Thursday, January 24, 2008

"விவசாயிகள், தொழிலாளிகள் தற்கொலை செய்துகொண்டா நான் என்ன செய்ய முடியும்" - ப.சிதம்பரம்

பங்கு சந்தை என்ற ஊதப்படுகின்ற பலூன் சில நாட்களுக்கு முன் புஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஆன உடன் ( பின்னனியில் இருப்பவர்களும் ஊதியவர்கள்தான்) தொலைக்காட்சியில் தோன்றி ப.சிதம்பரம் அறிவிக்கின்றார் "கவலைபடாதீர்கள்...நிலைமை சரியாகிவிடும்" உடனே ஏற ஆரம்பிக்கின்றது பலூன்.
இத்தனை லட்சம் கோடி, அத்தனை லட்சம் கோடி நஷ்டம் என்கின்றார்கள். நாட்டுல அவனவன் பசி, பட்டினியில் இருக்கும் போது இவனுங்க நஷ்டம் எல்லாம் கோடியில தான்.
ஆனால் பெரிய பணக்காரனாக மாறிய அம்பானி உள்பட எவனுக்கும் சொத்து குறையமாட்டேன் என்கிறது. குறிப்பாக ரிலைன்ஸ் என்றால் லாபம் தான் என்று போட்டா போட்டி தான். பங்கு சந்தை என்ற பலூன் ஊதிய போது அது அரசின் சாதனையாகவே காட்டிய ஆளும் வர்க்கம், புஷ்ஷ்ஷான உடன் அமெரிக்காவின் மீது கையினை நீட்டி தனது உண்மை முகத்தை காட்டுகிறது.

நாட்டில விவசாயி கொத்து கொத்தாக சாகும் போது வராத அமைச்சர் ப.சிதம்பரம் திரையில் தோன்றி விளக்கம் அளிக்கின்றார். பன்னாட்டு நிறுவனத்துக்கே என்றே மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என கரக்டாக ஆளுங்க உருவாவது இந்தியாவின் சாபக்கேடு. அப்படி ஒரு இழிப்பு, ஒரு நயவஞ்சக பார்வை என அருவருடிகளுக்கு என்ற டிஸ்னரி செய்தது போல தோற்றம்.

இவர்கள் போன்ற நேரடியான ஆளும் வர்க்க பிரதிநிதியினை அம்பலபடுத்தும் போது போலிகளையும் திரும்ப திரும்ப சொல்லவேண்டி உள்ளது. பின்வருமாறு போலிக் கம்யூனிஸ்டுகள் யோக்கியதை பற்றி இரண்டு வரிகள் சொல்லி முடிக்கலாம்.

இவர்கள் ஆளும் மாநிலத்திலேயே இந்த மக்கள் விரோத கொள்கையினை அறிவிப்புகளோடு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மத்தியில் petrol விலை ஏறும்போது, 123க்கான வேலை நடக்கும் போது எதிர்ப்பு தெரிவிப்போம், வாக்கெடுப்பு கூட வேணாம் என தாங்கி நிற்பார்கள்.

No comments:

  • இணைப்புகள்

  •