Saturday, January 26, 2008

"ஆளும் வர்க்கத்துக்கு ஒத்துதான் ஊதினோம் - ஊதுவோம்" - சிபிஎம்- யின் தொடரும் அதிரடி


ஐக்கிய முற்போக்கு கூட்டணி (கூட்டணி என்றால் சந்தர்ப்பவாதம்) ஆட்சியே கிட்டதட்ட ஓராண்டில் முடியபோகுது. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கைகள் ஒவ்வொன்றாக டிக் ஆகி கொண்டே வருகிறது.

இந்த போலிகளும் கொஞ்சங்கூட கூச்சம் இல்லாமல், மக்கள் கஷ்டபடுகின்றனர் என குரல் கொடுத்துக்கொண்டே 'ஆட்சியை' முட்டுகொடுத்துவருகின்றனர். தே.ஜ கூட்டணி ஆட்சியின் கொள்கையினையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியும் கடைபிடிக்கிறது என வெளிப்படையாகவே அறிவிக்கும் அளவு என்ன ஐ.மு கூட்டணி மதச்சார்பின்மைக்காக புடுங்கியது என தெரிவிக்க முடியுமா.

முடியாது என்பதே நிதர்சன உண்மை. உலகவங்கியின் திட்டம் டிக் ஆவதுபோல, ஆர்.எஸ்.எஸ்-யின் பார்ப்பன பாசிச கொள்கைக்கான தயாரிப்புகளும் டிக் ஆகிக்கொண்டே இருக்கிறது. அரசுக்கு வெளியிலே பார்ப்பன பாசிச கொள்கை ரீதியில் திரட்டபட்ட படை ரெடியாக காத்து இருக்கிறது, குஜராத்தில் நிகழ்த்தியதை நாடு முழுவதும் நிகழ்த்துவதற்கு.

இதனை மூடிமறைக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தாமல் ஆளும் வர்க்கத்தை முறியடிக்க முடியாது என்பதே வெள்ளிடைமலை

No comments:

  • இணைப்புகள்

  •