Sunday, January 27, 2008

"கோடிக்கணக்கான மக்களை பசி,பட்டினிக்கு ஆக்கியது நாங்கதான்" - கிரிமினல் பில்கேட்ஸ் ஒப்புதல்

முதலாளித்துவத்தின் உயிரே சந்தையில் தான் இருக்கிறது. இன்று ஏகாதிபத்தியத்தின் தீவிர தாக்குதலில் உலகமே திணறி கொண்டு இருக்கிறது. கிட்டதட்ட 400 பன்னாட்டு கம்பெனிகளின் பிடிக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கு 19 கோடி மக்கள் பசி பட்டினியால் மாண்டு வருகிறார்கள் என்கிறது புள்ளிவிபரங்கள். இதற்கு முழுமூற்றான காரணமே பன்னாட்டு நிறுவனத்தின் லாபவெறிதான். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று இந்தியாவில் ரிலையன்ஸ், வால்மார்ட், மோர் என பல கம்பெனிகள் சில்லறை வணிகத்தில் நுழைவதை பார்க்கிறோம். என்ன காரணம் என்றால், இங்கே 1000 நபர்களுக்கு கிட்டதட்ட 20 கடைகளுக்கு மேல் என்ற விகிதத்தில் கடைகள் இருக்கிறது. இதனை சுலபமாக 4,5 நிறுவனங்கள் என மாற்றி விட்டால் அதாவது அந்த 20 பேர்களை வெளியேற்றி விட்டால் அனைத்து லாபமும் ஒரே நபரிடம். பின் இவர்கள் கூடிப்பேசி பல மடங்கு விலையினை ஏற்றி அதை விட கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்பதால் தான்.

இது போல அனைத்து துறையிலும் நிகழ்ந்துவருகிறது. இதற்கு இந்திய உள்பட எல்லா நாடுகளிலும் அருவருடிகளை தயார்படுத்தி தனது கொளகையினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதில் பெரிய திருடன்களில் ஒருவரான பில்கேட்ஸ் கூறுகிறார் "வறுமை வாழும் மக்களுக்கு கூடுதல் நிதி தரவேண்டும்" 100 கோடி மக்கள் தினசரி வருமானம் 1 டாலர் க்கும் குறைவாக இருக்கிறது" என. இதற்கு காணமே இவர்களை போன்ற ஆட்கள் தான் என தெரிந்து கொண்டு தான் இப்படி கூறுகிறார்.பில்கேட்ஸ் பற்றி ரெம்ப பேர்கள் தெரியாமலே, 'உழைப்பால் உயர்ந்தவர்' என நம்பிக்கொண்டு வருகிறார். இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஆனா பில்கேட்ஸ் வெற்றி எப்படி கட்டியமைக்கப்பட்டது என உண்மையினை ஆய்வு செய்தால், 'உலகம் முழுவதும் வளர்ந்து வரும் கணிப்பொறி நிறுவனங்களை பல வழிகளில் திட்டமிட்டு செயலிழக்க வைக்கப்பட்டது' என்பது தெரியவரும். இது போல பல தில்லுமுல்லுகளை செய்ததை உழைப்பு என நம்பவைக்கின்றனர். ஆனால் உழைப்பு என்பது "யாருக்காக" என்பதை பொறுத்து தான் அதன் மதிக்கமுடியும்.

No comments:

  • இணைப்புகள்

  •