருந்து தெரிவது.

Saturday, March 22, 2008

போயஸ் கார்டனிலிருந்து கோபாலபுரத்துக்கு போகும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் ரவுடிகளின் அடியாள் ஜோதி!

சென்னை: ஜெயலலிதா மீது திமுக அரசு தொடர்ந்த வழக்குகள் பொய் வழக்குகள், பழிவாங்கும் நடவடிக்கை என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய அடுத்த சில நாட்களிலேயே, ராஜ்யசபா சீட் கிடைக்காததால், அதிமுகவிலிருந்து விலகிய வழக்கறிஞர் என்.ஜோதி, நேற்று தடாலடியாக திமுகவில் இணைந்தார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ஜோதி. ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் வழக்குகளை இவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.இவருடைய திறமையை மதித்து, ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாகவும் ஜோதியை ஆக்கினார். ஆனால் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் ஜோதிக்கு சீட் தரவில்லை. இதனால் கோபமடைந்த ஜோதி, திடீரென அதிமுகவிலிருந்து விலகினார்.
அதிமுக தொடர்பான வழக்குகளை இனிமேல் பார்க்கவும் மாட்டேன் என்றும் அறிவித்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, நம்பிக்கைத் துரோகி என்று வர்ணித்து ஜோதியை கடுமையாக சாடி அறிக்கை விட்டார். அவரை கட்சியை விட்டும் நீக்கினார்.இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதி, ஜெயலலிதா, சசிகலாவின் பிடியில் இருப்பதாக பேட்டி அளித்தார். மேலும், ஜெயலலிதா மீதான வழக்குகள் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, அனைத்தும் பொய் வழக்குகள் என்ற எனது கருத்தில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தடாலடியாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கனிமொழி, மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.

கேள்வி - திறமையான வழக்கறிஞரான ஜோதியை, திமுக எந்தவிதத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது?
கருணாநிதி - பொறுத்திருந்து பாருங்கள்.

Sunday, February 24, 2008

"மக்களை கொன்றால் சிறப்பு காவல், மக்களுக்காக போராடினால் சிறப்பு அதிரடிப்படை" - இந்திய ஓட்டுப்பொறுக்கி ஜனநாயகம்


பீகாரில் கொலைகுற்றவாளியாக சந்தேகித்த ஒருவரை காவல் நிலையத்திலிருந்து இழுத்து வந்து அடித்து கொன்று உள்ளார்கள் எதிர்தரப்பினர். இதற்கு காவல் துறை பலத்தகாவல். இதற்கு முன் பலமுறை இது போன்ற சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இதுவும் நிகழ்ந்துயுள்ளது.

இதனை பின்புலமாக கொண்டு இந்திய ஜனநாயகத்தின் மற்றோரு முகத்தை கொஞ்சம் ஆராய்வோம்.

மக்கள் விரோதிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிலவுடைமை பண்ணைகளுக்கும் சேவை செய்வதற்காகவே இந்திய அரசை 1947ல் உருவாக்கினர். ஆனால் மக்கள் நலனுக்கானது 'இந்திய அரசு' என்ற கருத்து உருவாக்கப்பட்டு ஓட்டுபொறுக்கிகளாலும், கல்வி & மதம் போன்ற நிறுவனங்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதும், இந்து பயங்கரவாத அமைப்புகளும் வெகுவிரைவாகவும் - வெளிப்படையாகவும் வளர்ந்து வருகிறது. சமீபத்திய உதாரணங்களான 123 அடிமைசாசனமும், ராமன் பால புரட்டையும் நாம் பார்க்கலாம்.

123 ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்றும் பணி போலிக்கம்யூனிஸ்டுகளின் பலத்த ஆதரவுகளுடன் நடைபெற்றுவருகிறது. பாஜக இதனை ஆரம்பித்தது முதல் திமுக கனிமொழி, ராமதாஸ் வரை அனைவரின் கரகோஷ ஆதரவோடு நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வெளிப்படையாகவே 123 நாட்டுக்கு நலன்பயக்கும் என்று இந்த கயவர் கூட்டம் சொல்லுவதை விட "மறுகாலனியாக்கத்துக்கு இந்திய அரசு பீடுநடை போடுவதற்கு" சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இதே போல சேது கால்வாய் திட்டத்தை ஆரம்பித்த பாஜக & அதிமுக பார்ப்பன கும்பல் இன்று ராமன் பால புராண புரட்டை கொண்டு அரசியல் செய்து வருவதும் அதற்கு நீதிமன்றம் அங்கிகாரம் தருவதும் வெள்ளிடைமலை. மேலும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்ததை 'தெகல்கா' என்ற இதழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் அது குறித்து எந்த நடவடிக்கைகளும் இல்லை. இவையெல்லாம் இந்து பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சியினையே காட்டுகிறது.

மேலும் இன்று 'ராஜ் தாக்ரே' என்ற பார்ப்பன பாசிஸ்ட் மக்கள் பிரச்சனையினை திசைதிருப்பி ஆதாயம் அடையும் நோக்கத்தோடு வேற்று மாநிலத்துகார்கள் வருகையினால் தான் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லி தனது குண்டர் படையினர் மூலம் மக்களை அடிக்கிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் அடிப்படையிலேயே மக்கள் நலனுக்கான எதையும் இந்த அரசின் மூலம் பெற முடியாது என்பதை மக்களுக்காக போராடும் அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறு சோனியா, அத்வானி, மோடி, ராஜ்தாக்ரே, கலைஞர், ஜெ, ராமதாஸ்.................... போன்ற அனைத்து மக்கள் விரோதிகளும் Z பிரிவு உள்பட பலத்த பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

இவர்களால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கான போராடுபவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கம் 'சிறப்பு அதிரடிபடை'யும், அதற்கு கோடிக்கணக்கான பணமும் செலவுசெய்து வருகிறது.

"நாளை முதல் அரட்டைமடம் கூடுகிறது" - பன்றி தொழுவம் அறிவிப்பு


நாட்டின் 70 % மக்களின் தினசரி வருமானம் ரூ 20,
20% மக்களின் தினசரி வருமானம் ரூ 9,
10 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை,
மனிதவள மேம்பாட்டில் உலகில் இந்தியாவிற்கு 128வது இடம்,

--இவையெல்லாம் மக்களை 60 ஆண்டுகளாக ஏய்த்து வரும் ஓட்டுபொறுக்கிகளின் சாதனைகள் & பாராளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதைகளில் சில.

இந்த சாதனைகளை நிறைவேற்ற கூட லஞ்சம் பெற்ற (கேள்வி கேட்க) ஓட்டுபொறுக்கிகள் என்பதால் "இவர்கள் பற்றி மேலும் கூறி மலத்தை நோண்ட வேண்டாம்" என இத்துடன் முடித்துக்கொள்வோம்.

"உண்மையான மக்கள் நீதி மன்றங்கள்"

மக்கள் நீதி மன்றங்கள் என்ற பெயரில் சமரச நீதிமன்றங்களை நீதித்துறை தற்போது செயல்படுத்தி வருகிறது. இதன் அடைப்படையில் தஞ்சையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள் என கூறப்படுகிறது.

மக்களிடையே உள்ள செக் மோசடி, வாடகை பிரச்சனை உள்பட்ட வழக்கினை ஏற்று கொண்டு சமரசம் செய்து வைப்பது தான் இதன் பணியாகும்.

ஆனால் உண்மையான "மக்கள் நீதிமன்றம்" என்பது இதுவல்ல.
நாளை பெரும்பாண்மை மக்கள் ஆட்சி இந்தியாவில் மலரும் போது, இதுவரை நாட்டை சீரழித்த ஓட்டுபொறுக்கிகளையும், குஜராத் படுகொலை போன்றவற்றை செய்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் காலிகளையும் பிடித்து அவர்களுக்கு மக்களே நேரடியாக விசாரனைசெய்து தண்டனை தருவது தான் உண்மையான மக்கள் நீதிமன்றம்.

அன்று சங்கர ராமனை கொலை செய்த "கொலைகாரன் காஞ்சி ஜெயந்திரன்", சொத்து குவிப்பு வழக்கில் "பாப்பாத்தி ஜெயலலிதா" போன்றவர்கள் தற்போது போல 'பெயிலில்' சுதந்திரமான நடமாட முடியாது.

  • இணைப்புகள்

  •