Monday, February 18, 2008

முதலாளிகளும், தொண்டு நிறுவனங்களும் தான் எல்லாத்துக்கும் என்றால் என்ன வெங்காயத்துக்கு நீங்கள்?

கல்வி வேணுமா அதற்கு தனியார் நிறுவனங்களுக்கு போய் காசு கொடுத்து படித்துக்கொள், மருத்துவம் வேணுமா அதற்கும் தனியார் மருத்துவமனைக்கும், செட்டிநாட் மருத்துவ நகரம் போன்றவற்றிர்க்கும் போய் காசு கொடுத்து பார்த்துக்கொள், வேலை வேணுமா அதற்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு போங்க என தினந்தோறும் வெளிப்படையாக கூவுகிறார் கருணாநிதி.இது போக மருத்துவ உதவி, கல்வி உதவி வேணுமா அதற்கு ஆதி பராசக்தி, அமிர்தானந்த மாயி, நாராயண பீடம் போய் மனு போடுங்க; மேலும்- தொண்டு நிறுவனங்களும் வந்து உதவி பண்ண சொல்கிறேன் என்கிறார்.


இப்படி எல்லாத்தையும் மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு எங்க(!) அரசு என்ன செய்யும் என்றால், சாராயம் விக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவன் வாங்கி தந்த கார், பைக்கில் தனது அடியாள் படையினை அனுப்பி மக்களை ஒடுக்கும்., குறிப்பாக முதலாளிகளுக்கான வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்கும்.

இதன் மூலம் கருணாநிதி அறிவிப்பது:


"ஏகாதிபத்திய தாசன் தான்" நான் என்பதும்


"இந்த அரசு மூலம் மக்கள் நலனுக்கு எதுவும் செய்ய முடியாது" என்பதையும் தான்.

No comments:

  • இணைப்புகள்

  •