Friday, February 8, 2008

"வேலைவாய்ப்பு கிடைக்கும்"- காங், திமுக, பாஜக விலிருந்து போலிகள் வரை விடுக்கும் ஒரே புருடா இதுதான்!

நெப்போலியன் என்ற திடீர் பணக்கார அரசியல் ரவுடி புதிதாக ஆரம்பித்துள்ள ஜீவன் டெக்னாலஜிஸின் கட்டிடத்தை திறந்து வைக்கும் போது கலைஞர் நாட்டை 19 மாதங்களில் எத்தனை கம்பெனிகளுக்கு கூட்டுகொடுத்தோம், காலையில கூட சில ஒப்பதங்கள் போட்டுவிட்டு தான் வந்து உங்கள் முன் அமர்ந்து உள்ளேன் என தனது துரோகத்தை 'மக்கள் நலன்' என கட்டுரை வாசித்தார்.

ஆனால் ஏன், நாட்டை பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்கு உண்மையான காரணத்தை எந்த ஓட்டுபொறுக்கி அரசியல்வாதியும் கூறமாட்டான்.இவனுங்களாகவே வேலைவாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என அறிவித்துவிடுகிறார்கள். அதற்கும் மீறி நந்திகிராம் போன்ற போராட்ட மக்களை எதிர்கொள்ளும் போது இதே கதையை தான் அளிக்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் வேலைவாய்ப்பு என நாட்டின் அனைத்து வளங்களையும் தாரை வார்க்கும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அதிகாரத்தை கொடுங்கடா நாங்க பார்த்துகொள்கிறோம், வேலை வாய்ப்பு என்ற பெயரில் நாட்டை ஏன்டா பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக்குறீங்க என மக்கள் மார்க்சிய - லெனினிய பாதையில் அணிவகுக்கும் போது இந்த அருவருடி கூட்டம் கொல்லைப்புறம் வழியாக ஓடிக்கொண்டு இருக்கும்.

No comments:

  • இணைப்புகள்

  •