Friday, February 8, 2008

"நாங்க மக்கள் விரோதிகள் தான்" - திமுக, அதிமுக ஒப்புதல் வாக்குமூலம்


விஜயாந்த், சரத்குமார் போன்ற புதிய ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகள் கோடிக்கணக்கான ரூபாய் வாரி இறைத்து மக்களை கொள்ளையிட தயாராகிவருகின்றனர் என்றால் இதுலேயே பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் என்ன செய்வார்கள் என அரசியல் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.

இதுல புதிய விஷயம் என்னவென்றால், தமிழ் புத்தாண்டு தினத்தை அறிவித்த கலைஞருக்கு பாராட்டு விழா பிப் 9 நடக்கவிருக்கிறது இதற்காக வள்ளுவர்கோட்டம் ஒரு வாரமாக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சென்னை மற்ற இடங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனை நம்ம 'புரட்சி' தலைவி அப்பாவியாக கண்டித்து உள்ளது தான் ஹைலெட். அடிதடி, ஊழல் எதுவானாலும் காமராஜர், அண்ணா இருந்து அனைவரும் செய்துவரும் நிகழ்வானாலும் இவர்கள் இதனை கண்டிக்கும் போது வராத நகைசுவை செயலலிதா கண்டிக்கும் போது வருகிறது. அந்த அளவுக்கு வெளிப்படையாக ஆட்டம் போட்ட நடிகை இவர்.

வளர்ப்பு மகன் திருமணம் உள்பட செயலலிதா செய்யாததா என மக்கள் இப்ப கேட்ட அதில் அர்த்தம் இருக்கும்.இதனையே எதிர்கேள்வியாக ஜெவுக்கு ஆற்காட்டார் கேட்கிறார்.
..
இந்த இரண்டு ஓட்டுபொறுக்கிகளும் நாங்க யார் என மக்களுக்கு அறிவிக்கின்றனர். மக்களும் இவர்கள் அனைவரையும் இணைத்து பார்த்து புரிந்து கொள்ளாமல் அவர்களின் சாதுரிய அறிக்கைகளை ரசிக்க பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

No comments:

  • இணைப்புகள்

  •