Friday, July 18, 2008

45 வீட்டுமனைக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்! மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!!


மனைகளின் விலை ரூ 1.18 கோடி - விண்ணப்பத்தின் விலை ரூ 3.5 கோடி!





Thursday, June 5, 2008

பெட்ரோல் விலையேற்றம் : சொரணையே இல்லையாட நமக்கு!!


விலைவாசி மிக கடுமையாக உயர்ந்த பின்னும் மீண்டும் பெட்ரோல் விலையினை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலையினை ரூ3ம், சிலிண்டருக்கு ரூ50ம் விலை ஏற்றி அறிவித்து உள்ளது மத்திய அரசு.

இதனை அரங்கேற்றிய எல்லா ஓட்டுப்பொறுக்கி நாய்களையும் - கிழித்து எறிவதற்கு முன்னர், பெட்ரோல் விலை ரகசியம் - இதனை ஏற்றவேண்டி இவர்கள் கூறிய காரணத்தோட யோக்கியதைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை பிரச்சாரமாக எடுத்து சென்றால் தான் இந்த நாய்களை அம்பலப்படுத்த முடியும்.

1.
பெட்ரோல் விலை (தற்போதைய விலை) - ரூ 49.61 (இது சாதங்க, சூப்பர் ரூ53 அதுவே ஷெல்ல ரூ58)
இதுல சுங்கவரி, கலால் வரி, விற்பனை வரி, கல்வி (!) வரி என மத்திய - மாநில அரசுகள் பிடுங்குவது ரூ28
அதாவது 1 லிட்டருக்கு 57% வரி.
இதனை கழித்துவிட்டு பார்த்தால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 21 தான்.

2.
கச்சா எண்ணெய் மொத்த தேவையில் 30 % நமது நாட்டில் கிடைக்கிறது.
இதையும் இறக்குமதி செய்யப்படும் 70 % கச்சா எண்ணெய்க்கு ஈடாக வரியினை போடுகிறார்கள் இந்த மோசடி வியாபார ஓட்டுப்பொறுக்கிகள்.

3.
அடுத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு யார்- யார் ஈடுபடுறானுங்க பார்த்தோமானால்,
நமது நாட்டில் உள்ள 19 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 18 அரசு வசமும், ஒன்று திருட்டு அம்பானி வசமும் உள்ளது. ஆனால் 18 ஆலை வச்சிருக்கிற அரசு உற்பத்தி திறன் 74%, ஒத்த திருட்டு அம்பானி ஆலையின் உற்பத்தி திறன் 26%. இந்த அயோக்கியத்தனத்தை போல பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனில் அம்பானியின் ஆலை 59% ஆக உள்ளது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப்
பாசத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

4.
இவ்வாறு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் 2004-2005 ஆம் ஆண்டில் அரசுக்கு கிடைத்த வருமானம் 1,20,946 கோடி.
ஆனால் இவனுங்க 2005-2006 ஆம் ஆண்டில் மண்ணெண்ணெய்க்கும் சமையல் எரிவாயுக்கும் கொடுத்த மானியமோ 2,535 கோடி ரூபாய் தான்.

இப்படி வரியினை போட்டு கொள்ளையடிக்கும் அரசு எங்க எண்ணெய் ஆலைகளுக்கு நஷ்டம் என கதை விடுகிறது. ஆனால் இது பெரிய பித்தலாட்டம். இதனை தோலுரிக்காமல் நேற்று நமட்டு சிரிப்புடன் விலையேற்றத்தை நியாயப்படுத்திய மண்மோகன் அடிமை போன்றவற்றை முச்சந்தியில் நிறுத்த முடியாது.

இவனுங்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டுமானம், ராணுவ தளவாடங்கள் போன்றவற்றுக்காகவே தாக்கல் செய்கின்ற பட்ஜெட் என்ற மோசடியில் வருமானத்துக்கு வரி போடுவது, பொதுத்துறையினை விற்பது என்பதை மட்டுமே வழக்கமாக கொண்டு இருக்குறானுங்க. இந்த வரி விதிப்பில் பெரும்பங்கு பெட்ரோலிய பொருட்களின் மீது போடுவது.

இப்ப தெரியுதா, மேலே உள்ள உண்மை நிலையினை இவன் ஏன் மறைத்து நட்ட கணக்கு காட்டுகிறான் என்று. வரியினை போட்டாதான் தங்க நாற்கர சாலையும், ராக்கெட்டையும் விட முடியும். ஒரு வரியில் சொல்லனும்னா "நம்ம வீட்டை கொளுத்திவிட்டு அதுல குளுரு காய்றானுங்க".

இந்த விலையேற்றத்தை எதிர்ப்பது போல போராட்டத்தை அறிவிக்கும் பாஜக, சிபிஎம் - எந்த அருகதையும் இல்லை. இதே பாஜக ஆட்சியும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல் விலையினை ஏற்றியவர்கள் தான். 123 ஒப்பந்தத்திற்கு ஆரம்ப சுழி போட்டவன், தற்போதைய மறுகாலனிய கொள்யினை அச்சு அசலாக பின்பற்றியவர்கள். ஆட்கள் தான் மாறுகின்றனர் கொள்கை அதே தான் இந்திய திருநாட்டில்.

அடுத்து சிபிஎம் -சொல்லவே தேவையில்லை இவனுங்க ஆதரவுடன் தான் 4 ஆண்டு கொள்ளையே நடக்குது. 123 இருந்து இந்த விலையேற்றம் வரை "மக்களை திரட்டி போராடுவோம்" என்று கூறி கொண்டே ஆட்சிக்கு முட்டு கொடுத்து மக்களை கொலை செய்து வருகின்றனர். இதைவிட மக்களை கேவலப்படுத்த முடியாது.

அடுத்து திமுக, ராமதாஸ் போன்ற ஓட்டுப்பொறுக்கிகள். இந்த மதவெறி எதிரான ஆட்சியின் காவலர்கள் தான் போன பாஜக ஆட்சியின் குஜராத் படுகொலைகளையும், மறுகாலனியாதிக்க கொள்ளைகளையும் முழுக்க ஆதரத்து குளிர் காய்ந்த நாதாரிகள் என்பது சிபிஎம் போலிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மக்களாகிய நாமும் இதனை நம்பி இருப்பதை எந்த வகையில நியாயப்படுத்த முடியும்.


எல்லாவற்றையும் உடன் இருந்து அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்துவிட்டு நாட்டில் இதனை விட முக்கிய பிரச்சனை இருப்பது போல திரிகிறார் ஐபிஎல் ரசிகர் கலைஞர். மேலும் தனது 50 ஆண்டுகால இது போன்ற சாதனைகளுக்காக வரலாறு காணாத வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகிறார் நம்ம தமிழின தலைவர். இந்த காரியவாத தலைவரின் சொத்து இன்று பல்லாயிரக்கணக்கான கோடி .

அப்பறம் ராமதாசு, தனது மகன் அங்க ஒப்புதல் கொடுப்பார் - இவரு தீவிர மக்கள் நலன் விரும்பி போல அறிக்கை விடுவார். இந்த ஓட்டுப்பொறுக்கியும் பாஜக காலத்துல இருந்து மத்திய அமைச்சரவையில இருக்கு. 123 யினை ஆதரிக்கும் அடிமை. இந்த கவர்ச்சிவாத தலைவரின் சொத்து இன்று ஆயிரக்கணக்கான கோடி.

அடுத்து மக்கள் விலைவாசியில கஷ்டப்படுவதை தாங்காமல் உதகையில் இருந்து அறிக்கை விடும் நம்ம ஜெயலலிதா அம்மா. இது காலத்து வரலாற்றை கூற வேண்டிய தேவையில்லை என்பதால் இத்துடன் முடிக்கலாம்.

இந்த விலையேற்றத்தை தொடர்ந்து நாளை அனைத்து பொருட்களும் மீண்டும் விலையேற போகிறது.

ஆக மொத்தத்தில் காசு இல்லாதவனை பார்த்து சாங்கடா என்கிறது அரசு. ஆனால் நாம் மவுனம் காத்து கொண்டுயிருக்கிறோம். இது நமக்கு நாமே சவக்குழியினை தோண்டிக் கொள்வதை போலத்தான். இதனைவிடுத்து மவுனத்தை உடைத்தெறிந்து வீதியில் இறங்கி போராடுவது தான் அத்தனை பிரச்சனைகளையும் தீரக்க முடியும்.

இந்த பதிவினை கிரகிக்க நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வி தான் பதிவின் தலைப்பு - "சொரணையே இல்லையா நமக்கு".

Tuesday, May 6, 2008

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - போலிக் கம்யூனிஸ்ட்கள்



டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை '30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்' தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.


தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.


தற்போது அம்மணமான பின்னும் நாங்கள் மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் என தொடர்ந்து அறிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை சேர்ந்த பெண்களை ஓட்டுப் போட மறுத்த காரணத்தால் நிர்வாணப்படுத்தி ஓட விட்டு உள்ளனர் இந்த பாசிஸ்டுகள்.


இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.

மேற்கு வங்கத்தின் 'மின்வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள் மாற்று சங்கம் அமைத்து போராடியதை' மக்கள் கூடும் இடத்தில் சிஐடியு குண்டர் படை சென்று தாக்கி ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

முக்கிய இடத்தில் மக்கள் முன்னிலையில் இவ்வாறு என்றால் நந்திகிராமில் கேட்கவே தேவையில்லை. இதனை மறுப்பவர்கள் நந்திகிராமில் நடத்திய பாசிசத்தை மறுப்பதில் வியப்பில்லை.

இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை, 'மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் உண்மையான எதிரிகளை' புரட்சிகர சக்திகள் இனம் காட்ட முடியாது

Sunday, May 4, 2008

இந்தியர்கள் வாயினால் சாப்பிடக் கூடாது - உலக பயங்கரவாதி புஷ் எச்சரிக்கை!

ஏழை எளிய நாடுகள் முழுவதும் இன்று விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக அந்நாடுகளில் உணவு உற்பத்தி திருப்பிவிடப்பட்டது, ஊக வணிகம் என்ற பெயரில் உணவில் சூதாடிகளை நுழைத்தது என பல காரணங்கள்.

இந்தியாவில் உணவு உற்பத்தி, கொள்முதல், விற்பனை என அனைத்திலும் இருந்து அரசு தன்னை விடுவித்து கொண்டு அதனை பன்னாட்டு நிறுவனங்களிடமும் தரகு முதலாளிகளிடமும் ஒப்படைத்தது காரணம்.

இதனை எந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களும் சொல்வதில்லை. ஏனென்றால் இதனை அரங்கேற்றியதில் "அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளுக்கும் குறிப்பாக 4 ஆண்டுகளாக காங்கிரஸ் துரோகிகளை ஆதரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும்" முழு பங்கு உண்டு.

இன்று உலக நாடுகளை சூறையாடும் உலகப்போலீஸ்காரனும், அமெரிக்காவின் தலைவனும் ஆன புஷ் அறிவிக்கிறான் "விலைவாசி உயர்வுக்கு இத்திய மக்கள் அதிகம் சாப்பிடுவதே" காரணம் என்று.

இலவசமாக உணவு பொருக்களை இந்தியர்கள் பெறுவது போல சித்தரிக்கும் இந்த பயங்கரவாதி தான் 'பயோ ப்யூல்' காக ஏழை எளிய நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் விவசாயத்தை உணவு உற்பத்தியிலிருந்து விலகி காட்டாமணக்கு போன்றவற்றை பயிரிட வைத்தவன்.

விலைவாசி உயர்வுக்கு காரணமான தனியார்மயம், ஊகவணிகம் என அனைத்தையும் இத்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்ற காரணமானவனே இவனுடைய அமெரிக்கா தான். அங்குள்ள ஆக பெரும்பாண்மையான பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக தான்.

புஷ் சொல்லும் இதைதான் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளும் முன்னர் சொன்னது, "தேவை அதிகரித்ததே" என்று. அதனை வெளிப்படையாக "அதிகம் திண்ணுகின்றனர்" என புஷ் அறிவிக்கிறான் இன்று.

புஷ்யை கண்டிக்கும் அருகதை இந்திய ஓட்டுப்பொறுக்கிகளுக்கு இல்லை என்பதே இதிலிருந்து தெரிவது.

Saturday, March 22, 2008

போயஸ் கார்டனிலிருந்து கோபாலபுரத்துக்கு போகும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் ரவுடிகளின் அடியாள் ஜோதி!

சென்னை: ஜெயலலிதா மீது திமுக அரசு தொடர்ந்த வழக்குகள் பொய் வழக்குகள், பழிவாங்கும் நடவடிக்கை என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய அடுத்த சில நாட்களிலேயே, ராஜ்யசபா சீட் கிடைக்காததால், அதிமுகவிலிருந்து விலகிய வழக்கறிஞர் என்.ஜோதி, நேற்று தடாலடியாக திமுகவில் இணைந்தார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ஜோதி. ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் வழக்குகளை இவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.இவருடைய திறமையை மதித்து, ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாகவும் ஜோதியை ஆக்கினார். ஆனால் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் ஜோதிக்கு சீட் தரவில்லை. இதனால் கோபமடைந்த ஜோதி, திடீரென அதிமுகவிலிருந்து விலகினார்.
அதிமுக தொடர்பான வழக்குகளை இனிமேல் பார்க்கவும் மாட்டேன் என்றும் அறிவித்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, நம்பிக்கைத் துரோகி என்று வர்ணித்து ஜோதியை கடுமையாக சாடி அறிக்கை விட்டார். அவரை கட்சியை விட்டும் நீக்கினார்.இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதி, ஜெயலலிதா, சசிகலாவின் பிடியில் இருப்பதாக பேட்டி அளித்தார். மேலும், ஜெயலலிதா மீதான வழக்குகள் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, அனைத்தும் பொய் வழக்குகள் என்ற எனது கருத்தில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தடாலடியாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கனிமொழி, மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.

கேள்வி - திறமையான வழக்கறிஞரான ஜோதியை, திமுக எந்தவிதத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது?
கருணாநிதி - பொறுத்திருந்து பாருங்கள்.

Sunday, February 24, 2008

"மக்களை கொன்றால் சிறப்பு காவல், மக்களுக்காக போராடினால் சிறப்பு அதிரடிப்படை" - இந்திய ஓட்டுப்பொறுக்கி ஜனநாயகம்


பீகாரில் கொலைகுற்றவாளியாக சந்தேகித்த ஒருவரை காவல் நிலையத்திலிருந்து இழுத்து வந்து அடித்து கொன்று உள்ளார்கள் எதிர்தரப்பினர். இதற்கு காவல் துறை பலத்தகாவல். இதற்கு முன் பலமுறை இது போன்ற சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இதுவும் நிகழ்ந்துயுள்ளது.

இதனை பின்புலமாக கொண்டு இந்திய ஜனநாயகத்தின் மற்றோரு முகத்தை கொஞ்சம் ஆராய்வோம்.

மக்கள் விரோதிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிலவுடைமை பண்ணைகளுக்கும் சேவை செய்வதற்காகவே இந்திய அரசை 1947ல் உருவாக்கினர். ஆனால் மக்கள் நலனுக்கானது 'இந்திய அரசு' என்ற கருத்து உருவாக்கப்பட்டு ஓட்டுபொறுக்கிகளாலும், கல்வி & மதம் போன்ற நிறுவனங்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதும், இந்து பயங்கரவாத அமைப்புகளும் வெகுவிரைவாகவும் - வெளிப்படையாகவும் வளர்ந்து வருகிறது. சமீபத்திய உதாரணங்களான 123 அடிமைசாசனமும், ராமன் பால புரட்டையும் நாம் பார்க்கலாம்.

123 ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்றும் பணி போலிக்கம்யூனிஸ்டுகளின் பலத்த ஆதரவுகளுடன் நடைபெற்றுவருகிறது. பாஜக இதனை ஆரம்பித்தது முதல் திமுக கனிமொழி, ராமதாஸ் வரை அனைவரின் கரகோஷ ஆதரவோடு நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வெளிப்படையாகவே 123 நாட்டுக்கு நலன்பயக்கும் என்று இந்த கயவர் கூட்டம் சொல்லுவதை விட "மறுகாலனியாக்கத்துக்கு இந்திய அரசு பீடுநடை போடுவதற்கு" சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இதே போல சேது கால்வாய் திட்டத்தை ஆரம்பித்த பாஜக & அதிமுக பார்ப்பன கும்பல் இன்று ராமன் பால புராண புரட்டை கொண்டு அரசியல் செய்து வருவதும் அதற்கு நீதிமன்றம் அங்கிகாரம் தருவதும் வெள்ளிடைமலை. மேலும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்ததை 'தெகல்கா' என்ற இதழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் அது குறித்து எந்த நடவடிக்கைகளும் இல்லை. இவையெல்லாம் இந்து பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சியினையே காட்டுகிறது.

மேலும் இன்று 'ராஜ் தாக்ரே' என்ற பார்ப்பன பாசிஸ்ட் மக்கள் பிரச்சனையினை திசைதிருப்பி ஆதாயம் அடையும் நோக்கத்தோடு வேற்று மாநிலத்துகார்கள் வருகையினால் தான் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லி தனது குண்டர் படையினர் மூலம் மக்களை அடிக்கிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் அடிப்படையிலேயே மக்கள் நலனுக்கான எதையும் இந்த அரசின் மூலம் பெற முடியாது என்பதை மக்களுக்காக போராடும் அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறு சோனியா, அத்வானி, மோடி, ராஜ்தாக்ரே, கலைஞர், ஜெ, ராமதாஸ்.................... போன்ற அனைத்து மக்கள் விரோதிகளும் Z பிரிவு உள்பட பலத்த பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

இவர்களால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கான போராடுபவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கம் 'சிறப்பு அதிரடிபடை'யும், அதற்கு கோடிக்கணக்கான பணமும் செலவுசெய்து வருகிறது.

"நாளை முதல் அரட்டைமடம் கூடுகிறது" - பன்றி தொழுவம் அறிவிப்பு


நாட்டின் 70 % மக்களின் தினசரி வருமானம் ரூ 20,
20% மக்களின் தினசரி வருமானம் ரூ 9,
10 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை,
மனிதவள மேம்பாட்டில் உலகில் இந்தியாவிற்கு 128வது இடம்,

--இவையெல்லாம் மக்களை 60 ஆண்டுகளாக ஏய்த்து வரும் ஓட்டுபொறுக்கிகளின் சாதனைகள் & பாராளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதைகளில் சில.

இந்த சாதனைகளை நிறைவேற்ற கூட லஞ்சம் பெற்ற (கேள்வி கேட்க) ஓட்டுபொறுக்கிகள் என்பதால் "இவர்கள் பற்றி மேலும் கூறி மலத்தை நோண்ட வேண்டாம்" என இத்துடன் முடித்துக்கொள்வோம்.

"உண்மையான மக்கள் நீதி மன்றங்கள்"

மக்கள் நீதி மன்றங்கள் என்ற பெயரில் சமரச நீதிமன்றங்களை நீதித்துறை தற்போது செயல்படுத்தி வருகிறது. இதன் அடைப்படையில் தஞ்சையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள் என கூறப்படுகிறது.

மக்களிடையே உள்ள செக் மோசடி, வாடகை பிரச்சனை உள்பட்ட வழக்கினை ஏற்று கொண்டு சமரசம் செய்து வைப்பது தான் இதன் பணியாகும்.

ஆனால் உண்மையான "மக்கள் நீதிமன்றம்" என்பது இதுவல்ல.
நாளை பெரும்பாண்மை மக்கள் ஆட்சி இந்தியாவில் மலரும் போது, இதுவரை நாட்டை சீரழித்த ஓட்டுபொறுக்கிகளையும், குஜராத் படுகொலை போன்றவற்றை செய்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் காலிகளையும் பிடித்து அவர்களுக்கு மக்களே நேரடியாக விசாரனைசெய்து தண்டனை தருவது தான் உண்மையான மக்கள் நீதிமன்றம்.

அன்று சங்கர ராமனை கொலை செய்த "கொலைகாரன் காஞ்சி ஜெயந்திரன்", சொத்து குவிப்பு வழக்கில் "பாப்பாத்தி ஜெயலலிதா" போன்றவர்கள் தற்போது போல 'பெயிலில்' சுதந்திரமான நடமாட முடியாது.

"ஒடுக்குபவனும், ஒடுக்கபடுவனும் இரட்டை குழந்தைகள்" - ராமதாஸ் & திருமா அறிவிப்பு

'முத்துராமலிங்க தேவர்' என்ற சாதிவெறியனுக்கு 'அரசு விடுமுறை' அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியும், வன்னியர்களுடன் தமிழ் பாதுகாப்பு என்று கூட்டனி அமைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை பாதுகாக்கும் திருமா தற்போது வன்னியர்களும் நாங்களும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என கோஷம் போடுகிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை இந்த 'சந்தர்ப்பவாதி' மூலம் பெற முடியும் என யோசிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதே திருமாவின் அறிவிப்புகள், செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

பண்ணையார் வாசன்.


மக்களை கேவலமான பார்த்து சிரிக்கும் இந்த பண்ணையின் பெயர் ஜி.கே வாசன்.

மூப்பனார் என்ற நிலப்பிரபுவின் மகனான இவர்,நிலவுடைமையாளர்களின் நலனுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இன்று தேர்தலில் நிற்காமல் எம்.பி பதவியும், அமைச்சர் பதவியும் வாங்கி கொண்டவர்.


"முதலாளிகளும், அவர்களின் அடியாள் அரசாகிய நாங்களும் யாரையும் வேலையிலிருந்து நீக்கலாம்" - வேதாந்தி மன்றம்

ஊழியரைகளை அரசாங்கமும் சரி, தொழிலதிபர்களும் சரி எப்ப வேணாலும் வேலையிலிருந்து நீக்கலாம் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது . இதன் மூலம் பெரும்பாண்மை உழைக்கும் மக்களின் எதிரியான சிறுபாண்மை முதலாளிகளையும், அவர்களின் அரசையும்( ஒரு வர்க்கத்தின் ஒடுக்குமுறை கல்வி) வெளிப்படையாக நியாப்படுத்தி உள்ளார்கள்.

நீதித்துறை மீது சிறிதளவு நம்பிக்கை உள்ளவர்களையும் முகத்தில் அறைந்து, வெளிப்படையாக சொல்கிறது "நாங்களும் முதலாளி வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவிதான்" என்று.

Saturday, February 23, 2008

"பாப்பாத்தி ஜெயலலிதா & ஏகாதிபத்திய தளபதி" பிறந்த நாள் விளம்பரங்களால் அல்லாடும் தமிழகம்

நாட்டின் பெரும்பாலான மக்களை வாழ்வின் விளிப்புக்கு அனுப்பின அம்மாவும், தளபதியும் தங்கள் பிறந்த நாளை வெகுவிமர்சியாக கொண்டாடி வருகின்றனர். திரும்பி பக்கம் எல்லாம் பேனர்கள், சுவரெழுத்துகள், விளம்பரங்கள்.

இதுல கூடுதலாக "பேனர்களை அகற்ற அரசு மீண்டும் நடவடிக்கை, 2 வார கெடு" என கேலிக்கூத்து ஒருபக்கம் நடக்கிறது


Monday, February 18, 2008

"Petrol விலையில் பாதியினை அரசுக்கு வரியாக மக்கள் செலுத்திதான் தீர வேண்டும்" - உலக வங்கி அடியாட்கள்

தற்போது Petrol விலை லிட்டருக்கு ரு 2ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ 1ம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை காக்க இதை செய்தாக வேண்டியுள்ளது என மண்மோகன் சிங் அறிவிக்கிறார்.

இது போலவே புளுகும் கருணாநிதி, போலிகள் அனைவரின் கூற்றையும் இவர்களின் 60 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதாரம் என்னவென்பதையும் இவர்களின் அறிக்கைகளிலேயே உள்ளது.

நாட்டின் 70 % மக்கள் தினசரி வருமானம் ரூ20, கடந்த 10 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை, 19% மக்கள் தினமும் வாழ்க்கையினை ஓட்டுவது ரூ 9 வில், மனித வள மேம்பாட்டில் உலகில் 128 வது இடத்தில் இந்தியா உள்ளது , 30 கோடி மக்களின் வருமானத்தை வெறும் 20 பெரிய பணக்காரர்கள் கையில் வருமானமாக போய் சேருகிறது என்பன போன்றவைகள்....

இப்ப சொல்லுங்க இவர்கள் சொல்கிற பொருளாதாரம் யாரை குறிக்கிறது. நாளைக்கு இந்த விலையேற்றத்தை தொடர்ந்து வரும் கஷ்டங்களை எதிர்கொள்ள போவது யார்.

தெளிவாக தெரியும் விலையேற்றத்தால் அடையும் லாபம் அரசுக்கு வரியாகவும், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களையும் சென்று அடையும் என்பதும், விலையேற்றத்தால் வரும் கஷ்டங்களை ஏற்கனவே வீதிக்கு வந்துவிட்ட பொதுமக்களை சென்று கொல்லும் என்பதும்.

ஏற்கனவே இரண்டு வேளை உணவு ஒரு வேளை உணவாக மாறிவரும் நிலையில் அதனையும் விடுத்து பசியால் மரணம் அடையும் நிலையினை தான் மக்கள் எதிர்கொள்ள போகின்றனர்.

நாட்டின் ஆக பெரும்பாண்மை மக்களை பசி, பட்டினிக்கு ஆளாக்கும் தனியார்மயம் தாராளமயத்தினை அமுல்படுத்தும் இந்த மக்கள் எதிரிகளான ஓட்டுபொறுக்கிகளின் உண்மைமுகத்தை மக்கள் தெரிந்து கொண்டு போராட்டத்தை நிகழ்த்தாமல் இதெற்கெல்லாம் விடிவு என்பதே கிடையாது.

போராடாமல் வாழ முடியாது என்பதையே தினந்தோறும் அரசின் நடவடிக்கைகள் அறைந்து சொல்லும் செய்தியாக உள்ளது.

முதலாளிகளும், தொண்டு நிறுவனங்களும் தான் எல்லாத்துக்கும் என்றால் என்ன வெங்காயத்துக்கு நீங்கள்?

கல்வி வேணுமா அதற்கு தனியார் நிறுவனங்களுக்கு போய் காசு கொடுத்து படித்துக்கொள், மருத்துவம் வேணுமா அதற்கும் தனியார் மருத்துவமனைக்கும், செட்டிநாட் மருத்துவ நகரம் போன்றவற்றிர்க்கும் போய் காசு கொடுத்து பார்த்துக்கொள், வேலை வேணுமா அதற்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு போங்க என தினந்தோறும் வெளிப்படையாக கூவுகிறார் கருணாநிதி.இது போக மருத்துவ உதவி, கல்வி உதவி வேணுமா அதற்கு ஆதி பராசக்தி, அமிர்தானந்த மாயி, நாராயண பீடம் போய் மனு போடுங்க; மேலும்- தொண்டு நிறுவனங்களும் வந்து உதவி பண்ண சொல்கிறேன் என்கிறார்.


இப்படி எல்லாத்தையும் மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு எங்க(!) அரசு என்ன செய்யும் என்றால், சாராயம் விக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவன் வாங்கி தந்த கார், பைக்கில் தனது அடியாள் படையினை அனுப்பி மக்களை ஒடுக்கும்., குறிப்பாக முதலாளிகளுக்கான வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்கும்.

இதன் மூலம் கருணாநிதி அறிவிப்பது:


"ஏகாதிபத்திய தாசன் தான்" நான் என்பதும்


"இந்த அரசு மூலம் மக்கள் நலனுக்கு எதுவும் செய்ய முடியாது" என்பதையும் தான்.

Sunday, February 17, 2008

"மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு தந்துவிட கூடாது" - ஆன்மிகவாதி கருணாநிதி

முன்னராக பாஜக என்ற "அக்மார்க்" இந்து மதவெறி அமைப்பை ஆதரித்து மத்தியில் அவர்களை ஆட்சியில் வைத்தவர் கருணாநிதி. அன்று அதே மதவெறியர்களால் குஜராத்-ல் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்யப்பட்ட போது தனது பதவியினை தக்கவைத்து கொண்டு பெளனம் காத்தவர் தான் இந்த கருணாநிதி.

ராமன் பாலம் என்ற மதவெறி கும்பலின் பிரச்சாரத்தை முதலில் எதிர்த்தவர் பின்னர் இதே பதவிகளை தக்கவைத்து கொள்ள அதற்கு 'ராமர் சேது பாலம்' என்று கூட பெயர் வைக்கலாம் சாந்தியாகிவிட்டார்.

இன்று இவரது செயல்களை விமர்சிக்கும் கூட்டணிக் கட்சிகளை பார்த்து மிரட்டுகிறார் "மதவாத சக்திகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள்" என்று. பின்னர் நாராயண பீடத்தின் மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று "அறிவும் ஆன்மீகமும் இரட்டைக் குழந்தைகள்" என்று பிரச்சாரம் செய்கிறார்.

Tuesday, February 12, 2008

சரத் அண்ணே வர்ராரு - ராதிகா அண்ணி வர்ராங்க!


2011-ல் எங்க ஆட்சி தான் என அறிவித்துகொண்டே அகில இந்திய நாடார் சாதி 'கட்சி' ஆரம்பித்து உள்ளார்கள் சரத்குமார் & ராதிகா என்ற சினிமா கழிசடைகள். இந்த இரண்டு கழிசடைகளின் வரலாற்றை மக்கள் ஒரு முறை மனக்கண்ணில் ஒட்டுபார்ப்பது நல்லது. ஏனெனில் எதிர்காலத்தில் உங்கள் வீதிகளில் இவர்கள் வரும்போது நீங்கள் எத்தனை செருப்படிகளை கொடுக்கனும் என தெரியனும் அல்லவா. அதனடிப்படையில் புதிய ஜனநாயகத்தில் வந்த - "நாட்டாமை யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை" என்ற கட்டுரையினை மறுபதிப்பு செய்கிறோம்.

*************************************************************

""நம் இலக்கு எப்பவுமே உயர்வாக இருக்கவேண்டுமென நினைப்பவன். எங்கள் சமத்துவக் கொள்கைகளை எடுத்துச் சென்று மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லமுடியும். சாதிக்கவும் முடியும். இப்பவும் சொல்கிறேன். 2011ம் வருடம் என்னை தமிழக முதல்வராகப் பார்ப்பீர்கள்.'' (19.9.07, குமுதம்) இப்படிப் பச்சையான சுயநலத்தைக் கக்கியிருப்பது ""அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி''யைத் தொடங்கியிருக்கும் சினிமாக் கழிசடை சரத்குமார். அவரது இரசிகர்களால் "பச்சைத் தமிழர்' என்று அழைக்கப்படும் சரத்குமாரை கழிசடை என்றும் சுயநலவாதி என்றும் மதிப்பீடு செய்வதற்குக் காரணம் நமது விருப்பமல்ல; இந்த "சுப்ரீம் ஸ்டாரி'ன் வரலாறே அப்படித்தான் உள்ளது.

தான் விஜயகாந்த் போல திடீரென்று அரசியலுக்கு வரவில்லை எனவும், பதினைந்து ஆண்டுகளாக இரண்டு கழகங்களிலும் தீவிரமாகப் பணியாற்றியவன் என்றும் தனது கட்சியைத் தொடங்கியதற்கான தகுதிகளை சரத்குமார் முன்வைக்கிறார். உண்மையில் இவரது தீவிரப் பணி என்னவாக இருந்தது?

இளைஞனாக இருந்த போது பெங்களூரு தினகரனில் பணியாற்றினார். பின்னர், பம்பாய் சென்று ஆணழகன் ஆனார். பிறகு, சென்னை வந்து வட்டித்தொழில் செய்தார். சினிமாவுக்கும் பைனானைஸ் செய்தார். சினிமாத் தொடர்பு வந்த பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்து, வில்லனாக அறிமுகம் ஆனவர், இறுதியில் கதாநாயகனானார். ""நாட்டாமை'' திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு வந்த ஜெயலலிதா முன்பு இரட்டை இலை சட்டை போட்டு சேவகம் செய்தார்.

இந்த அடிமையிடம் அனுமதி பெறாமலேயே ஜெயா டி.வியில் ""நாட்டாமை'' படம் வெளியிடப்பட்டது. இதனால் கோபம் கொண்டு தி.மு.க.வில் இணைந்தார். இப்படி இவர் அரசியலில் இணைந்ததற்கும், பிரிந்ததற்கும் கொள்கையோ, மக்கள் நலனோ காரணமல்ல. பால்கனியிலிருந்து இரசிகர்களை மந்தைபோலப் பார்க்கும் ஒரு நட்சத்திர கதாநாயகனது திமிர்தான் அவரது அரசியல் வாழ்வைத் தொடங்கி வைத்தது. இடையில், தங்களது பைனான்ஸ் தொழிலுக்காக கோடிக்கணக்கில் கடன் வாங்கி ராயப்பேட்டை நிதி நிறுவனத்தை திவாலாக்கிய நடிகர்களில் சரத்குமாரும் ஒருவராக இருந்தார். சொத்துப் பிரச்சினையாலும், நக்மா பின் சுற்றியதாலும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ராதிகாவின் கம்பெனிக்காக டி.வியில் ""கோடீஸ்வரன்'' நிகழ்ச்சியை நடத்தியபோது, ராதிகாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. சரத்குமாரின் கடனை ராதிகா அடைப்பது எனவும், சரத்குமார், ராதிகா கம்பெனிக்காக திரைப்படத்தில் நடிப்பது என்றும் வர்த்தக ரீதியில் பேசிக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

நடிகர் என்ற முறையிலும், ராதிகாவுக்கு கருணாநிதியுடன் உள்ள நெருக்கத்தாலும் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்து, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இதை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளாமல், தி.மு.க. தொண்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் பின்புலமாக நாடார் சாதி பத்திரிகை அதிபர்களும், தொழிலதிபர்களும் சாதியை வைத்து சரத்குமாரை முன்நிறுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தி.மு.க.விடமிருந்து இராஜ்ய சபா உறுப்பினர் பதவி சன்மானமாகக் கிடைக்கிறது.

ஆயினும் அவரது அதிகார வெறி அடங்கவில்லை. தனது இரசிகர்களை வைத்து மத்திய மந்திரி பதவி வேண்டும் என சுவரொட்டி ஒட்டச் செய்தார். நாடார்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என அச்சாதி பிரமுகர்களை வைத்துப் பிரச்சாரம் செய்ய வைத்தார். ஏதோ ஒரு பொங்கல் விழாவில் தயாநிதி மாறன், நடிகர் விஜயை வைத்து அஞ்சல் தலை வெளியிட்டார். இதனால் தன்னைப் புறக்கணித்து விட்டதாகப் புரளி பேசினார். அறிவாலயத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவமரியாதை அடைந்ததால் தி.மு.க.வை விட்டு விலகப்போவதாகக் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பினார். எல்லாம் எலும்புத் துண்டு கிடைக்காதா என்ற நப்பாசைதான்.

ஆயினும் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் சாகும் வரை கலைஞரின் தலைமையில் செயல்படுவதாகவும், செத்தால்கூட தன் உடல் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப் படவேண்டும் என முழங்கினார். முழங்கிய எச்சில் உலருவதற்குள் 2006 சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.கவில் இணைந்தார். இதற்காக சாராய மன்னன் விஜய மல்லையாவின் தனி விமானத்தில் பச்சைப்புடவை கட்டிய ராதிகாவுடன் மதுரை சென்று, பின்னர் ஆண்டிப்பட்டியில் பாசிச ஜெயாவிடம் போஸ் கொடுத்தவாறு சரணடைந்தார். இந்தச் சரணடைவு உண்மையில் ஒரு வர்த்தக பேரமாகும். இதன் வரவுசெலவு அம்சங்கள் சிங்கப்பூரில் சசிகலா நடராஜனுடன் பேசி முடிவு செய்யப்பட்டன. இதன்படி சரத்குமாருக்குக் கிடைக்க வேண்டிய கணிசமான தொகையும், ராடன் நிறுவனத்துக்கு அளிக்கப்படும் தொலைக்காட்சி நேரமும் உறுதி செய்யப்பட்டது.

ஆயினும் பேசியபடி எலும்புத் துண்டுகள் ஜெயலலிதாவால் தரப்படவில்லை. இதனால் கசமுசா ஏற்பட்டு ராதிகா அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். சரத்குமாரும் தனக்கு அரசியல் செய்ய நேரமில்லை என்று யாரையும் குற்றம் சாட்டாமல் நாசூக்காக அ.தி.மு.கவிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதியில் நாடார் சாதி பிரபலங்கள், சரத்குமாரை வைத்து தனி ஆவர்த்தனம் தொடங்கினால் மற்ற கட்சிகளிடம் பேரம் நடத்த தோதாய் இருக்கும் என்று முடிவு செய்து தனிக்கட்சி ஆரம்பித்து விட்டனர். நாடார் சாதி மக்களை விற்றுக் காசு பார்ப்பதற்கென்றே "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' தொடங்கப்பட்டிருக்கிறது. சரத்குமாரிடமிருந்து வரும் ஒவ்வொரு அரசியல் ரீதியான அறிக்கையிலும் அவரது வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும். தற்போது சன் டி.வி.யில் ராடன் டி.வி ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால், சன் டி.வி.யின் டி.டி.எச். ஒளிபரப்பை ஆதரித்தும் தி.மு.வைக் கண்டித்தும் சரத்குமார் அறிக்கை வெளியிடுகிறார்.

தற்போது சேது சமுத்திரத் திட்டத்தை ஒட்டி பா.ஜ.க எழுப்பிய இராமர் பாலம் பிரச்சினையில் இந்து மதவெறியர்களின் அணியில் இருந்து கொண்டு, ""இந்துக்களைப் புண்படுத்தியதற்காக கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கொழுப்புடன் அறிக்கை விடுகிறார். "எதிர்காலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் மந்திரியாக மாட்டோமா' என்ற பேராசைதான்!

1966இல் காமராசரைக் கொலை செய்ய டெல்லியில் அவரது வீட்டுக்குத் தீ வைத்த இந்து மதவெறியர்களை ஆதரித்துக் கொண்டே, சாதி ஒட்டுக்களைக் கவர்வதற்காகவும், காசு வசூல் செய்து தின்னவும், காமராசருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக முழங்கும் இந்தப் பிழைப்புவாதி, தென்மாவட்ட மக்களுக்கும் நாடார் சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் அப்பட்டமான எதிரி என்பதே உண்மை.

தனது சாதி மக்களை வைத்து உயர் பதவி அடையவேண்டும் என்று அரசியலில் குதிக்கும் சரத்குமார், உண்மையில் நாடார் மக்களுக்குச் செய்தது என்ன? தாமிரபரணி நீரை கொக்கோ கோலா நிறுவனம் உறிஞ்சி எடுப்பது அப்பகுதி விவசாயிகளுக்கு — அதில் கணிசமானோர் நாடார்கள் — இழைக்கப்படும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராக சரத்குமார் வாய்திறக்கவில்லை என்பது மட்டுமல்ல; சமீபத்தில் கோக்கில் பூச்சி மருந்து கலந்திருப்பது சந்தி சிரித்து அதன் விற்பனை வீழ்ச்சியடைந்தபோது, சரத்குமாரின் மனைவி ராதிகா, ""கொக்கோ கோலா பாதுகாப்பானது''' என்று விளம்பரப் படத்தில் நடித்துச் சிபாரிசு செய்தார். நாடே காறி உமிழ்ந்தது. ஆனால், "நாட்டாமை'க்கு எச்சில் பிரச்சினை அல்ல; காசு மட்டும்தான் குறி.

சில்லறை வணிகர்களில் பெரும்பாலானோர் நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள். இவர்கள் வாழ்வை அழிக்க வந்துவிட்ட ரிலையன்ஸை எதிர்த்து வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தபோது, "நாட்டாமை' ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கொண்டிருந்தார். தன் சொந்த சாதி மக்கள் மீது இந்த வேடதாரி வைத்திருக்கும் நேசத்தின் இலட்சணம் இதுதான். தற்போது டைட்டானியம் ஆலை விவகாரத்திலும் ""இந்தியாவின் தொழில் தந்தையான டாடாவை நான் எதிர்க்கவில்லை. உரிய விலை கொடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை'' என்று தரகு வேலை பார்த்தார் இந்த வியாபாரி.

இத்தகைய பச்சையான சுயநல, சந்தர்ப்பவாத, துரோகிகள் கட்சி ஆரம்பிப்பதும், முதல்வராகப் போவதாகப் பேசித் திரிவதும் மக்களுக்கு மாபெரும் அவமானம். இந்த அவமானத்தைத் தீர்க்கவேண்டுமெனில் இத்தகைய பேர்வழிகள் அரசியல் என்று பேசினாலே அடித்துத் துரத்தவேண்டும் அல்லது முளைக்கும் போதே "மணிமண்டபம்' கட்டி விடவேண்டும். அதையும் குறிப்பாக நாடார் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களே செய்து முடித்தால், சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.
-பச்சையப்பன்

Monday, February 11, 2008

குழந்தைகளை கூட தாக்கும் மூலதனத்தின் அதிகாரப்பூர்வ அடியாட்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் 10.1.2008 அன்று, அயல்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய கைப்பையை பறித்ததற்காக, காவல் துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஒன்பது வயது சச்சின்(இடது) கடும் காயங்களுடன் இருக்க, அவரது ஐந்து வயது தங்கை பிந்தியா, வலி தாங்க முடியாமல் கதறுகிறார்.

"பன்னாட்டு நிறுவனங்கள் தான்டா 'எங்கள் எஜமானர்'கள்" - கமல்நாத் ஒப்புதல்


"ஏகாதிபத்திய திட்டமானாலும் பார்ப்பனீயத்துக்கு எதிராக என்றால் செய்ய மாட்டோம்" - 'அம்பி'கா சோனி


"தமிழகத்தை அன்னியனுக்கு முழுமையாக விற்காமல் ஓயமாட்டேன்" - கருணாநிதி அறிவிப்பு


"மத்திய அரசை கவிழ்க்க எங்க கம்பெனிக்கு அதிகாரம் இல்லை" - கார்ப்பரேட் பார்ட்டி ஆ·ப் இந்தியா (டாடாயிஸ்ட்) திட்டவட்ட அறிவிப்பு


"அடிமைசாசனத்தை இப்பவே நிறைவேற்றுங்கள்" - டேவிட் முல்போர்டு


Sunday, February 10, 2008

"ராமதாஸ் நல்லவர் தாங்க" - மறைந்த அறிஞர் அண்ணா அறிவிப்பு

சேது சமுத்தர திட்டத்தை தொடங்கி வைத்த, ஆதரித்த பாஜக, செயலலிதா போன்ற பார்ப்பன மதவெறி கும்பல் தற்போது ராமன் பாலம் என புராண புரட்டை கொண்டு மதவெறி அரசியலை நடத்தி வருகிறது. இதில் ராமன் குறித்து சிறிது சீறிய கலைஞர் பின்னர் பின் வாங்கினார். அவர் தலைக்கு விலை வைத்தவுடன் தான் திமுக அணிகளுக்கு சுயமரியாதை வந்தது, உடனே அதுவும் அடங்கியது.

ஆனால் ஆரம்பித்தில் இருந்தே இந்த ராமன் பாலம் புரட்டை ஒட்டிய பார்ப்பன மதவெறி கும்பலை, ராமதாஸ் உள்பட்ட எந்த ஓட்டுப்பொறுக்கியும் கண்டிக்க வில்லை.

சேது கால்வாய் என்பது பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்கானது என்பது வெள்ளிடைமலை. ஆனால் பார்ப்பன பயங்கரவாதிகளின் ராமனுக்கு சாவுமணி அடிக்கும் என்பதில் இதனை நிறைவேற்றனும் என "ராமன் பாலம் என்பது புராண புரட்டு, பார்ப்பன மதவெறி கும்பலை விரட்டு" என்று தமிழகம் முழுவதும் ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தான் பார்ப்பன மதவெறி எதிரான பிரச்சாரத்தை வீச்சாக எடுத்து சென்றது.

இன்று ஓட்டுப்பொறுக்கிகள் உள்ளிட்ட ஏகாதிபத்திய தாசர்கள் சேதுகால்வாயினை மாற்று வழியில் நிறைவேற்றினாலும் சரிதான் என பார்ப்பன புரட்டுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி கூறியவர்களில் 'ராமதாஸை' மற்றொரு ஏகாதிபத்திய அருவருடி 'வீரமணி' அவர்கள் கண்டித்து அறிக்கை விட்டார்.

இதில் "வீரமணிக்கு இதற்கு எந்த அருகதையும் இல்லை எனவும், அவருக்கு பதில் அளித்தும் தமிழ் ஓசையில் வந்த கட்டுரை"யினை கேள்விக்குள்ளாக்கியே இந்த பதிவு.

வீரமணிக்கு 'அருகதை' பற்றி உண்மையினை கட்டுரையில் சொல்லவில்லை என்பதால் அதனை முதலில் சொல்லிவிடுவோம்.

ஐயா வீரமணி அவர்கள் "பெரியார் புரா" என்ற அரசு சாரா நிறுவனத்தை ஆரம்பித்து மக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக திரும்ப விடாமல் வேலைசெய்கின்ற - தலைமை என்.ஜி.ஒ வை நடத்துபவர். அரசியலில் கலைஞருடன் கூட்டு (தற்போது), தொழிலில் சசிகலா மருத்துவமனையுடன் கூட்டு என இரட்டை வேடம் போடுபவர். மேலும் "வாழ்வியல் சிந்தனைகள்" என "பணம் படைத்தவனுக்கு தான் இந்த உலகம், இல்லாதவன் இருப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்" போன்ற அயோக்கியத்தனமான கருத்துகளை எழுதி தள்ளுபவர். மொத்தத்தில் பெரியார் என்ற சுயமரியாதைக்காரின் பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்துவரும் வியாபாரி.

ஆனால் இப்படி உண்மைகளில் ஒன்றைக்கூட சொல்லவில்லை தமிழ் ஓசை கட்டுரை. அதில் இரண்டு பதில்களை மட்டும் கொடுத்து உள்ளார்கள்.

ஒன்று தினமும் அறிவுரை சொல்வது தவறு என்பதற்கு, அது "ஜனநாயக கடமை" எனவும், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி (சந்தர்ப்பவாதம்) மாறியவர் என்பதற்கு, "தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறலாம், அதனால் இலட்சியம் திசைமாறுவதாக கருதக் கூடாது என அண்ணாவே கூறியுள்ளார்" என அண்ணாவின் உரைகளை எடுத்து போட்டு இங்கு போலிக் கம்யூனிஸ்டுகளிலிருந்து யாருமே யோக்கியம் இல்லை ஆனா, பாமக வை மட்டும் குறைகூறுவது எப்படி?. மேலும் மக்களே இந்த குற்றசாட்டை ஏற்கனவே புறக்கணித்து விட்டார்கள் எனவும் அடித்து சொல்லி உள்ளார்கள்".

இப்ப பதில்களை அலசுவோம்:

அரசின் மக்கள்விரோத கொள்கையினால் மக்கள் அன்றாடம் செத்துகொண்டுவருகிறார்கள், ஆனால் நீங்க தைலாபுரம் தோட்டத்தில் உட்கார்த்து கருத்து சொல்லிவிட்டு அரசை ஆதரித்து நிற்கும் அயோக்கியத்தை எப்படீங்க ஏத்துகொள்ள வைக்க முற்படுகிறீர்கள். அந்த மக்கள் விரோத கொள்கையின் அடிப்படையான உலகமயம், தனியார்மயம், தாராளமயம் குறித்து உங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியமா?. உங்களிலிருந்து சரத், விசயகாந்த, போலிகள் வரை எல்லோரும் இந்த கொள்கையினை ஏற்றுகொண்டவர்கள் தான். பின்னர் எப்படீங்க மக்கள் நலன், மக்கள் தொலைக்காட்சி என உதார்விடுகிறீர்கள்...

அடுத்து அண்ணா மேற்கோளை போட்டு கூட்டணியினை நியாயப்படுத்தியுள்ளது. ஏங்க, 'அண்ணா' என்ன யோக்கிய சிகாமணியா, அவர் சொன்னா அது நியாயமாகிவிடுமா?. முதலில் அவரையே நியாயப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம். திமுக எப்படி உருவானது என வரலாறு தெரியாதவங்க யாராவது இருந்தா அவங்க வேணா நம்பலாம். நீ கூட்டணி மாறிய பச்சைவோந்தி என்றால் அதற்கு, யார் தான் இங்க யோக்கியம் என கேள்வி எழுப்பி நியாயப்படுத்த முற்படுவது என்னையா நியாயம். அரசியல்வாதி என்றாலே கொலை, ஊழல் செய்வது இயற்கைதான் என்பதுபோல கூட்டணி என்ற சந்தர்ப்பவாதத்தை ஓட்டுபொறுக்கிகளின் இயல்பான ஒன்றாக நியாயப்படுத்த பார்க்கின்றீர்கள்.

மொத்தத்தில் கலைஞர், வீரமணி, ராமதாஸ் என யாருமே பார்ப்பன மதவெறி கும்பலை எதிர்கொள்ளவோ, மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கவோ முடியாது. ஏனெனில் இதில் சமரசம் செய்து தான் தங்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் குறித்து கவலைபடும் 'குடி'மக்கள் நாங்கதான் - ஜெ&கலைஞர்

பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படாமல் இருக்க நியாய விலை கடைகளில் இதனை 6 மாதங்களாக வழங்குவதை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளதாக சட்டபேரவையில் கலைஞர் அறிவித்தார்.

இவ்வாறு பொருட்கள் வழங்கவில்லை என்பதே உண்மை. இதனை தற்போது 'புரட்சி தலைவி' செயலலிதா குற்றசாட்டை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை.

விசயத்துக்கு வருவோம்....

6 மாதங்களுக்கு முன் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைவாக இருந்ததாகவும், இன்னும் 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துவிடும் எனவும் போல இருக்கிறது கலைஞரின் அறிவிப்பு. வாங்கும் சக்தி இல்லாமல் மக்கள் பசி,பட்டினிக்கு ஆளாகி கொண்டுவரும் நிலையில் எப்படி கதை விடுகிறார் பாருங்க. பொருட்கள் வழங்கவே இல்லை என்கிற போது அது எதுக்கு 6 மாதம் என கதை அளப்பது, பேசாம தொடர்ந்து கொடுப்போம் என கூட சொல்லவேண்டியது தானே. அவ்வாறு சொல்ல இவர்களால் முடியாது !

நியாயவிலை கடைகளில் இவ்வாறு பொருட்களை வழங்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. உலக வங்கியிடமே உள்ளது இந்த அதிகாரம். அவன் கடையையே முட சொல்லி வரும் போது இதனை யோசிக்க கூட முடியாது. இதுல இன்னொரு ஓட்டுபொறுக்கி கழிசடை விசயகாந்த் என்னான்னா இந்த குறைந்தபட்ச அரசியல் கூட தெரியாமல் நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கே வந்து பொருட்கள் கொடுப்பேன் என கதைவிடுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் குறித்து கவலைப்படும் இவர்கள் யோக்கியதைக்கு ஒரு சான்று:-

மக்களை சிந்தனையினை மழுங்கடிக்கும் மதுக்கடையினை தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை 'முத்தமிழ்' கலைஞரை சாரும் என்றால் கடைகளை அதிகமாக்கி அரசே ஏற்று நடத்தும்படி செய்த பெருமை 'டாஸ்மாக்' செயலலிதாவை சாரும். அடுத்து மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றுக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்து ஊதும் ராமதாஸ் குடும்பம் இது குறித்து பேசுவது ஓட்டுபொறுக்கி அரசியலில் தன்னை மாற்றாக காண்பிக்கதான். மற்றபடி இவர்கள் அனைவரும் உலகவங்கி ஆணைக்கு கட்டுபடும் அருவருடிகள் தான்.

"தமிழனை அழிப்பவன் தான் தமிழன்" - கலைஞர் பேச்சு

2 ரூபாய்க்கு அரிசி வாங்கித்தான் 'வாழ முடியும்' என தமிழனை ஆக்கியதில், செயலலிதாவை விட 5வது முறையாக முதலமைச்சராக இருக்கின்ற கருணாநிதிக்கு தமிழனை அழித்த 'பெருமை' உண்டு என்பதே நிதர்சனம்.

செயலலிதா தினமும் 20 மணி நேரம் "தமிழனை அழிக்க" பணியாற்றியதை மெச்சிய வீரமணி, சரத்குமார் போன்றோர் கூட கலைஞர் அவர்கள் தினமும் 4 மணிக்கு எழுந்து இதே பணியினை ஆற்றுவதை மறுக்க முடியாது.

இப்படி இவர்கள் அழித்த தமிழனை நாடெங்கும் வீதிகளில் காணலாம். ஆனால் ஓட்டுபொறுக்கிகளால் தான் பார்க்க முடியாது, ஏன்னா இவர்கள் தான் காரின் ஜன்னல்களை இறக்குவதே கிடையாதே.

அரசு 'டாஸ்மாக் கடை'யில் மட்டும் கூட்டம் இல்லைங்க, தனியார் 'கல்வி கடையிலும்' தான்!

சாந்தோம் பகுதியில் ஒரு கல்வி வியாபாரக் கடையில் எல்.கே.ஜி சீட் விற்பனை அறிவிப்பை தொடர்ந்து அலைமோதும் நடுத்தர வர்க்கம்.

மருத்துவ சேவையினை வியாபாரமாக மாற்றிய ஓட்டுப்பொறுக்கிகளின் அதிரடி நடவடிக்கை!

"சிறுநீரக கோளாரை விட சிறுநீரகத்தையே திருடுவதால் மக்களை சீக்கிரம் கொன்றுவிடலாம்"

'அப்பாவி ஈராக்கியனை கொன்றேன்' என ஒத்துக்கொண்ட அமெரிக்கனுக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை வெறும் 4 மாதங்கள்!


Friday, February 8, 2008

"நாங்க மக்கள் விரோதிகள் தான்" - திமுக, அதிமுக ஒப்புதல் வாக்குமூலம்


விஜயாந்த், சரத்குமார் போன்ற புதிய ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகள் கோடிக்கணக்கான ரூபாய் வாரி இறைத்து மக்களை கொள்ளையிட தயாராகிவருகின்றனர் என்றால் இதுலேயே பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் என்ன செய்வார்கள் என அரசியல் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.

இதுல புதிய விஷயம் என்னவென்றால், தமிழ் புத்தாண்டு தினத்தை அறிவித்த கலைஞருக்கு பாராட்டு விழா பிப் 9 நடக்கவிருக்கிறது இதற்காக வள்ளுவர்கோட்டம் ஒரு வாரமாக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சென்னை மற்ற இடங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனை நம்ம 'புரட்சி' தலைவி அப்பாவியாக கண்டித்து உள்ளது தான் ஹைலெட். அடிதடி, ஊழல் எதுவானாலும் காமராஜர், அண்ணா இருந்து அனைவரும் செய்துவரும் நிகழ்வானாலும் இவர்கள் இதனை கண்டிக்கும் போது வராத நகைசுவை செயலலிதா கண்டிக்கும் போது வருகிறது. அந்த அளவுக்கு வெளிப்படையாக ஆட்டம் போட்ட நடிகை இவர்.

வளர்ப்பு மகன் திருமணம் உள்பட செயலலிதா செய்யாததா என மக்கள் இப்ப கேட்ட அதில் அர்த்தம் இருக்கும்.இதனையே எதிர்கேள்வியாக ஜெவுக்கு ஆற்காட்டார் கேட்கிறார்.
..
இந்த இரண்டு ஓட்டுபொறுக்கிகளும் நாங்க யார் என மக்களுக்கு அறிவிக்கின்றனர். மக்களும் இவர்கள் அனைவரையும் இணைத்து பார்த்து புரிந்து கொள்ளாமல் அவர்களின் சாதுரிய அறிக்கைகளை ரசிக்க பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

திறந்தவெளி பல்கலைகழகம் காசு சம்பாதிக்கதான் - அரசின் உறுப்பு அறிவிப்பு !

எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியின் முதல்வராக இளக்கலை பட்டம் பெறாமல் முதுநிலை பட்டம் பெற்ற ரமேஷ் அவர்களை நியமித்தது தவறு. உடனே அவரை பதவி விலக செய்து புதிய 12ம் பகுப்பு படித்து பட்டம் பெற்ற அறிவாளியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் நேரடி பட்டம் எதுவும் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியானதல்ல என தனது தீர்ப்பு-ல் கூறியுள்ளது. இதுவும் முதலில் வழக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்த நீதிமான்கள், பின்னர் உச்சநீதிமன்ற ஆணைக்கு பின் தன் கடமையினை செய்து (அ)நீதியை நிலைநாட்டியுள்ளது.

சரி விஷயத்துக்கு வருவோம்.

12ம் வகுப்பு வரை படிக்காமல் நேரடி பட்டம் பெறுவது வேலை வாய்ப்புக்கு தகுதியானதல்ல என்றால்.... என்ன புடுங்குவதற்கு அதனை வைத்து உள்ளீர்கள். மக்களின் அறிவை வளர்ப்பதற்கு என கதை விட்டுவிடாதீர்கள்.
..
12ம் வகுப்பு, பட்டங்கள் என உங்கள் அனைத்து கல்வி முறையும் அறிவியல் விரோதமானது என்பது வெட்டவெளிச்சம். வெந்தது,வேகாதது, அரைகுறை ஆங்கிலம் என அரைத்து கொண்டு, பன்னாட்டு பல்கலைகழகங்களுடன் கூட்டு சேர்ந்து அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் ஏஜெண்டாக தான் செயல்படுகிறது உங்கள் கல்வி முறை. 80% மேல் தனியாரின் கைகளுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

1950-ல் இன்னும் பத்து ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என சூளுரைத்தவர்கள் இதனை, 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்ற முடியவில்லை. படிப்பை பாதியில் விட்டவர்கள், பள்ளிக்கே செல்லாதவர்களில் சிலர் இந்த நேரடி பட்டம் முடிக்கின்றனர். இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இதே அரசுதான் 'வேலைவாய்ப்புகானது அல்ல நேரடி பட்டம்' என அறிவிக்கிறது.


"வேலைவாய்ப்பு கிடைக்கும்"- காங், திமுக, பாஜக விலிருந்து போலிகள் வரை விடுக்கும் ஒரே புருடா இதுதான்!

நெப்போலியன் என்ற திடீர் பணக்கார அரசியல் ரவுடி புதிதாக ஆரம்பித்துள்ள ஜீவன் டெக்னாலஜிஸின் கட்டிடத்தை திறந்து வைக்கும் போது கலைஞர் நாட்டை 19 மாதங்களில் எத்தனை கம்பெனிகளுக்கு கூட்டுகொடுத்தோம், காலையில கூட சில ஒப்பதங்கள் போட்டுவிட்டு தான் வந்து உங்கள் முன் அமர்ந்து உள்ளேன் என தனது துரோகத்தை 'மக்கள் நலன்' என கட்டுரை வாசித்தார்.

ஆனால் ஏன், நாட்டை பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்கு உண்மையான காரணத்தை எந்த ஓட்டுபொறுக்கி அரசியல்வாதியும் கூறமாட்டான்.இவனுங்களாகவே வேலைவாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என அறிவித்துவிடுகிறார்கள். அதற்கும் மீறி நந்திகிராம் போன்ற போராட்ட மக்களை எதிர்கொள்ளும் போது இதே கதையை தான் அளிக்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் வேலைவாய்ப்பு என நாட்டின் அனைத்து வளங்களையும் தாரை வார்க்கும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அதிகாரத்தை கொடுங்கடா நாங்க பார்த்துகொள்கிறோம், வேலை வாய்ப்பு என்ற பெயரில் நாட்டை ஏன்டா பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக்குறீங்க என மக்கள் மார்க்சிய - லெனினிய பாதையில் அணிவகுக்கும் போது இந்த அருவருடி கூட்டம் கொல்லைப்புறம் வழியாக ஓடிக்கொண்டு இருக்கும்.

ஓட்டுபொறுக்கி அரசியலுக்கு நான் புதிவன் அல்ல ! - சரத் குமார்

Related:

நாங்க தான் அமைச்சரவையில் முடிவு எடுத்தோம், இப்ப போராட்டம் என நடிக்குறோம் - ராமதாஸ் சவால்


மலையளவு பன்னாட்டு கம்பெனிகள் குவிந்தாலும் நான் சமாளிப்பேன் - கலைஞர் கலக்கல் பேட்டி



Friday, February 1, 2008

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!


நன்றி லேமூரியன்

அதாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.



இப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.



இது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.



இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.



பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.



ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.



செய்திரசம்



Related Articles:

“குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்”
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …
பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!



டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது.

நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது.கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர்.

நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர்.தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது.கிராமப் பகுதிகளில் சராசரி இந்தியர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும் 53 பைசா உணவுக்கே செல்கிறது.

நகர் பகுதிகளில் இது 40 பைசாவாக உள்ளது.ஒரு பக்கம் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் பாய்கிறது, சரிகிறது. இன்னொரு பக்கம் இந்தியா 9 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசு கோஷம் போடுகிறது.

ஆனால், நாட்டில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் 'அரை டாலர்' வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


http://thatstamil.oneindia.in/news/2008/02/01/india-substantial-no-of-indians-spend-less-20.html


Related:
..

Thursday, January 31, 2008

"ஆங்கிலேயனுக்கு அடியாலாக இருந்த தேச துரோகியின் அஸ்தி கரைப்பு"

மும்பை: மகாத்மா காந்தியின் கடைசி அஸ்திக் கலசம் இன்று அரபிக் கடலில் கரைக்கப்படுகிறது.மகாத்மா காந்தி, 1948ம் ஆண்டு, ஜனவரி 30ம் தேதி டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது 60வது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன.
....
வெள்ளைக்காரனுக்கு வேலை செய்து நாட்டை காட்டி கொடுத்த துரோகி 'காந்தி'. ஆனா திட்டமிட்டு மூடிமறைத்து ஆளும் வர்க்கம் அவரை தேச தந்தையாக காட்டுகிறது. ஆனால் 60 ஆண்டுகால சுதந்திரத்தின் யோக்கிதை என்னவென்றும், நாடு வளரும் என்று மண்மோகன், சிதம்பரம் என அருவருடிகள் இன்னும் புருடா விடுவதில் இருந்து ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளனும், எவனுக்கு ஆதர்வாக காந்தி செயல்பட்டார் என.

இதற்கு பகத்சிங் பார்வையில் அணுக வேண்டும். இதேபோல காந்தியின் இந்து மதவெறியினை கண்டுகொள்ள பெரியாரையும், அம்பேத்காரையும் படிக்க வேண்டும். அப்போது தான் இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கும், இந்து பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கும் 'காந்தி செய்த வேலை'யினை தெரிந்து கொள்ள முடியும்.
.

Wednesday, January 30, 2008

"கழிப்பறை கட்டமாட்டோம், ஆனா ரோட்டில 'பிஷ்' அடிச்ச பிடிப்போம்" - ரிப்பன் மாளிகை அதிரடி

சென்னை மட்டுமல்ல, நாடு முழுவதும் பொது இடங்களில் கழிப்பறை என்பதே கட்டிக் கொடுக்கப்படவில்லை. இப்படி கழிப்பறையினை கட்டிக்கொடுக்காமல், மக்கள் சாலைஓரமாக சிறுநீர் கழித்தால் ரூ100 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதே போல மக்கின குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்காத சென்னை வீட்டு மக்களிடம் அபராதமாக ரூ 100ம், மருந்து சம்பந்தமான குப்பையினை சரியாக பிரிக்காதவர்களுக்கு அபராதமாக ரூ 500ம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


95% கழிப்பறைகளே இல்லை. மீறி இருந்தாலும் கட்டணக்கழிப்பறை என, சிறுநீர் கழிப்பதற்கே இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரிசியே இரண்டு ரூபாய்க்கு விற்றால்தான், மக்கள் வாங்க முடியும் & வாழ முடியும் என்ற நாட்டில் தான், 'பிஷ்' அடிப்பதற்கு இரண்டு ரூபாய் எனபதும், சாலை ஓரமாக அடிப்பவர்களுக்கு அபராதமாக 100 ரூபாய் என அறிவித்து உள்ளனர் என்பதை பொருத்தி - இந்த செய்திகளை பார்க்கும் போது தான் 'ஓட்டுப்பொறுக்கி அரசியலை' புரிந்து கொள்ள முடியும்.

"உலக நாட்டு மக்களை அழிக்கும் வரிசையில் அடுத்து ஈரான்" - போர்வெறியன் புஷ் அறிவிப்பு

அணுஆயுத தயாரிப்பை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம் என புஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளான். உலகில் அணுஆயுதத்தினை முதல் முதலில் பயன்படுத்தி ஜப்பானில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது தான் இந்த அமெரிக்கா. அடுத்தடுத்து மூன்றாம் உலக நாடுகள், எண்ணெய் வளங்கள் உள்ள நாடுகள் மீது போர் தொடுத்து கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இதில் சமீபத்தில் ஈராக்கில் அணுஆயுதம் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து அந்த நாட்டை கபளிகரம் செய்தது.

இதனுடைய தொடர்ச்சியாக தான் தற்போது அடுத்த குறியாக ஈரானை தேர்தெடுத்து உள்ளான் அமெரிக்க போர்வெறியன் புஷ்.

"மக்கள் மூளைகளை மழுங்கடிக்கும் சாராயக்கடைகள்" - இந்தியாவில் தமிழகத்திற்கு 3வது இடம்

இன்று நாட்டை மீண்டும் காலனியாக்கப்படுவது வெகு விரைவாக நடந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு இந்திய அருவருடிகள் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு வருகின்றனர். இதனை மக்கள் உணராதபடி (அதாவது நாடு அடிமையாகி கொண்டுவருவதை) இருக்க கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் இந்த மறுகாலனியாதிக்கத்தை ஆதரித்தும், இதனை மக்கள் தானே ஏற்றுகொள்ளுமாறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது; கலாச்சார சிரழிவுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இவற்றுடன் மக்களின் சிந்தனையினையே மழுங்கடிக்கும் வகையில் சாராயக் கடைகள் நடத்தப்படுகிறது.


இந்தியாவில் காந்தி என்ற ஆங்கிலேயனின் அடியாளின் நினைவாக குஜராத்தில் மட்டும் (அங்கு 'கள்ளச்சாராயகம்' என்ற ஆறே ஓடுகிறது) மதுவிலக்கு அமல் செய்துவிட்டு மற்ற பகுதிகளில் சாராய வியாபாரம் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் சாராடக்கடைகளை அரசே ஏற்று நடத்தி சாதனை படைத்துவிட்டது. இப்போது இன்னொரு சாதனையாக சாராய விற்பனையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை எட்டியுள்ளது.


நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதில், தமிழகத்தில் தினமும் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்து உழைத்து வரும் கலைஞர் அவர்கள், சாராய விற்பனையில் சாதனை படைத்து உள்ளார் என்பதை பொருத்தி பார்க்க வேண்டும். அதாவது மக்கள் சிந்தனையினை மழுங்கடிப்பதன் மூலமே உலகமயமாக்கலை விரைவாக அமல்செய்ய முடியும்.அதில் சாராயத்தை பங்கை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து உள்ளனர்.


இதேவேளையில் சாராயத்தை எதிர்க்கும் பாமக, மந்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி வைத்துக்கொண்டு அதன் உலகமயமாக்கல் கொள்கையினை ஆதரித்து வருகிறது. மக்களை பசி,பட்டினிக்கு ஆளாக்கும் மக்கள் விரோத கொள்கையான உலகமயமாக்கலை எதிர்க்காமல் 'சாராயத்தை எதிர்க்கிறோம், தமிழை பாதுகாப்போம்' என இது போன்ற எதிர்கால கலைஞர்களும் (ராமதாஸ்), ஜெயலலிதாக்களும் (விசயகாந்த்) கதை அளந்து வருகின்றனர். மீண்டும் புதிய அருவருடிகளிடம் நாட்டை ஒப்படைப்பதால் ஒரு விமோசனம் இல்லை என்பதை மக்கள் உணரும் போதுதான் இதனை முடிவுக்கு கொண்டு வரமுடியும்.


"மக்கள் உயிரினை அழிப்பவனுக்கே தண்டனை கொடுக்காத நாட்டில் உடல் உறுப்பினை திருடுபவனுக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும் இவர்களால்"

Tuesday, January 29, 2008

"தனியார் என்றாலே லாபநோக்கமாகத்தான் செயல்படுவான் என தெரியாது" - அமைச்சர் அன்பழகன் சுற்றும் 'பூ'

தமிழ்நாட்டில் கல்லூரிகள் வணிக நோக்கத்துடன் செயல்படுவது கவலையளிப்பதாக நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இவ்வாறு அரசு கல்லூரிகளை குறைத்து, தனியார் கல்லூரிகளையும் மிக அதிகமாக கொண்டு வந்ததே இவர்களை போன்ற ஆட்சியாளர்கள் தான்.

இப்படி கவலைப்படும் அமைச்சர் குறைந்தபட்சம் அதிககட்டணம் வாங்கியதில் பிடிபட்ட( விசயகாந்த், ஜேபியார் உள்பட) கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துயுள்ளார் என்றால் ஒன்றும் இல்லை. இவ்வாறு உண்மை நிலையினை மறைத்துவிட்டு 'கவலையளிப்பதாக' மக்கள் காதில் பூ சுற்றுகிறார்.

Monday, January 28, 2008

நீங்க நல்லவரா, கெட்டவரா? அ.(மெரிக்க) மார்க்ஸ்

நாயகன் படத்தில் ஒரு வசனத்தை கேட்டிருப்போம், குழந்தை கமலைப் பார்த்து "நீங்க நல்லவரா? கெட்டவரா?" எனக் கேட்கும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் நா தழுதழுத்து துடித்து சொல்வார் கமல், "தெரியலையே"


குழந்தை ரவுடியை இனங்காண்பதில் புரிதல் இல்லாததால் கேட்ட கேள்வி அது. ஆனால் இந்த அந்தோணிசாமி மார்க்சுகளின் கேள்விகள் நமக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது.


'தீராநதி ஜனவரி'யில் இதழில் அ.மார்க்ஸ் அவர்கள், கனிமொழி 123 ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியதை கடிந்து கொள்ளும் போது இறுதியில் ஒரு கேள்வியினை போடுகிறார் பின்வருமாறு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?"


இதேபோல 'த சண்டே இந்தியன் இதழில்' அ.மார்க்ஸ் அவர்கள், திமுக வின் பலமும், பலவீனமும் என்ற கட்டுரையின் இறுதியில் இப்படி முடிக்கிறார்; "இன்று உலகமய சூழலில் மேலெழும் பொருளாதாரப் பிரச்சினைகள் கணக்கில் கொள்ளாமல் ஆதரிக்கும் நிலைப்பாட்டை திமுக எடுப்பது போல தோன்றுகிறது"


ஐயா அ.மார்க்ஸ் அவர்களே,


கனிமொழி வார்த்தைக்கு வார்த்தை "இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எங்க கட்சி ஆதரிக்கிறது, எங்க தலைவர் கலைஞர் அவர்களும் ஆதரிக்கிறார்" என கூறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு கனிமொழி என்ற 'அருவருடி ' ஒப்புதல் வாக்குமூலமாக தந்த பின்னும் , உங்களுக்கு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?" என கேள்வி வருகிறது என்றால் என்ன அர்த்தம்?. மக்களை இப்படி நீங்க நல்லவரா, கெட்டவரா என கேள்வி கேட்கும் அளவிலேயே வைத்திருக்க விரும்பும் கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்பது தான்.


அடுத்து "உலகமயமாக்கலை அப்படியே திமுக ஆதரிப்பது போல தோன்றுகிறது" என வினா தொடுக்கிறீர்கள், என்ன கேள்வி இது. அண்ணாவே காசு சம்பாதிக்கும் என்ற காரணத்தால தான் திக விலிருந்து வந்து திமுகவை ஆரம்பித்தார். அடுத்து கலைஞர் அதை கைப்பற்றி (திமுக முன்னணியில் இருந்த தலைவர் அல்ல கலைஞர்) இன்று தனது குடும்ப சொத்தாக மாற்றி, 5 முறை முதல்வராக இருந்து கிட்டதட்ட 80,000 கோடிகளுக்கு மேல சேர்த்துவிட்டார்.(மாறன் பிரிவுக்கு முன் மதிப்பு) உலகமயமாக்கலை தான் நாட்டோட வளர்ச்சிக்கு என காங்கிரஸ், பாஜக வரை ஆதரிப்பது போல கலைஞரும் தன் கொள்கையாக எடுத்து நடைமுறைபடுத்தி வருகிறார். இப்ப 2007 வந்து "தோன்றுகிறது" என்றால் என்ன அர்த்தம்.


என்ன வெங்காயம் தோன்றுகிறது. அப்பட்டமாக அறிவித்துவிட்டார்கள் படுத்தால் அமெரிக்காவுக்குதான் படுப்போம் என்று பிறகு இப்படி தோன்றுவது ஏகாதிபத்திய அருவருடிகளை காப்பதற்காக எழுந்ததாகவே இருக்க முடியும்.


உலகமயமாக்கலையும், இந்துமத பாசிசத்தையும் பற்றி எழுதும் நீங்கள் தான் இப்படி திமுக குறித்து சந்தேகங்களையும், காந்தி குறித்து சந்தேகங்களையும் எழுப்பி அவர்களை நியாயப்படுத்த முற்படுகிறீர்கள். எதிரியினை குறித்து குழப்பத்தினை விளைவிக்கும் இது போன்ற பிரச்சாரம் ரெம்ப காலத்திற்கு நீடிக்க முடியாது என்பதே வரலாறு தரும் படிப்பினை.

"ஏகாதிபத்தியத்திற்கு கச்சிதமாக செய்யப்பட்ட அடிமை நான்" - கனிமொழி உரைவீச்சு

123- அணுசக்தி ஒப்பந்தம் எவ்வாறு இந்தியாவிற்கு மிகவும் நன்மைபயக்கிறதென்பதை மிகவும் சிரமப்பட்டு நீண்டகால ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார் கனிமொழி.
..
இந்தியாவுக்கு அதிக இடம் கொடுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ், வாஷிங்கடன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் தன் (அமெரிக்க) அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதையும், இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள பாகிஸ்தான் வலியுறுத்துவதையும் வைத்து இந்திலிருந்தே தெரியவில்லையா? இது எவ்வளவு அவசியமென்று என்கிறார் கனிமொழி. இதைப் போன்ற கவித்துவமான கண்டுபிடிப்புக்களால் தான் அவர் கவிஞர் என்றழைக்கப்படுகிறார் போலும்.

அம்மா! கவித்தமிழே!
.....
இந்த மானங்கெட்ட ஒபந்தத்தை எதிர்க்கும் அணுவிஞ்ஞானிகள், அரசியல், பொருளாதார நிபுணர்கள் என எவருடைய கருத்துக்களையும் உங்கள் கண்கள் படித்ததா? படித்திருந்தாலும் கண்டிப்பாய் அவை உங்கள் வாயிலிருந்து வந்திருக்காது. எங்களுக்குத் தெரியும் அடிமைகளின் வாய்கள் ஆண்டைகளின் எச்சில்களுக்காகவே மட்டும்தான் காத்திருக்குமென்று.

"சீனாவை போலவே இந்தியாவும் மின் உற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் நம்பியிருக்கிறது. சீனா 2020க்குள் அணு ஆலைகள் மூலம் 40000 MW மின்சக்தி உற்பத்தி செய்ய தயாராகிவருகிறது. இந்தியாவிக்கும் 2020க்குள் 30000 MW மின்சக்தி உற்பத்தி செய்யும் எண்ண்மிருக்கிறது. ஆனால் 123 யை கையெழுத்தாகாமல் அது சாத்தியமில்லை" என்கிறார் கனிமொழி. எழுத்தின் மூலமாக மக்களின் மீது ஆதிக்கம் செய்யும் படைப்பாளியின் ஆவணம் இங்கே தீர்ப்பு சொல்கிறது.
..
சரி '123 ஒப்பந்தத்தை' பற்றி சுருக்கமாக பார்ப்போம்
..
நம் நாட்டில் கிடைக்கின்ற தோரித்துடன் ஓரளவு புளூட்டோனியத்தை சேர்த்து செறிவூட்டி அணுஆற்றலை பெற முடியும் என்பதலில் தற்போது நல்ல முன்னேற்றத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த 30 ஆண்டு சிந்தனையை அமெரிக்காவிற்கு அடகு வைக்க போகிறது இந்திய அரசு.

இன்று அணுசக்தியிலிருந்து 3% மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது இதனை 7% ஆக மாற்ற அதாவது வெறும் 4% அதிகப்படுத்த (அதுவும் 2020-ல் தான்) 123 யை நிறைவேற்ற துடிக்கிறது அரசு. அமெரிக்கா போன்ற நாடுகளிலே அணுசக்தியிலிருந்து 2.5% தான் மின்சாரம் எடுக்கின்றனர். பாதுகாப்பு காரணம் காட்டி இதனை அதிகப்படுத்த அங்குள்ள மக்கள் சம்மதிக்கவில்லை. இது போல உலகம் முழுவதும் விலை போகாத அணு உலைகளை இந்தியா தலையில் கட்ட நினைக்கிறது அமெரிக்கா.
இதை தவிர அரசியல் ரீதியில் "அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையினை" அப்படியே இந்தியா ஏற்க வேண்டும்

உண்மை இவ்வாறு இருக்க, தோரியம் சார்ந்த அணுசக்தி தொழில் நூட்பத்தை உருவாக்க நீண்ட காலமாகுமென்றும் கவலையுறுகிறார் கனிமொழி. உண்மைதான் போராளிகள் நீண்டகாலமாக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள், அவர்களுக்கு நீண்ட காலமென்பது சலிப்பூட்டுவதாக இருக்காது. ஆனால் காலில் விழுபவர்களுக்கோ ஒவ்வொரு நொடியும் கவலையாகத்தான் இருக்கும், நமக்கு முன் எவனாவது முந்திக் கொள்வானோயென்று.

ஏற்கனவே ஒவ்வொரு இந்தியனின் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் கடனின் அளவு ஏகத்திற்கும் எகிரிக்கொண்டிருக்கும் போது 15 லட்சம் கோடி ரூபாயை இவ்வொப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்து அவனை ஒரேடியாக புதைக்குழிக்குள் அனுப்பும் நிகழ்ச்சிபோக்கு தான் 123 - என்பதனைத் தவிர வேறொன்றும் இல்லை.

காலனி ஆதிக்கத்தின் பழைய பாதிப்பு மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய பயங்களை மனதைவிட்டு அகற்றுவதற்கு ஒரே தாயத்து 123 ஒப்பந்தம் தான் என்கிறார் கனிமொழி, மேலும் சிலர் பொதுப்படையாக " அணுசக்தி எரிபொருளை நிறுத்தவோ, தரப்பட்டதை தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளவோ அமெரிக்க அதிபரால் முடியும்" என்று பேசுவதாக கூறுகிறார்.

கனிமொழி அவர்களே அது சிலர் அல்ல! ஆகப் பெரும்பான்மையினர். ஆனால் அமெரிக்காவின் எச்சிலுக்காக நக்கி பிழைக்கும் உங்களை போன்றவர்கள் தான் சிறுபான்மையினர். இந்த சிறுபான்மை துரோகிகளை இன்றைய செய்தி ஊடகங்களில் தேடமுடியாது, உங்களை போன்றவர்களை விரட்டியடிக்கும் போராட்ட காலத்தில் வெளிவரும் புரட்சிகர ஏடுகளில் தான் காண முடியும்.

இந்த வாரிசு போல இன்னொரு வாரிசான 'கார்த்திக் சிதம்பரம்' (கனிமொழியின் கருத்து அமைப்பின் பார்ட்னர்) என்பவரும் இதே போல 123 நாட்டு நலனுக்கு சிறந்தது, தோரியம் மூலம் அணுசக்தி கிடைக்க ரெம்ப காலம் ஆகும், அடிமை ஒப்பந்தத்தால் ஒரு தீமையும் இல்லை என சென்னையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டு இருந்ததை சொல்லியே ஆக வேண்டும்.

கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் வார்த்து எடுத்த மாதிரி வாரிசு அமைந்து உள்ளது. இது பன்னாட்டு நிறுவனத்திற்கு நல்லதாக இருந்தாலும் இந்திய நாட்டுக்கு நல்லதல்ல.

"15 வினாடிகளுக்கு ஒரு குழந்தை இறக்கிறது இந்தியாவில்" - ஏகாதிபத்திய அருவருடிகளின் சாதனை

59 ஆவது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு நாளில் புதிய சாதனையாக "15 வினாடிகளுக்கு ஒரு குழந்தை இறக்கிறது இந்தியாவில்" என்பது எட்டப்பட்டு உள்ளது.

Sunday, January 27, 2008

"கோடிக்கணக்கான மக்களை பசி,பட்டினிக்கு ஆக்கியது நாங்கதான்" - கிரிமினல் பில்கேட்ஸ் ஒப்புதல்

முதலாளித்துவத்தின் உயிரே சந்தையில் தான் இருக்கிறது. இன்று ஏகாதிபத்தியத்தின் தீவிர தாக்குதலில் உலகமே திணறி கொண்டு இருக்கிறது. கிட்டதட்ட 400 பன்னாட்டு கம்பெனிகளின் பிடிக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கு 19 கோடி மக்கள் பசி பட்டினியால் மாண்டு வருகிறார்கள் என்கிறது புள்ளிவிபரங்கள். இதற்கு முழுமூற்றான காரணமே பன்னாட்டு நிறுவனத்தின் லாபவெறிதான். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று இந்தியாவில் ரிலையன்ஸ், வால்மார்ட், மோர் என பல கம்பெனிகள் சில்லறை வணிகத்தில் நுழைவதை பார்க்கிறோம். என்ன காரணம் என்றால், இங்கே 1000 நபர்களுக்கு கிட்டதட்ட 20 கடைகளுக்கு மேல் என்ற விகிதத்தில் கடைகள் இருக்கிறது. இதனை சுலபமாக 4,5 நிறுவனங்கள் என மாற்றி விட்டால் அதாவது அந்த 20 பேர்களை வெளியேற்றி விட்டால் அனைத்து லாபமும் ஒரே நபரிடம். பின் இவர்கள் கூடிப்பேசி பல மடங்கு விலையினை ஏற்றி அதை விட கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்பதால் தான்.

இது போல அனைத்து துறையிலும் நிகழ்ந்துவருகிறது. இதற்கு இந்திய உள்பட எல்லா நாடுகளிலும் அருவருடிகளை தயார்படுத்தி தனது கொளகையினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதில் பெரிய திருடன்களில் ஒருவரான பில்கேட்ஸ் கூறுகிறார் "வறுமை வாழும் மக்களுக்கு கூடுதல் நிதி தரவேண்டும்" 100 கோடி மக்கள் தினசரி வருமானம் 1 டாலர் க்கும் குறைவாக இருக்கிறது" என. இதற்கு காணமே இவர்களை போன்ற ஆட்கள் தான் என தெரிந்து கொண்டு தான் இப்படி கூறுகிறார்.பில்கேட்ஸ் பற்றி ரெம்ப பேர்கள் தெரியாமலே, 'உழைப்பால் உயர்ந்தவர்' என நம்பிக்கொண்டு வருகிறார். இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஆனா பில்கேட்ஸ் வெற்றி எப்படி கட்டியமைக்கப்பட்டது என உண்மையினை ஆய்வு செய்தால், 'உலகம் முழுவதும் வளர்ந்து வரும் கணிப்பொறி நிறுவனங்களை பல வழிகளில் திட்டமிட்டு செயலிழக்க வைக்கப்பட்டது' என்பது தெரியவரும். இது போல பல தில்லுமுல்லுகளை செய்ததை உழைப்பு என நம்பவைக்கின்றனர். ஆனால் உழைப்பு என்பது "யாருக்காக" என்பதை பொறுத்து தான் அதன் மதிக்கமுடியும்.

"நேற்று ஓட்டுப்பொறுக்கி; இன்று பச்சோந்தி; நாளை அருவருடி" - ஏகாதிபத்திய கடைமையில் 'பாமக'


பாமக இன்று எந்த கூட்டணியில் (சந்தர்ப்பவாதம்) இருக்கிறது ? என கேள்விகேட்கும் அளவுக்கு மாறி மாறி கூட்டணியில் இணைந்து தனது ஓட்டுப்பொறுக்கி அரசிலை நிலைநிறுத்தி கொண்டது என்றால் அது மிகையில்லை. இன்று கூட்டணி பேரத்தில் தலைசிறந்தவராக டாக்டர் பட்டமே பெற்றுவிட்டார்கள்.

பசுமை தாயகம் என்ற அமைப்பை கைப்பற்றி தனது மருமகள் செளமியாவை அதற்கு தலைமை பொறுப்பில் அமர்த்தி 'சுற்றுசூழல் பாதிப்பு' என அது சம்பந்தமான கம்பெனிகளிடம் தனி வசூல் நடத்தி வருகிறார்.

மத்தியில் தொடர்ந்து ஆட்சிகள் மாறினாலும் தனது மந்திரிகளை தக்கவைத்து கொண்டார்.(கலைஞர் இதற்கு முன்னோடி)தனது மகன் அன்புமணியை கொள்ளைப்புறம் வழியாக ( நேராக கொண்டு வந்தால் சவுக்கால் அடியுங்கள் என ராமதாஸ் அன்றைய சபதத்தினால்) ஒரு தொகுதியில் கூட மக்களை சந்திக்காமல் "இந்திய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்" ஆக்கிவிட்டார். இதன் மூலம் வசூல் எவ்வளவு என மருத்துவருக்கே வெளிச்சம்.

தமிழகத்திலும், மத்தியிலும் எல்லா மக்கள் விரோதக் கொள்கைகளுக்கும் (உலக வங்கியின் ஆணைகளுக்கு) ஆதரத்து தாங்கி நிற்பவர். அதில் குறிப்பாக 123- அடினை சாசனத்திற்கு முழு ஆதரவு அளிப்பவர்.

இன்று 2011-ல் நாங்கள் ஆட்சி அமைக்குமாறு சனநாயகம் எங்களை பணிக்கிறது என சொல்கிறார். என்ன சனநாயகம் வாழ்கிறது இந்த நாட்டில் என்று விளக்க முடியமா. இல்லை உங்க கட்சியில் கூட அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க.

கோடிக்கணக்கான மக்களை கொலை செய்து வரும் இன்றைய அரசமைப்பை கொண்டு தமிழ் பேசுறேன், மது, சிகரெட் யை ஒழிப்பேன்(இவங்க அமைச்சரவை பொறுப்பில் தான் இவை இருக்கு) என கதை விட்டுட்டு கொண்டு இந்த பச்சோந்தி 2011க்கு அடி போடுகிறது.

Saturday, January 26, 2008

"மக்கள் நலனுக்கு எதிரான உண்மையான பாசிஸ்ட் நாங்க தான்"- எம்ஜிஆர் வாரிசுகளுக்குள் மோதல்

எம்ஜிஆர் வாரிசு யாரு என ஜெ, விசயகாந்த், சரத் போன்ற சினிமா கழிசடையிலிருந்து வந்தவர்களுக்குள் தீவிரமாக விவாதம் நடைபெற்றுவருகிறது. வாரிசாக கொண்டாடபடும் அளவுக்கு என்ன கிழித்தார் எம்ஜிஆர் என மக்கள் யோசிக்கும் முன் இவனுங்களாகவே 'எம்ஜிஆர் வாரிசு நாங்கள் தான்' என பீதியை கிளப்பி தாங்களும் பதவியினை சுவைக்கலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறார்கள். மூவரையும் பற்றி சிறிய Introduction.


ஜெ- 'தான் ஒரு பாப்பாத்தி' என அறிவித்துகொண்டு மோடியின் தீவிர ஆதரவாளர், புதிய பொருளாதார கொள்கையினை (உலக வங்கி ஆணையினை) ஏற்றுக் கொள்பவர். நடைமுறைப்படுத்தியவர். கோடிக்கணக்கான சொத்துகளை வாரி குவித்தவர். பெரியார் பிறந்த மண்ணில் திராவிட கட்சி தலைமைக்கு வந்த 'பாப்பாத்தி' என்றால் இவர் சாதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


விசயகாந்த் - 20 ஆண்டு காலமாக சினிமா கழிசடையில் ஊறி கொழுத்து திரிந்துவிட்டு திடுதிடுவென எழுந்து வந்து நான் கறுப்பு எம்ஜிஆர் என சொல்கிறார். காவி புழுதி உடல் முழுவதும். கட்சி ஆரம்பிக்கும் போது, பின்னரும் திருப்பதி போய் கும்பிட்ட திராவிட கொழுந்து. தனது கட்சி பெயரே 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளை தாங்கி வலம் வரும் அறிவாளி. கருப்பு பணம் பாதி, காவி மீதி என தனது அரசியலை அமைத்துக் கொண்டு நாட்டை கைப்பற்ற களமிறங்கியிருப்பவர். வரும்போதே மனைவி, மச்சான், மகன்கள் என குடும்ப சகிதமாக தொண்டு (?) செய்ய வரும் வியாபாரி.


சரத் குமார் - இவர் அரசியல் அசிங்கம் வைக்கோவின் சிஷ்யர் , தினம் ஒரு கட்சி என வலம் வருபவர். "ஜெ Betroom வரை சென்ற ஒரே ஆள் சரத்" என தற்போது இராமனை பற்றி சரத்துக்கு பாடம் எடுத்த 'சோ' அவர்களாலே பாராட்டு பெற்றவர். பின் "உயிர் உள்ள வரை திமுக தான், நான் செத்தா எனது உடல் மீது திமுக கொடிதான் போர்த்தபட வேண்டும்" என முழக்கம் இட்டு ஒரு வாரத்தில் ( வைக்கோ ஒரு நாளில் - குருவாச்சே) கட்சி மாறி அதிமுக தாவியவர். பின் அங்கும் பருப்பு வேகவில்லை என்றதும் தனது சொந்த நாடார் சாதி சங்கத்தின் மூலம் புதிய கட்சி அதுவும் 'அகில இந்திய சமுத்துவ கட்சி' என ஆரம்பித்து உள்ளவர். ராமனில் இருந்து 123 வரை ஆதரிக்க கூடிய கருப்பு ப்ளஸ் காவி தான் இவர் ஸ்டைலும்.


இந்த மூணு பேருக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது. இவர்களுக்கும் எம்ஜிஆர் க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ஒன்றும் இல்லை! இவர்கள் அனைவரின் செயலையும் சேர்த்து செய்தது தான் எம்ஜிஆர் சாதனை. இந்த சாதனைக்கு கணக்குபிள்ளையாக இருந்தவர் இன்னொரு வாரிசான ஆர்.எம்.விரப்பன்.

"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை" - உச்சநீதி மன்றம்


நாட்டை அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஓட்டுமொத்தமாக அமெரிக்காவுக்கு அடிமையாக்க கூடிய ஒப்பந்தம் தான் இந்த அணுசக்தி ஒப்பந்தம்.

இதனை கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் வெளிப்படையாக ஆதரித்தும், எதிர்க்கிறோம் என்ற பெயரில் ( NGO ஸ்டையில்) ஆதரிக்கும் போலிகளும் என அடிமை சாசனம் நிறைவேற்றுவதற்கு இசைவு தெரிவித்துவிட்டார்கள். வேலைகளும் மும்மூரமாக நடக்கிறது. எந்த கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்காத நம்ம விஞ்ஞானி கோமாளி கலாம் கூட 123-க்கு முழு ஆதரவு.


"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை, அரசியல் சாசனத்தில் அதற்கு இடமில்லை" - உச்சநீதி மன்ற அறிவிப்பு மேலே உள்ள ஏகாதிபத்திய தாசர்களில் யாருடைய பேச்சை அம்பலப்படுகிறது என்பது தான் செய்தி.


வேற யாரு, இந்த நாடாளுமன்ற பன்றிதொழுவத்தை நம்பச்சொல்லி இதன் மூலம் "மக்கள் விடுதலையினை சாதிக்க முடியும்" என புருடா விடும் போலிக் கம்யூனிஸ்டுகள் தான். ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஓட்டெடுப்பு கூட இல்லாமல் விவாதித்து நாட்டை மீட்டு விடுவோம் என்ற போலிகள் முகத்தில் இன்று அறைந்து சொல்கிறது உச்ச நீதிமன்றம்.


தா.பாண்டியன்களையும், பிரகாஷ்கரத்துகளையும் இவர்கள் தலைமையில் இருக்கும் அடிமட்ட தோழர்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி "இனி மேலும் நாடாளுமன்ற முறையினை நம்பச்சொல்லி நாம் வலம் வருவதற்கு என்ன அடிப்படை" என்பது தான்.

"அமெரிக்காவிடம் மனுகொடுத்தா சரியாகிவிடும்" - வாலிபர்கள் உலக சுற்றுபயணம்


பூமி வெப்பமாதலுக்கு அதிக அளவு காரணம் அமெரிக்காதான். கியூட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத நாடு அமெரிக்கா. தன் நாட்டை மற்றவனுக்காக மாற்ற முடியாது என கொக்கரிக்கும் அவனிடம் மனு கொடுக்க வாலிபர்கள் உலக சுற்றுபயணம் செய்ய இருக்கிறார்கள். இதனை தொடங்கி வைப்பவர் இதே அமெரிக்காவின் ஆதரவாளர். இப்படி சென்னா தெரியாதா, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கலைஞர் தாணுங்க.

"சட்டபூர்வமாக கடத்தினால் அதற்கு பெயர் ஏற்றுமதியா"- மக்கள் கேட்காத கேள்வி


அரிசி 84,000 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும், கடந்த ஆண்டு 3.7 லட்சம் அரசி ஏற்றுமதி செய்ததில் அரசுக்கு 4,258 கோடி வருவாய் கிடைத்துயுள்ளதாகவும் அறிவிக்கிறது மத்திய அரசு.

ஏன்டா நாட்டில அவனவன் அரசியை ரூ 2-க்கு விற்றால்தான் வாங்க முடியும் என்ற நிலையினை ஏற்பத்திவிட்டீர்கள். நாடு முழுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் பசி பட்டினியால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற உண்மையினை உங்க வாயினாலே ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். எல்லாதிற்கும் ஹைலெட்டாக 70 % மக்கள் தினசரி வருமானம் ரூ 20 தான் என ஆக்கிவிட்டீர்கள்.

உள்நாட்டு கோதுமை உற்பத்தியினை தரக்குறைபாடு காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும், அரிசிக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக 1000 ரூ கூட கொடுக்காமல் தட்டிகழித்தும் வருகிறீர்கள். இது போன்ற பல காரணங்களால் விவசாயி விவசாயம் செய்யமுடியாமல், இருக்கின்ற விவசாயத்திற்கான பாசன பகுதியும், விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

மக்களுக்கு குறைந்த விலையில் அரசி கொடுக்க, விலை குறைவாக விவசாயிகளிடம் இருந்து அரிசியை வாங்குவதாக சொல்லிவிட்டு இப்ப என்னடானா வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம் என்கிறீர்கள்.

ரூ 2க்கு அரியை கொடுத்தால் தான் வாழ முடியும் என்ற நிலையினை ஏற்படுத்தியதையே சாதனையாக "அரிசி கிலோ 2ரூ" என காட்டி வருகிறது 'முன்னோடி மாநிலம்' தமிழகம். இந்த 2ரூ விலையினாலே அனைத்து ஓட்டுபொறுக்கி ஆட்சியிலும் நடைபெறும் 'அரிசி கடத்தல்' (மற்ற மாநிலங்களுக்கு) தற்போது அதிகளவில் நடைபெறுகிறது.

மற்றவர்கள் மாநிலங்களுக்குள் செய்வது அரிசி கடத்தல் என்று கூறும் நீங்கள், நீங்களே கொடியசைத்து அரிசியை அனுப்பிவத்தால் அதற்கு பெயர் 'ஏற்றுமதி' என்பீர்கள். இந்த மக்களுக்கு வாங்கும் சக்தி இல்லை என்பதால் வெளிநாட்டுக்கு அனுப்பி வருகிறோம் என்று வரவேண்டிய செய்தி 'ஏற்றுமதி' என்ற ஒரே சொல்லாக மட்டும் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

  • இணைப்புகள்

  •