Sunday, February 10, 2008

"தமிழனை அழிப்பவன் தான் தமிழன்" - கலைஞர் பேச்சு

2 ரூபாய்க்கு அரிசி வாங்கித்தான் 'வாழ முடியும்' என தமிழனை ஆக்கியதில், செயலலிதாவை விட 5வது முறையாக முதலமைச்சராக இருக்கின்ற கருணாநிதிக்கு தமிழனை அழித்த 'பெருமை' உண்டு என்பதே நிதர்சனம்.

செயலலிதா தினமும் 20 மணி நேரம் "தமிழனை அழிக்க" பணியாற்றியதை மெச்சிய வீரமணி, சரத்குமார் போன்றோர் கூட கலைஞர் அவர்கள் தினமும் 4 மணிக்கு எழுந்து இதே பணியினை ஆற்றுவதை மறுக்க முடியாது.

இப்படி இவர்கள் அழித்த தமிழனை நாடெங்கும் வீதிகளில் காணலாம். ஆனால் ஓட்டுபொறுக்கிகளால் தான் பார்க்க முடியாது, ஏன்னா இவர்கள் தான் காரின் ஜன்னல்களை இறக்குவதே கிடையாதே.

No comments:

  • இணைப்புகள்

  •