Wednesday, January 30, 2008

"கழிப்பறை கட்டமாட்டோம், ஆனா ரோட்டில 'பிஷ்' அடிச்ச பிடிப்போம்" - ரிப்பன் மாளிகை அதிரடி

சென்னை மட்டுமல்ல, நாடு முழுவதும் பொது இடங்களில் கழிப்பறை என்பதே கட்டிக் கொடுக்கப்படவில்லை. இப்படி கழிப்பறையினை கட்டிக்கொடுக்காமல், மக்கள் சாலைஓரமாக சிறுநீர் கழித்தால் ரூ100 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதே போல மக்கின குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்காத சென்னை வீட்டு மக்களிடம் அபராதமாக ரூ 100ம், மருந்து சம்பந்தமான குப்பையினை சரியாக பிரிக்காதவர்களுக்கு அபராதமாக ரூ 500ம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


95% கழிப்பறைகளே இல்லை. மீறி இருந்தாலும் கட்டணக்கழிப்பறை என, சிறுநீர் கழிப்பதற்கே இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரிசியே இரண்டு ரூபாய்க்கு விற்றால்தான், மக்கள் வாங்க முடியும் & வாழ முடியும் என்ற நாட்டில் தான், 'பிஷ்' அடிப்பதற்கு இரண்டு ரூபாய் எனபதும், சாலை ஓரமாக அடிப்பவர்களுக்கு அபராதமாக 100 ரூபாய் என அறிவித்து உள்ளனர் என்பதை பொருத்தி - இந்த செய்திகளை பார்க்கும் போது தான் 'ஓட்டுப்பொறுக்கி அரசியலை' புரிந்து கொள்ள முடியும்.

No comments:

  • இணைப்புகள்

  •