Saturday, January 26, 2008

"மக்கள் நலனுக்கு எதிரான உண்மையான பாசிஸ்ட் நாங்க தான்"- எம்ஜிஆர் வாரிசுகளுக்குள் மோதல்

எம்ஜிஆர் வாரிசு யாரு என ஜெ, விசயகாந்த், சரத் போன்ற சினிமா கழிசடையிலிருந்து வந்தவர்களுக்குள் தீவிரமாக விவாதம் நடைபெற்றுவருகிறது. வாரிசாக கொண்டாடபடும் அளவுக்கு என்ன கிழித்தார் எம்ஜிஆர் என மக்கள் யோசிக்கும் முன் இவனுங்களாகவே 'எம்ஜிஆர் வாரிசு நாங்கள் தான்' என பீதியை கிளப்பி தாங்களும் பதவியினை சுவைக்கலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறார்கள். மூவரையும் பற்றி சிறிய Introduction.


ஜெ- 'தான் ஒரு பாப்பாத்தி' என அறிவித்துகொண்டு மோடியின் தீவிர ஆதரவாளர், புதிய பொருளாதார கொள்கையினை (உலக வங்கி ஆணையினை) ஏற்றுக் கொள்பவர். நடைமுறைப்படுத்தியவர். கோடிக்கணக்கான சொத்துகளை வாரி குவித்தவர். பெரியார் பிறந்த மண்ணில் திராவிட கட்சி தலைமைக்கு வந்த 'பாப்பாத்தி' என்றால் இவர் சாதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


விசயகாந்த் - 20 ஆண்டு காலமாக சினிமா கழிசடையில் ஊறி கொழுத்து திரிந்துவிட்டு திடுதிடுவென எழுந்து வந்து நான் கறுப்பு எம்ஜிஆர் என சொல்கிறார். காவி புழுதி உடல் முழுவதும். கட்சி ஆரம்பிக்கும் போது, பின்னரும் திருப்பதி போய் கும்பிட்ட திராவிட கொழுந்து. தனது கட்சி பெயரே 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளை தாங்கி வலம் வரும் அறிவாளி. கருப்பு பணம் பாதி, காவி மீதி என தனது அரசியலை அமைத்துக் கொண்டு நாட்டை கைப்பற்ற களமிறங்கியிருப்பவர். வரும்போதே மனைவி, மச்சான், மகன்கள் என குடும்ப சகிதமாக தொண்டு (?) செய்ய வரும் வியாபாரி.


சரத் குமார் - இவர் அரசியல் அசிங்கம் வைக்கோவின் சிஷ்யர் , தினம் ஒரு கட்சி என வலம் வருபவர். "ஜெ Betroom வரை சென்ற ஒரே ஆள் சரத்" என தற்போது இராமனை பற்றி சரத்துக்கு பாடம் எடுத்த 'சோ' அவர்களாலே பாராட்டு பெற்றவர். பின் "உயிர் உள்ள வரை திமுக தான், நான் செத்தா எனது உடல் மீது திமுக கொடிதான் போர்த்தபட வேண்டும்" என முழக்கம் இட்டு ஒரு வாரத்தில் ( வைக்கோ ஒரு நாளில் - குருவாச்சே) கட்சி மாறி அதிமுக தாவியவர். பின் அங்கும் பருப்பு வேகவில்லை என்றதும் தனது சொந்த நாடார் சாதி சங்கத்தின் மூலம் புதிய கட்சி அதுவும் 'அகில இந்திய சமுத்துவ கட்சி' என ஆரம்பித்து உள்ளவர். ராமனில் இருந்து 123 வரை ஆதரிக்க கூடிய கருப்பு ப்ளஸ் காவி தான் இவர் ஸ்டைலும்.


இந்த மூணு பேருக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது. இவர்களுக்கும் எம்ஜிஆர் க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ஒன்றும் இல்லை! இவர்கள் அனைவரின் செயலையும் சேர்த்து செய்தது தான் எம்ஜிஆர் சாதனை. இந்த சாதனைக்கு கணக்குபிள்ளையாக இருந்தவர் இன்னொரு வாரிசான ஆர்.எம்.விரப்பன்.

No comments:

  • இணைப்புகள்

  •