Tuesday, January 22, 2008

11 பேரை தண்டிக்க 5 ஆண்டுகள் என்றால் மோடி உள்பட ஆயிரக்கணக்கானவர்களை தண்டிக்க !

2002 குஜராதில் பாப்பன பாசிஸ்டுகள் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையில் 2500க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான நபர்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3000 பேர். இதில் இன்று சிறையில் இருப்பவர்கள் 100 -150 பேர்தான். மீதி அனைவரும் போலீஸ் மற்றும் நீதிதுறையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்களால் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இப்போது அதில் பில்கிசு பானு என்ற கர்ப்பினி பெணை பலாத்காரம் செய்து, 8 பேர்களை கொலை செய்த பாசிஸ்டுகள் 11 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்ட காவலர் சோமாபாய் கோரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்திகூட பெரும்பாலான பத்திரிக்கையில் முழுமையாக இல்லாமல், எங்கோ ஒரு பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். தெகல்ஹா வெளியிட்ட வீடியோ காட்சிகளுடன் கூடிய பாப்பன பாசிஸ்டுகளின் ஒப்புதல் வாக்குமூலத்தையே முடிமறைத்த ஊடகங்கள் ஆயிற்றே!

சரி இந்திய நீதித்துறையில் 11 பேரை தண்டிக்கவே 5 ஆண்டுகள் எனில் குற்றமே சாட்டபடாமல் வெளியில் திரிந்து கொண்டு இருக்கின்றன மீதி ஆயிரக்கானக்கவர்களுக்கு....குறிப்பாக பாசிஸ்டுகளின் தலைவன் மோடிக்கு எப்ப தண்டனை கிடைக்கும்.

இதனை இந்திய நீதிமன்றங்களால் கொடுக்க முடியாது. அதற்கு தேவை மக்கள் மன்றங்கள் தான்.

No comments:

  • இணைப்புகள்

  •