Wednesday, January 30, 2008

"உலக நாட்டு மக்களை அழிக்கும் வரிசையில் அடுத்து ஈரான்" - போர்வெறியன் புஷ் அறிவிப்பு

அணுஆயுத தயாரிப்பை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம் என புஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளான். உலகில் அணுஆயுதத்தினை முதல் முதலில் பயன்படுத்தி ஜப்பானில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது தான் இந்த அமெரிக்கா. அடுத்தடுத்து மூன்றாம் உலக நாடுகள், எண்ணெய் வளங்கள் உள்ள நாடுகள் மீது போர் தொடுத்து கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இதில் சமீபத்தில் ஈராக்கில் அணுஆயுதம் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து அந்த நாட்டை கபளிகரம் செய்தது.

இதனுடைய தொடர்ச்சியாக தான் தற்போது அடுத்த குறியாக ஈரானை தேர்தெடுத்து உள்ளான் அமெரிக்க போர்வெறியன் புஷ்.

No comments:

  • இணைப்புகள்

  •