Sunday, January 27, 2008

"நேற்று ஓட்டுப்பொறுக்கி; இன்று பச்சோந்தி; நாளை அருவருடி" - ஏகாதிபத்திய கடைமையில் 'பாமக'


பாமக இன்று எந்த கூட்டணியில் (சந்தர்ப்பவாதம்) இருக்கிறது ? என கேள்விகேட்கும் அளவுக்கு மாறி மாறி கூட்டணியில் இணைந்து தனது ஓட்டுப்பொறுக்கி அரசிலை நிலைநிறுத்தி கொண்டது என்றால் அது மிகையில்லை. இன்று கூட்டணி பேரத்தில் தலைசிறந்தவராக டாக்டர் பட்டமே பெற்றுவிட்டார்கள்.

பசுமை தாயகம் என்ற அமைப்பை கைப்பற்றி தனது மருமகள் செளமியாவை அதற்கு தலைமை பொறுப்பில் அமர்த்தி 'சுற்றுசூழல் பாதிப்பு' என அது சம்பந்தமான கம்பெனிகளிடம் தனி வசூல் நடத்தி வருகிறார்.

மத்தியில் தொடர்ந்து ஆட்சிகள் மாறினாலும் தனது மந்திரிகளை தக்கவைத்து கொண்டார்.(கலைஞர் இதற்கு முன்னோடி)தனது மகன் அன்புமணியை கொள்ளைப்புறம் வழியாக ( நேராக கொண்டு வந்தால் சவுக்கால் அடியுங்கள் என ராமதாஸ் அன்றைய சபதத்தினால்) ஒரு தொகுதியில் கூட மக்களை சந்திக்காமல் "இந்திய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்" ஆக்கிவிட்டார். இதன் மூலம் வசூல் எவ்வளவு என மருத்துவருக்கே வெளிச்சம்.

தமிழகத்திலும், மத்தியிலும் எல்லா மக்கள் விரோதக் கொள்கைகளுக்கும் (உலக வங்கியின் ஆணைகளுக்கு) ஆதரத்து தாங்கி நிற்பவர். அதில் குறிப்பாக 123- அடினை சாசனத்திற்கு முழு ஆதரவு அளிப்பவர்.

இன்று 2011-ல் நாங்கள் ஆட்சி அமைக்குமாறு சனநாயகம் எங்களை பணிக்கிறது என சொல்கிறார். என்ன சனநாயகம் வாழ்கிறது இந்த நாட்டில் என்று விளக்க முடியமா. இல்லை உங்க கட்சியில் கூட அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க.

கோடிக்கணக்கான மக்களை கொலை செய்து வரும் இன்றைய அரசமைப்பை கொண்டு தமிழ் பேசுறேன், மது, சிகரெட் யை ஒழிப்பேன்(இவங்க அமைச்சரவை பொறுப்பில் தான் இவை இருக்கு) என கதை விட்டுட்டு கொண்டு இந்த பச்சோந்தி 2011க்கு அடி போடுகிறது.

No comments:

  • இணைப்புகள்

  •