Sunday, February 10, 2008

"ராமதாஸ் நல்லவர் தாங்க" - மறைந்த அறிஞர் அண்ணா அறிவிப்பு

சேது சமுத்தர திட்டத்தை தொடங்கி வைத்த, ஆதரித்த பாஜக, செயலலிதா போன்ற பார்ப்பன மதவெறி கும்பல் தற்போது ராமன் பாலம் என புராண புரட்டை கொண்டு மதவெறி அரசியலை நடத்தி வருகிறது. இதில் ராமன் குறித்து சிறிது சீறிய கலைஞர் பின்னர் பின் வாங்கினார். அவர் தலைக்கு விலை வைத்தவுடன் தான் திமுக அணிகளுக்கு சுயமரியாதை வந்தது, உடனே அதுவும் அடங்கியது.

ஆனால் ஆரம்பித்தில் இருந்தே இந்த ராமன் பாலம் புரட்டை ஒட்டிய பார்ப்பன மதவெறி கும்பலை, ராமதாஸ் உள்பட்ட எந்த ஓட்டுப்பொறுக்கியும் கண்டிக்க வில்லை.

சேது கால்வாய் என்பது பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்கானது என்பது வெள்ளிடைமலை. ஆனால் பார்ப்பன பயங்கரவாதிகளின் ராமனுக்கு சாவுமணி அடிக்கும் என்பதில் இதனை நிறைவேற்றனும் என "ராமன் பாலம் என்பது புராண புரட்டு, பார்ப்பன மதவெறி கும்பலை விரட்டு" என்று தமிழகம் முழுவதும் ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தான் பார்ப்பன மதவெறி எதிரான பிரச்சாரத்தை வீச்சாக எடுத்து சென்றது.

இன்று ஓட்டுப்பொறுக்கிகள் உள்ளிட்ட ஏகாதிபத்திய தாசர்கள் சேதுகால்வாயினை மாற்று வழியில் நிறைவேற்றினாலும் சரிதான் என பார்ப்பன புரட்டுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி கூறியவர்களில் 'ராமதாஸை' மற்றொரு ஏகாதிபத்திய அருவருடி 'வீரமணி' அவர்கள் கண்டித்து அறிக்கை விட்டார்.

இதில் "வீரமணிக்கு இதற்கு எந்த அருகதையும் இல்லை எனவும், அவருக்கு பதில் அளித்தும் தமிழ் ஓசையில் வந்த கட்டுரை"யினை கேள்விக்குள்ளாக்கியே இந்த பதிவு.

வீரமணிக்கு 'அருகதை' பற்றி உண்மையினை கட்டுரையில் சொல்லவில்லை என்பதால் அதனை முதலில் சொல்லிவிடுவோம்.

ஐயா வீரமணி அவர்கள் "பெரியார் புரா" என்ற அரசு சாரா நிறுவனத்தை ஆரம்பித்து மக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக திரும்ப விடாமல் வேலைசெய்கின்ற - தலைமை என்.ஜி.ஒ வை நடத்துபவர். அரசியலில் கலைஞருடன் கூட்டு (தற்போது), தொழிலில் சசிகலா மருத்துவமனையுடன் கூட்டு என இரட்டை வேடம் போடுபவர். மேலும் "வாழ்வியல் சிந்தனைகள்" என "பணம் படைத்தவனுக்கு தான் இந்த உலகம், இல்லாதவன் இருப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்" போன்ற அயோக்கியத்தனமான கருத்துகளை எழுதி தள்ளுபவர். மொத்தத்தில் பெரியார் என்ற சுயமரியாதைக்காரின் பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்துவரும் வியாபாரி.

ஆனால் இப்படி உண்மைகளில் ஒன்றைக்கூட சொல்லவில்லை தமிழ் ஓசை கட்டுரை. அதில் இரண்டு பதில்களை மட்டும் கொடுத்து உள்ளார்கள்.

ஒன்று தினமும் அறிவுரை சொல்வது தவறு என்பதற்கு, அது "ஜனநாயக கடமை" எனவும், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி (சந்தர்ப்பவாதம்) மாறியவர் என்பதற்கு, "தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறலாம், அதனால் இலட்சியம் திசைமாறுவதாக கருதக் கூடாது என அண்ணாவே கூறியுள்ளார்" என அண்ணாவின் உரைகளை எடுத்து போட்டு இங்கு போலிக் கம்யூனிஸ்டுகளிலிருந்து யாருமே யோக்கியம் இல்லை ஆனா, பாமக வை மட்டும் குறைகூறுவது எப்படி?. மேலும் மக்களே இந்த குற்றசாட்டை ஏற்கனவே புறக்கணித்து விட்டார்கள் எனவும் அடித்து சொல்லி உள்ளார்கள்".

இப்ப பதில்களை அலசுவோம்:

அரசின் மக்கள்விரோத கொள்கையினால் மக்கள் அன்றாடம் செத்துகொண்டுவருகிறார்கள், ஆனால் நீங்க தைலாபுரம் தோட்டத்தில் உட்கார்த்து கருத்து சொல்லிவிட்டு அரசை ஆதரித்து நிற்கும் அயோக்கியத்தை எப்படீங்க ஏத்துகொள்ள வைக்க முற்படுகிறீர்கள். அந்த மக்கள் விரோத கொள்கையின் அடிப்படையான உலகமயம், தனியார்மயம், தாராளமயம் குறித்து உங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியமா?. உங்களிலிருந்து சரத், விசயகாந்த, போலிகள் வரை எல்லோரும் இந்த கொள்கையினை ஏற்றுகொண்டவர்கள் தான். பின்னர் எப்படீங்க மக்கள் நலன், மக்கள் தொலைக்காட்சி என உதார்விடுகிறீர்கள்...

அடுத்து அண்ணா மேற்கோளை போட்டு கூட்டணியினை நியாயப்படுத்தியுள்ளது. ஏங்க, 'அண்ணா' என்ன யோக்கிய சிகாமணியா, அவர் சொன்னா அது நியாயமாகிவிடுமா?. முதலில் அவரையே நியாயப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம். திமுக எப்படி உருவானது என வரலாறு தெரியாதவங்க யாராவது இருந்தா அவங்க வேணா நம்பலாம். நீ கூட்டணி மாறிய பச்சைவோந்தி என்றால் அதற்கு, யார் தான் இங்க யோக்கியம் என கேள்வி எழுப்பி நியாயப்படுத்த முற்படுவது என்னையா நியாயம். அரசியல்வாதி என்றாலே கொலை, ஊழல் செய்வது இயற்கைதான் என்பதுபோல கூட்டணி என்ற சந்தர்ப்பவாதத்தை ஓட்டுபொறுக்கிகளின் இயல்பான ஒன்றாக நியாயப்படுத்த பார்க்கின்றீர்கள்.

மொத்தத்தில் கலைஞர், வீரமணி, ராமதாஸ் என யாருமே பார்ப்பன மதவெறி கும்பலை எதிர்கொள்ளவோ, மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கவோ முடியாது. ஏனெனில் இதில் சமரசம் செய்து தான் தங்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்தனர்.

No comments:

  • இணைப்புகள்

  •