Sunday, February 17, 2008

"மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு தந்துவிட கூடாது" - ஆன்மிகவாதி கருணாநிதி

முன்னராக பாஜக என்ற "அக்மார்க்" இந்து மதவெறி அமைப்பை ஆதரித்து மத்தியில் அவர்களை ஆட்சியில் வைத்தவர் கருணாநிதி. அன்று அதே மதவெறியர்களால் குஜராத்-ல் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்யப்பட்ட போது தனது பதவியினை தக்கவைத்து கொண்டு பெளனம் காத்தவர் தான் இந்த கருணாநிதி.

ராமன் பாலம் என்ற மதவெறி கும்பலின் பிரச்சாரத்தை முதலில் எதிர்த்தவர் பின்னர் இதே பதவிகளை தக்கவைத்து கொள்ள அதற்கு 'ராமர் சேது பாலம்' என்று கூட பெயர் வைக்கலாம் சாந்தியாகிவிட்டார்.

இன்று இவரது செயல்களை விமர்சிக்கும் கூட்டணிக் கட்சிகளை பார்த்து மிரட்டுகிறார் "மதவாத சக்திகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள்" என்று. பின்னர் நாராயண பீடத்தின் மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று "அறிவும் ஆன்மீகமும் இரட்டைக் குழந்தைகள்" என்று பிரச்சாரம் செய்கிறார்.

1 comment:

அசுரன் said...

நல்லா பேசுறாங்கய்யா முற்போக்கு.... :-((

  • இணைப்புகள்

  •