Monday, January 28, 2008

நீங்க நல்லவரா, கெட்டவரா? அ.(மெரிக்க) மார்க்ஸ்

நாயகன் படத்தில் ஒரு வசனத்தை கேட்டிருப்போம், குழந்தை கமலைப் பார்த்து "நீங்க நல்லவரா? கெட்டவரா?" எனக் கேட்கும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் நா தழுதழுத்து துடித்து சொல்வார் கமல், "தெரியலையே"


குழந்தை ரவுடியை இனங்காண்பதில் புரிதல் இல்லாததால் கேட்ட கேள்வி அது. ஆனால் இந்த அந்தோணிசாமி மார்க்சுகளின் கேள்விகள் நமக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது.


'தீராநதி ஜனவரி'யில் இதழில் அ.மார்க்ஸ் அவர்கள், கனிமொழி 123 ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியதை கடிந்து கொள்ளும் போது இறுதியில் ஒரு கேள்வியினை போடுகிறார் பின்வருமாறு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?"


இதேபோல 'த சண்டே இந்தியன் இதழில்' அ.மார்க்ஸ் அவர்கள், திமுக வின் பலமும், பலவீனமும் என்ற கட்டுரையின் இறுதியில் இப்படி முடிக்கிறார்; "இன்று உலகமய சூழலில் மேலெழும் பொருளாதாரப் பிரச்சினைகள் கணக்கில் கொள்ளாமல் ஆதரிக்கும் நிலைப்பாட்டை திமுக எடுப்பது போல தோன்றுகிறது"


ஐயா அ.மார்க்ஸ் அவர்களே,


கனிமொழி வார்த்தைக்கு வார்த்தை "இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எங்க கட்சி ஆதரிக்கிறது, எங்க தலைவர் கலைஞர் அவர்களும் ஆதரிக்கிறார்" என கூறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு கனிமொழி என்ற 'அருவருடி ' ஒப்புதல் வாக்குமூலமாக தந்த பின்னும் , உங்களுக்கு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?" என கேள்வி வருகிறது என்றால் என்ன அர்த்தம்?. மக்களை இப்படி நீங்க நல்லவரா, கெட்டவரா என கேள்வி கேட்கும் அளவிலேயே வைத்திருக்க விரும்பும் கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்பது தான்.


அடுத்து "உலகமயமாக்கலை அப்படியே திமுக ஆதரிப்பது போல தோன்றுகிறது" என வினா தொடுக்கிறீர்கள், என்ன கேள்வி இது. அண்ணாவே காசு சம்பாதிக்கும் என்ற காரணத்தால தான் திக விலிருந்து வந்து திமுகவை ஆரம்பித்தார். அடுத்து கலைஞர் அதை கைப்பற்றி (திமுக முன்னணியில் இருந்த தலைவர் அல்ல கலைஞர்) இன்று தனது குடும்ப சொத்தாக மாற்றி, 5 முறை முதல்வராக இருந்து கிட்டதட்ட 80,000 கோடிகளுக்கு மேல சேர்த்துவிட்டார்.(மாறன் பிரிவுக்கு முன் மதிப்பு) உலகமயமாக்கலை தான் நாட்டோட வளர்ச்சிக்கு என காங்கிரஸ், பாஜக வரை ஆதரிப்பது போல கலைஞரும் தன் கொள்கையாக எடுத்து நடைமுறைபடுத்தி வருகிறார். இப்ப 2007 வந்து "தோன்றுகிறது" என்றால் என்ன அர்த்தம்.


என்ன வெங்காயம் தோன்றுகிறது. அப்பட்டமாக அறிவித்துவிட்டார்கள் படுத்தால் அமெரிக்காவுக்குதான் படுப்போம் என்று பிறகு இப்படி தோன்றுவது ஏகாதிபத்திய அருவருடிகளை காப்பதற்காக எழுந்ததாகவே இருக்க முடியும்.


உலகமயமாக்கலையும், இந்துமத பாசிசத்தையும் பற்றி எழுதும் நீங்கள் தான் இப்படி திமுக குறித்து சந்தேகங்களையும், காந்தி குறித்து சந்தேகங்களையும் எழுப்பி அவர்களை நியாயப்படுத்த முற்படுகிறீர்கள். எதிரியினை குறித்து குழப்பத்தினை விளைவிக்கும் இது போன்ற பிரச்சாரம் ரெம்ப காலத்திற்கு நீடிக்க முடியாது என்பதே வரலாறு தரும் படிப்பினை.

No comments:

  • இணைப்புகள்

  •