Thursday, January 31, 2008

"ஆங்கிலேயனுக்கு அடியாலாக இருந்த தேச துரோகியின் அஸ்தி கரைப்பு"

மும்பை: மகாத்மா காந்தியின் கடைசி அஸ்திக் கலசம் இன்று அரபிக் கடலில் கரைக்கப்படுகிறது.மகாத்மா காந்தி, 1948ம் ஆண்டு, ஜனவரி 30ம் தேதி டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது 60வது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன.
....
வெள்ளைக்காரனுக்கு வேலை செய்து நாட்டை காட்டி கொடுத்த துரோகி 'காந்தி'. ஆனா திட்டமிட்டு மூடிமறைத்து ஆளும் வர்க்கம் அவரை தேச தந்தையாக காட்டுகிறது. ஆனால் 60 ஆண்டுகால சுதந்திரத்தின் யோக்கிதை என்னவென்றும், நாடு வளரும் என்று மண்மோகன், சிதம்பரம் என அருவருடிகள் இன்னும் புருடா விடுவதில் இருந்து ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளனும், எவனுக்கு ஆதர்வாக காந்தி செயல்பட்டார் என.

இதற்கு பகத்சிங் பார்வையில் அணுக வேண்டும். இதேபோல காந்தியின் இந்து மதவெறியினை கண்டுகொள்ள பெரியாரையும், அம்பேத்காரையும் படிக்க வேண்டும். அப்போது தான் இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கும், இந்து பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கும் 'காந்தி செய்த வேலை'யினை தெரிந்து கொள்ள முடியும்.
.

2 comments:

செய்தி விமர்சனம் said...

http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.html

காந்தி நல்லவரா? கெட்டவரா?

வெட்டிபயல் என்ற நண்பர் பகத்சிங் பிறந்த நாளை ஒட்டி பதியப்பட்ட ஒரு காட்டுரையில் காந்தியை விமர்சித்து வரும் வரிகள் குறித்து தனது மாற்றுக் கருத்தை தெரிவித்திருந்தார்:


//நீங்க காந்தியை பற்றி தவறாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது...
காந்தி உயர்ந்தவரா, பகத் சிங் உயரந்தவரானு கேட்டா எனக்கு ரெண்டு பேரையும் பிரிச்சு பாக்க தெரியாது. தன் நாட்டு மக்களுக்காக உயிரை விட்ட இருவருமே ஒன்றுதான். தங்களின் நம்பிக்கையின் விளைவில் அவர்கள் போராடினார்கள்.//
அவருக்கு விளக்கம் கொடுக்கும் முகமாக் காந்தி குறித்து ஒரு விவாதத்தை ஆரம்பிக்கலாம் என்று பிரியப்பட்டேன். இங்கு வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் பகத்சிங்கின் தீர்க்கமான பார்வைக்கு முன்பு காந்தியின் வறட்டு பழமைவாத தத்துவம் ஒன்றுமே கிடையாது. அவர்(காந்தி) முற்றிலும் உணர்வுப் பூர்வமான ஒரு மனிதர். அந்த உள்ளுணர்வை தீர்மானித்ததோ அவரது வர்ணாஸ்ரம பிடிப்பு.



**************
முன்பொருமுறை மா.சிவகுமாருடன் காந்தி குறித்து ஒரு விவாதம் நடந்தது. அதன் பகுதிகளை தருகிறேன்.

நான் மா.சிவகுமாரிடம் கேட்டிருந்த கேள்விகள்:


1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?

2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?

3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?

4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?

5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?

6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.




மா.சி யின் பதிலில் உள்ள ஒரு பகுதி:

***//தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.//***


***//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே.//***


ஆக, இதுதான் காந்தி. இந்த பெருமையை, பழைய காலத்தை ஆங்கிலேயனிடம் இருந்து மீட்ப்பதுதான் அவரது இயங்கியல். இதை தவிர்த்து அவர் மக்கள் விடுதலை என்று பேசியவை எல்லாம் அன்றைக்கு நிலவிய கருத்துக்களால் தாக்கப்பட்டு அவற்றையும் பிரதி நிதித்துவ படுத்த வேண்டிய கட்டாயமே அன்றி வேறல்ல. அப்பொழுதும் அவர் நிலபிரபுத்துவத்தின் நலனில் ஒரு சிறு அளவு கூட சமரசம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில், எப்படி கீழே தள்ளிவிடப்பட்ட காந்தி விசனமுற்றாரோ அதே போலத்தானே உடமைகள் பிடுங்கப்படும் கொழுத்த சுரண்டல் நிலபிரபுவும் விசனப்படுவான் என்பதை அவரால பொருத்திப் பார்க்க முடிந்தது. ஆனால், எந்த உடமையும் இன்றி அந்த காலத்தில் அடிமையைவிட கேவலாமான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் போராட்டங்களை அவரால் அவ்வாறு பொருத்திப் பார்த்து உணர முடியவில்லை.




மா.சிக்கு சின்னக் கட்ட பொம்மன் என்பவர் கொடுத்த சில பதில்கள்:


*****

காந்தி வைக்கம் போராட்டத்தைச் சிதைத்திடச் செய்த ஈனத்தனமான செய்கையை, தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட, ஞானி இயக்கிய 'அய்யா' எனும் தொடர் அம்பலமாக்கியுள்ளது. அப்போராட்டத்தில், பெரியாருடன் இணைந்து போராடிய காங்கிரசுப் பிரமுகர் ஜார்ஜ் ஜோசப்பை, அப்போராட்டத்தினை விட்டு விலகிடுமாறு காந்தி கடிதம் எழுதினார். வைக்கம் போராட்டத்தில் ஜோசப் ஈடுபட்டபோது திருவிதாங்கூர் அரசு அவரை சிறையில் அடைத்தது. அப்போது சிறைக்குள் இருந்த ஜோசப்பிற்கு காந்தியின் வேண்டுகோள் வந்து சேர்ந்தது. "கிறிஸ்தவரான தாங்கள், இந்து மதத்தின் உள்விவகாரத்தில் அக்கரை காட்ட வேண்டாம். விலகிடுங்கள்" என்று. ஜோசப் மனம் நொந்து போனார். மனித உரிமை மீறலை எதிர்த்துத்தான் அவர் பெரியாருடன் இணைந்து வைக்கம் வந்தவர். அவரின் செயலை, இந்த பாவ ஆத்மாவோ, மதரீதியாய்த் தனிமைப்படுத்திடும் இழிவான செயலில் இறங்கியது.

தற்காலத்தில் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள், ராம கோபாலன் எனும் வானரக் கூட்டத்தினர் என்பதை எண்ணிப்பார்க்கலாம். கோவிலிலே தமிழில் வழிபாடு என்று கேட்டால், நாத்திகர்களுக்கு இதைச் சொல்ல உரிமை ஏது? என்று நரித்தனமாய்க் கேட்பார்கள்? ராமகோபாலன் கூட்டத்தின் முன்னோடியாக மோகன் தாசு இவ்வாறாக வெளிப்படுகிறார் பார்த்தீர்களா?

பிற்பாடு ஜார்ஜ் ஜோசப் காங்கிரசை எதிர்க்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் போய்ச் சேரும் வேலையை காந்தியே செய்தார் என்று வ.ரா. எழுதி இருக்கிறார்.

மதமாற்றம், கோமாதாவைப் பிரியாணி போடுவது பற்றி, நால்வகை வர்ணம் பற்றி காந்தி மஹ்ஹ்ஹ்ஹான் என்ன கருதினார்?

*****



*****

காந்தியின் எளிமை பற்றிய புரட்சிகர மயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது.

செல்வந்தராகவும், பிறப்பில் மேம்பட்ட வைசிய வர்ணத்தவராகவும் பிறந்த காந்தி, எளிய உடை உடுத்துவது என்பது அவ்வர்க்கத்தால் எளிதில் செய்யக்கூடிய செயல் என்பதையும், ஆனால் தூய்மையான உடையோ, ஆடம்பரமான உடையோ மறுக்கப்பட்ட மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், கோட் சூட் அணிந்து அதை மறுப்பதுதான் இங்கு புரட்சிகரமான விசயம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

காந்தியின் மற்ற எளிமைகளைப் பற்றி சரோஜினி நாயுடு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்:-

"அவரின் எளிமைக்காக காங்கிரசுக் கட்சி நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது".

பின்னே. இருக்காதா? மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் இவுக போகணும்னா, 72 டிக்கட்டையும் (பாதுகாப்பு கருதி) காங்கிரசு அல்லவா புக் செய்து மொய் எழுதியது! கூடவே பால் கறவையில் இருக்கும் ஆடுகளுக்கும் டிக்கட் எடுக்கணும்.

இந்த மாதிரி வெளி வேசம் போட்ட ஆசாமி எவ்வாறு தன்னிகரில்லா தலைவனானான்?

*****



*****

இந்த தன்னிகரில்லா தலைவலியால், நமது நாடு சந்தித்த இடையூறுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
1) வெள்ளையனை எதிர்த்துப் போர் முரசு கொட்டி மாண்ட லட்சுமிபாய்,திப்பு சுல்தான்,கட்டபொம்மன்,பூலித்தேவன்,அழகுமுத்துக் கோன் ஆகிய வீரர்களின் வாட்களோ, இந்த ஆசாமியால் சர்வோதயா/கதர் காரியாலயத்தில் 'கதர் சோப்பு' வெட்டிக்கொண்டிருந்தது.

தோழர் ஜீவானந்தம், 1920களில் காந்தி பக்தராக இருந்த காலத்தில் காரைக்குடியில் காந்தி ஆசிரமம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாசிரமத்திற்கு விஜயம் செய்த வ.உ.சி. சினத்துடன் சொன்ன வார்த்தை "வாளெடுத்துப் போர் புரிய வேண்டிய கைகளைப் போயும் போயும் கைராட்டை சுற்ற வைத்து விட்டாயேப்பா".

2) சௌரி சௌரா போலீஸ் ஸ்டேசனை மக்கள் கொளுத்தித் தம் கோபத்தைக் காட்டியதும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தீராக்காதலர் காந்திக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்.

பின்னே! செய்ய மாட்டாரா என்ன? கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் முதல் உலகப்போரில், பிரிட்டிசாருக்கு ராணுவத்தில் சேர்ந்து தொண்டு செய்ய மக்களிடம் அரும்பாடுபட்டிருந்தார். அதற்கு சற்று முன்னர், தென் ஆப்பிரிக்க போயர் யுத்தத்தில், வெள்ளையனுக்கு கங்காணி வேலை செய்து விட்டுத்தானே இங்கே கப்பல் ஏறி வந்தார்?

3)புரட்சிக்காரன் பகத்சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால், அதனை, லாகூர் காங்கிரசுக்கு முன்னரே செய்து விடுங்கள் என்று இர்வினிடம் பேரம் பேசி 'காந்தி-இர்வின்'ஒப்பந்தம் போட்ட துரோகத் தலைவனாச்சே!

4)ஆங்கிலேயனை, அவன் வந்திறங்கிய இந்திய வாசலான பம்பாயிலேயே துரத்தி அடிக்கும் பாய்ச்சலோடு 1946லே இந்தியக் கடற்படையினர் 'தல்வார்' கப்பலில் செய்த ராணுவப் புரட்சியைக் காட்டிக் கொடுத்த இவரல்லவா தலைவர்?

5) சக இந்தியரை சுட மறுத்த (வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில்) கூர்க்கா ராணுவப் படையினரின் செயலைக் கண்டித்த தேசத்தலைவரல்லவா?

6)தெலுங்கானா, புன்னப்புரா, வயலார், வயநாடு ஆகிய விவசாயிகள் புரட்சியை ரத்தச் சேற்றில் நிலப்பிரபுத்துவ சக்திகள் நசுக்கிக் கொண்டிருந்தபோது 'தர்மகர்த்தா' முறை மூலம் நமது உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு வரும் என கிலோக்கணக்கில் அல்வா கொடுத்த ஜென்மம் அல்லவா?

காந்தியின் சாதனைகள் தொடரும்..

*****



*****

அஹிம்சைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கும் நீர், கீழ்க்கண்ட விசயம் பற்றி என்ன கருதுகிறீர்?

தலித்களின் இரட்டை வாக்காளர் தொகுதியை அம்பேத்கர் ஆதரித்தபோது, அது இந்து தர்மத்தைப் பிளவுபடுத்தி விடும் என்று சொல்லி, அம்முறையைக் கைவிடக் கோரி உண்ணாவிரதம் இருந்த காந்தியின் பிளாக்மெயில் அணுகுமுறையும் அஹிம்சைதானா?(உண்ணாவிரதம் என்பதால் அஹிம்சைதானே)உயிரை ஊசலாட வைத்துக்கொண்டு அம்பேத்கரை மிரட்டி 'பூனா ஒப்பந்தத்தில்' கையெழுத்திடச் செய்து, தலித்களின் நலன்களுக்கு எதிராக காந்தி நடந்துகொண்ட அம்முறை, காந்தியின் பக்தர்களான தங்களுக்கு உவப்பானதா?

அவர் உண்ணாவிரதம் இருந்தபோது, ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார், அம்பேத்கருக்கு 'அவர் சாகட்டும். அவரின் உயிருக்காகப் பணிந்து போய் தாழ்த்தப்பட்டவர்களின் நலனைப் பலி கொடுக்காதீர்கள்' என்று தந்தி கொடுத்ததையும் இங்கு நினைவுகூர்கிறேன்.

அஹிம்சையை காந்தி யாருக்கு வலியுறுத்தினார்? ஒடுக்கப்படும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு மட்டுமே. அரசின் பயங்கரவாதத்தை அவர் எப்போதுமே ஆதரித்துள்ளார். நிலப்பிரபுக்களின் சுரண்டல் அவர் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்தச் சுரண்டல் எல்லாம் என்ன அஹிம்சைப் பரம்பொருளா என்ன?

பசுவைக் கொல்லக் கூடாது என எந்த அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள்?
பசுவின் கறியே மலிவு விலையில் (கிலோ 60 ரூபாய் இருக்கும். 3 வருடங்களுக்கு முன் சென்னையில் 55ரூபாய்க்கு வாங்கினேன்) ஏழை மக்களுக்குக் கிடைக்கும் அதிகப் புரதம் நிறைந்த உணவு. மேலும் பசுவைக் கொல்வதால் நமக்குக் கிடைக்கும் செல்வம் சொல்லி மாளாது. பேட்டா செருப்பு, கைப்பை, ஜெர்க்கின் என்று தோல்பொருட்களும், மாருதி காரின் சீட்டு, சர்க்கரை வியாதி மருந்து, செல்லப் பிராணிகளின் தீனி, சர்க்கரை சுத்திகரிப்புத் தொழிலில் முக்கிய இடுபொருள், என அதன் பயன்பாடு எண்ணிலடங்கா. பார்ப்பனர்களின் சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் பஞ்சகவ்யத்தில் கூட பசுவின் கோரோசனம் ஒரு பங்காகும்.

உபயோகமில்லா மாட்டை எந்த ஏழையாலும் தீனி போட்டுப் பராமரிப்பதென்பது ஏலாத காரியம்.

உயர்சாதி மனோபாவத்துடனும், முசுலீம் எதிர்ப்பு இந்து வெறியாலுமே, பசு வந்தனை பஜனைகள் பாட முடியும்.

*****



*****

காந்தியின் பசு வதை எதிர்ப்பும், சுரண்டும் வர்க்கத்தின் பண்பாடுதான்.அவர் எப்போதுமே ஆளும் வர்க்கக் கருத்தியலுக்கு ஊறு விளைவித்திடாத வகையில் மக்கள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்பதனால்தான் அஹிம்சையை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து மட்டும் எதிர்பார்த்தார்.

அஹிம்சையால் எதிராளியின் மனசை மாற்றுவது எனும் கற்பனையின் விஸ்தாரம் இருக்கட்டும். இப்போது நடைமுறையில் இருக்கும் சில நிகழ்வுகளைப் பேசுவோமே.

தாமிரபரணி ஆற்று நீரை அந்நிய நாட்டு கோக் நிறுவனம் ஒட்ட உறிஞ்சி நம்மைக் குடிநீர்ப் பஞ்சம் நோக்கித் துரத்த ஆரம்பித்துள்ளது. இது கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியது. நம் நாட்டில் இத்தகைய எதிர்ப்புகளை அஹிம்சை வழியில் செய்ய அரசியல் சட்டம் வழிவகை செய்துள்ளது.

போராடும் மக்கள், இதற்காக ஊர்வலம் நடத்திப் பிரச்சாரம் செய்திட முனைகிறார்கள். ஆனால் கோக்கிடம் காசு வாங்கிய காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கோக் பற்றி நீங்கள் உங்கள் பிரச்சாரத்தில் பேசக் கூடாது என மறுக்கிறது. பாருங்கள்! இங்கே அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோக் ஆலை அமைய இருக்கும் ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் கம்சன் என்பவர் அந்த நிறுவனம் தொடங்க அனுமதியை ரத்து செய்து தீர்மானம் போடுகிறார். உடனே, கோக்கின் ஆட்களால் கடத்தப்பட்டு, மர்மமான முறையில் சாகிறார். இது ஹிம்சை. அரசோ கோக் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எதிரி, ஹிம்சையைக் கையாள அரசு மவுனசாட்சியாக நிற்கும்போது, மக்கள் போராடுவதற்குக் கூட அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது.

மக்கள், கோக் ஆலைக்காரன் மனசை மாற்றிட ஏதாவது ஜெபமோ, பஜனையோ பாடிக் கொண்டிருக்க முடியுமா?

நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.

காந்தியின் சிந்தனைப்படி பார்த்தால், அவனை ஏன் எதிரியாக நினைக்க வேண்டும். அவன் அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் நம்மை வருத்திக் கொள்ளவேண்டும் என்பது 100% எதிரியின் நலன் காப்பதில்தான் போய் முடியும். இல்லையா?

நிலப்பிரபுத்துவம் உச்சிக்குப் போய் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தெலங்கானாவில் ஒவ்வொரு பண்ணையாளருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், அவர்களின் அதீத சுரண்டலும், உழைக்கும் விவசாயக் கூலிகளுக்கோ ஒட்டிய வயிறே சொத்தாக இருந்ததுமே அவர்களைப் புரட்சியை நோக்கி உந்தித் தள்ளியது.

இந்த இடத்தில் பண்ணையார்கள் துப்பாக்கியால் விவசாயிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது அவ்விவசாயிகளுக்கு அஹிம்சையை உபதேசிப்பது எவ்விதத்திலும் அவர்களை மேம்படுத்திட உதவி செய்யாது. இல்லையா?

விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டு போராடி பல மாவட்டங்களில் பண்ணையார்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. பண்ணையார்கள் ஹைதராபாத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். காந்தி ஏழை விவசாயிகளின் இச்செயலை ஏற்றுக் கொள்ளவில்லை.

உடனே அவரின் சீடர் வினோபா தலைமையில் பூமிதான இயக்கம் தோன்றிட விதை போட்டார். அதாவது நிலப்பிரபுக்களே மனசு மாறி உபரி நிலங்களை ஏழைகளுக்குத் தானமாய்த் தந்து விடுவது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கத்தி இன்றி நிலம் சொந்தமாகி விடும். இதன் நீட்சியாக தமிழ் நாட்டில் கூட பின்னாளில் காங்கிரசு அரசு எந்த ஒரு பண்ணையாருக்கும் 45 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது என சட்டம் போட்டது. காந்தியின் சீடர்கள்தான் கில்லாடிகளாச்சே. பினாமி பேரில் 45, 45 ஏக்கர்களாய் மாற்றிக் கொண்டார்கள். உதாரணமாக கோவிந்தசாமி மூப்பனார்(கருப்பையா மூப்பனாரின் அப்பா) தனக்கு சொந்தமாய் இருந்த 1000 ஏக்கர் நிலங்களில் பெரும்பாலானவற்றை டிரஸ்ட் ஒன்றின் கீழ் மாற்றி ஏய்த்தார். சிலவற்றை பினாமிகளாய் தனக்கு சாராயத்தில் சோடா கலந்து தரும் வேலை செய்த எடுபிடி 'சோடா மாணிக்கம்' என்பவரது பேரில் கூட 45 ஏக்கர் எழுதி வைத்தார்.

இவ்வாறு நிலப்பிரபுக்களின் நலன் சரிந்து விடாதபடிக்குத்தான் காந்தியின் 'தர்மகர்த்தா' பொருளாதார முறை விளங்கியது. காந்தியின் மனப்பான்மை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கானதில்லை.

*****





மா.சிக்கு அசுரனின் சில பதில்கள்:

*****

ஒவ்வொரு சமூக கட்டங்களையும் இயக்கும் பிரதான முரன்பாடு என்ன? காந்தி எந்த வர்க்கம்? அவரது பின்புலமாக உள்ள சமூக கட்டங்கள் என்ன? அவர் மீது ஆளுமை செலுத்திய தத்துவங்கள் என்ன? அன்றைய காலகட்டத்தின் புரட்சிகர நிலைமைகள் என்ன என்று பல்வேறு விசயங்களை கண்க்கில் எடுத்து ஆய்வு செய்தால் மிஞ்சுவது காந்தி சமூக விடுதலைக்கான ஒரு தலைவர் அல்ல. அவரிடம் தீர்வு என்று சொல்லுவதற்கான விசயங்கள் ஒன்றும் கிடையாது, அவர் சமூகத்தை பின்னுக்கிழுக்க முயற்சி செய்தவஎ என்பதுதான் முடிவாக வருகிறது. மேலும் நீங்களே சொல்லுவது போல் அவரை நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனம் ஆளுமை செலுத்துகிறது.

*****



*****
சிவகுமார்:

உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.



அசுரன்:

இதை நான் மறுக்கவே இல்லை. இன்னும் இந்த விசயத்தை மனதில் கொண்டுதான் எனது மாப்ளா கலகம் கட்டுரையில் கூட காந்தி பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இவை ஒரு தனிமனிதனுக்கு நல்ல முன்னுதாரணம். இவை ஒரு நல்ல மனித சமுதாயத்தில் தன்னலம் கருதாமல் சமூகத்தின் நலம் கருதி வாழ்வதற்க்கு நல்ல முன்ணுதாரனம். இவற்றை கட்டாயம் எந்த ஒரு சமூகப் போராளியும், தலைவரும் தனது பண்பாடாக சுவிகரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை எந்த காலத்திலும் அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடாது.

காந்தியின் நேர்மையை அவரது 'அறிவியல் பூர்வமான சித்தாந்தமில்லா' சுய தேடலை இப்படித்தான் அன்றைய ஏகாதிபத்தியம் தனக்கு முகமூடியாக பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் எனது மாப்ளா கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தேன்: ""பிறகு பாவம் காந்தி நிரந்தர முகமூடி ஆகிவிட்டார்""

இங்கு "பாவம்" என்ற சொல்லை - அவர் ஏகாதிபத்திய சதிகளுக்கு நீங்கள் அவரிடம் இருப்பதாக(//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு//) சொன்ன பல்வேறு நிலபிரபுத்துவ தத்துவ தாக்கங்கள் காரணமாக பலியானார் - என்பதை உண்ர்ந்து பயன்படுத்தினேன்.

*****


*****
சிவகுமார்:

எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.



அசுரன்:

அவர் எப்பொழுதுமே சூழ்நிலைக் கைதிதான்(may be some exceptional examples be exist). இதை நேரு பல இடங்களில் பதிவு செய்துள்ளார். நேரு கூறுவதை தொகுப்பாக கூறினால் "அவர் எப்பொழுதும் குழப்பமான மனநிலையில் முடிவுகள் தெளிவாக எடுப்பதில் குளறுபடிகளுடனேயே இருந்தார்" என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

இது மிக எடுப்பாக வெளிவந்தது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அவரிடம் ஏற்பட்ட தடுமாற்றங்களின் போது. காந்திக்கும் அன்றைய கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தும் இவ்விசயத்தில் சில புரிதல்களுக்கு உதவும்.

அவர் பெரும்பாலான நேரங்களில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்துள்ளார் சில நேரங்களில் மக்களின் கடும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார் (வைக்கம் போராட்டம், தெலுங்கான போராட்டம்- மேலும் பல எடுத்துக்காட்டுகள் ஞாபகம் இல்லை). ஆனால் மிக பெரும்பாலான நேரங்களில் ஆளூம் வர்க்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க சொல்லி மக்களை கேட்கிறார்.

நிலபிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்த நிலங்களை திருப்பி கொடுக்க சொல்லி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர்களை கண்டித்து, தனது அரசு வரும் பொழூதும் இதே போல் நீங்கள் அடிபணியாமல் போக வாய்ப்புள்ளது என்று கண்டிக்கிறார். அவர்களுக்கு(57 வீரர்கள்) தண்டனை கொடுத்ததை சரி என்றவர். இவற்றின் மூலம் ஒரு அரசு என்ற அளவில் தானும் கூட வன்முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்துகிறார்.

அவர் என்றைக்குமே existing system-த்தை மாற்றக் கோரியதில்லை. அதாவது நிலபிரபுத்துவ setup-ல் மாற்றம் வருவதை விரும்பவில்லை. அவர் போராட்டத்தில் இறங்க காரணமானதாக நீங்கள் மேற்சொன்ன அதே இயங்கியல் இங்கும் அவரை உந்தித் தள்ளுகிறது.

(//தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், //

//இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித் தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.//)


அவரது பெருமை குலைந்த பொழுது அவர் பட்ட கஸ்டம் போல்தானே மற்ற அந்தஸ்த்தில் கூடியவர்களும்(நிலபிரபுக்கள், பிரிட்டிஸார்) அவர்களிடமிருந்து அந்தஸ்த்து பிடுங்கப்படும் போது பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எண்ணியதாலேயே உழைக்கும் மக்களின் அப்படிப்பட்ட போரட்டங்களை அவரால் ஆதரிக்க முடியவில்லை. அப்படி ஆதரித்தாலும் அது தன்னியல்பான பெரும் மக்கள் பங்களிப்பின் நிர்பந்தத்தால் எடுத்த முடிவுகளாகத்தான் உள்ளன.

அவர் எல்லாவற்றையும் தனது சொந்த அனுபவத்தின் முடிவிலிருந்து நோக்கினார் அதனால்தான் அவரது முடிவுகளை அவரது பிற்போக்கத்தனங்கள்(நீங்களே குறிப்பிட்ட) ஆளுமை செலுத்தின.

நான் மேலே சொல்லியிருந்தேனே காந்தியை ஆய்வு செய்வதில் உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்று, அது இந்த விசயம்தான்:
அதாவது காந்தியை போராட்டதுக்கு இழுத்த விசயத்தை அடையாளம் கண்ட தங்களால் அதுதான் அவரது ஒவ்வொரு முடிவையும் தீர்மானிக்கும் காரணியாக இருந்ததை கவனிக்காமல் விடுகிறேர்கள்.


## வன்முறையை ஆதரித்தாக சொல்லுவது அந்த துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையிலும், பகத்சிங் பிரச்சனையிலும் அரசு பயங்கரவாதத்தை ஆதரித்ததை. குறிப்பாக துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையில் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்ற வீரர்களை கண்டிக்கிறார்.

*****



*****

சிவகுமார்:

காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது



அசுரன்:

இது உண்மை. அன்றைய வரலாற்றுச் சூழலை ஆய்வு செய்யுங்கள். சந்தைக்கான பகுதிகள் முற்றிலுமாக ஒரு சில ஏகாதிபத்தியங்களின் கையில் மாட்டிக்கொண்டு. சந்தைக்கு புதிதாக நாடுகள் இன்றி ஏகாதிபத்தியங்கள் நேரடியான ஒரு மோதலுக்கான சூழல். இவற்றை அன்றைய லெனினுடைய பல்வேறு புத்தகங்களில் காணலாம். அமேரிக்கா தனக்கு சந்தையில் பங்கு வேண்டி அரசியல் செய்தது, ரஸ்யா என்ற தத்துவம் நிதர்சனமான நிலை, ஜப்பானின் வளர்ச்சி, ஜெர்மனியின் தொழிற்புரட்சி, இந்தியாவில் ஒரு கம்யூனிச எழுச்சிக்கான சூழல் இப்படி இந்தியாவுக்கு கிடைத்த போலி சுதந்திரத்தில் உலக, உள்ளூர் நடப்புகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. இதில் காந்தியின் பங்கு நிச்சயமாக நெகடிவ்தான்.

காந்தியின் நடவடிக்கைகள் அனைத்தையுமே தொகுத்துப் பார்த்தால் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் இவர் மக்களின் குரலாக முன்வந்து பிசுபிசுத்துப் போகும் போராட்ட வழிமுறைகளை சொல்லுவார். பிறகு பின்வாங்குவார் . இதன் மூலம் தற்காலிகமாக மக்கள் மீண்டும் போராடும் மனநிலைக்கு வர இன்னும் ஒரு 5 அல்லது 10 வருட அவகாசம் கொடுப்பார். இதற்க்காக பல்வேறு போராட்டங்களில் பிரிட்டிஸ் அரசால் நன்றியுடன் நினைவுகூறப்பட்டுள்ளார்.

காந்தி உண்மையில் சுதந்திரம் என்ற விசயத்தை தள்ளிப் போட்டார். இது காந்தி என்ற தனிமனிதரை மட்டும் பார்க்காமல் அவரது காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை பகுத்தாய்வு செய்தால் புரியும்.

காங்கிரஸ் என்ற கட்சியை ஆங்கிலேயனே உருவாக்கியது ஏன்?"வெடி மருந்துகள் நிரப்பட்ட பீரங்கி திரி கொழுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக" அன்றைய பிரிட்டிஸ் அரசு இந்தியாவின் நிலையை சொல்லுகிறதே அப்பொழுது காந்தி சிறுவன்தான்.

எதிர்ப்பை நிறுவனப்படுத்தி அழிக்கும் பழைய தந்திரம் தான் அது(இன்றைக்கு WSF அதுபோன்ற ஒரு அமைப்புதான்). பிரிட்டிஸ் அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா தனக்கான அமைப்பை தானே கட்டிக்கொள்ளும் சூழல் அன்று நிலவியதால். பிரிட்டிஸ் அரசே அப்படி ஒரு அமைப்பை உருவாக்கியது. அதுதான் காங்கிரஸ்.

காங்கிரஸ் பத்தாத பொழுது பாராளுமன்ற செட்டப், தேர்தல் என்று சலுகைகளை கொடுத்து கொடுத்து போராட்டத்தை தள்ளிப் போட்ட பிரிட்டிஸ் அரசுக்கு காந்தியும் அப்படித்தான் பயன்பட்டார் என்பது பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து சூழல், அவற்றை காந்தி சுவிகரித்து நிர்முலமாக்கியதை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிகிறது.

முதலுக்கே மோசமாக பம்பாய் தொழிலாளர் கலகம், தெலுங்கானா விவசாயிகல் கிளர்ச்சி, இரண்டாம் உலக்ப்போரால் பலவீனமான பிரிட்டிஸ் அரசு, அமேரிக்க பொருளாதார உதவி வேண்டி நிற்க்கும் பிரிட்டிஸ் அரசின் நிலை, சந்தையில் பங்கு கேட்கும் அமேரிக்கா.....

இச்சூழலில் ஏற்கனவே அவர்களது ஏஜன்டுகளாக, முகமூடிகளாக இருந்த காங்கிரஸ் பிற்போக்கு கோஸ்டிகளிடம் நாட்டை ஒப்புடைத்துவிட்டு. தங்களது தொடர் சுரண்டலுக்கு உறுதி செய்துகொண்டு கிளம்பிவிட்டனர்.(இது பற்றிய எனது ஆங்கில பதிவை பார்க்கவும் அதில் ஒரு தமிழ் கட்டுரை உள்ளது:http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html )

காமராசர் விசயத்தில் ராஜாஜிக்கு ஆதரவாக காந்தி செய்ததை எந்த லிஸ்டில் சேர்க்க. அதில் அவரது மேல்சாதி தாக்கம் வேலை செய்யவில்லை என்று கூறுகிறேர்களா?

மேலும் நீங்கள் சொல்லுவது போல் தீண்டாமை போராட்டத்தை காந்தி தொடங்கவில்லை. வைக்கம் போராட்டத்திற்க்கு தீர்மானம் இயற்றக்கூட தாயாராயில்லை அன்றைய காங்கிரஸ்.

அவரது தீண்டாமை எதிர்ப்பும்கூட புற நிலையில் நிலவிய நிர்பந்தத்தால் அவர் தள்ளப்பட்டதுதான்.

அதனால்தான் எந்த தலித் கட்சியும் காந்தியை தலைவராக சொல்ல விரும்புவதில்லை.

காந்தி ஒரு தனிமனிதராக நேர்மை, தியாகம், சகிப்புத்தன்மை, இன்ன பிற விசயங்களுக்கு முன்னுதரனமான தலைவர் ஆனால் அவர் சமூக மாற்றத்துக்கான தலைவர் அல்ல. அவரது முடிவுகளை வைத்து இந்தியாவின், உலகின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது.

*************



யாருக்கு அஹிம்சை:
இவை தவிர்த்து அஹிம்சா தத்துவத்தின் மூல வேர் எங்குள்ளது என்று தேடினால், அது வர்ணாஸ்ரம தர்மத்தின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு நிலபிரபுத்துவ மயக்கத்தில் அதன் பின்பு அணி திரண்ட பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நத்தை மனோபாவத்தில்(அடக்குமுறையைக் கண்டால் கூட்டுக்குள் தலையை இழுத்துக்கொண்டு விதியை நொந்து மருகும் மனோபாவம்), அடிமை மனோபாவத்தில் உள்ளது.

ஆக, மக்கள் தங்களை உணர்ந்து கிளர்ந்து போராட வேண்டுமானால் வர்ணாஸ்ரம கட்டமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். இது குறித்து காந்தியிடம் ஆழ்ந்த அறிவு, வியாக்கியானமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே இந்த நிலவுகின்ற வர்ணாஸ்ரம கட்டமைப்பு உருவாக்கிய, நிலபிரபுத்துவத்தின் பின்னே அணி திரள்கிற மக்களின் மந்தை மனோபாவத்தை காந்தி புரிந்து கொள்கிறார், அதற்க்கேற்ற தத்துவம்தான் அஹிம்சை என்கிற ஆளும் வர்க்கத் தத்துவம்.


அசுரன்

**********

related article: மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்


பதிந்தவர் அசுரன் at Tuesday, October 03, 2006


http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.html

செய்தி விமர்சனம் said...

http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.html

காந்தி நல்லவரா? கெட்டவரா?

வெட்டிபயல் என்ற நண்பர் பகத்சிங் பிறந்த நாளை ஒட்டி பதியப்பட்ட ஒரு காட்டுரையில் காந்தியை விமர்சித்து வரும் வரிகள் குறித்து தனது மாற்றுக் கருத்தை தெரிவித்திருந்தார்:


//நீங்க காந்தியை பற்றி தவறாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது...
காந்தி உயர்ந்தவரா, பகத் சிங் உயரந்தவரானு கேட்டா எனக்கு ரெண்டு பேரையும் பிரிச்சு பாக்க தெரியாது. தன் நாட்டு மக்களுக்காக உயிரை விட்ட இருவருமே ஒன்றுதான். தங்களின் நம்பிக்கையின் விளைவில் அவர்கள் போராடினார்கள்.//
அவருக்கு விளக்கம் கொடுக்கும் முகமாக் காந்தி குறித்து ஒரு விவாதத்தை ஆரம்பிக்கலாம் என்று பிரியப்பட்டேன். இங்கு வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் பகத்சிங்கின் தீர்க்கமான பார்வைக்கு முன்பு காந்தியின் வறட்டு பழமைவாத தத்துவம் ஒன்றுமே கிடையாது. அவர்(காந்தி) முற்றிலும் உணர்வுப் பூர்வமான ஒரு மனிதர். அந்த உள்ளுணர்வை தீர்மானித்ததோ அவரது வர்ணாஸ்ரம பிடிப்பு.



**************
முன்பொருமுறை மா.சிவகுமாருடன் காந்தி குறித்து ஒரு விவாதம் நடந்தது. அதன் பகுதிகளை தருகிறேன்.

நான் மா.சிவகுமாரிடம் கேட்டிருந்த கேள்விகள்:


1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?

2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?

3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?

4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?

5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?

6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.




மா.சி யின் பதிலில் உள்ள ஒரு பகுதி:

***//தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.//***


***//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே.//***


ஆக, இதுதான் காந்தி. இந்த பெருமையை, பழைய காலத்தை ஆங்கிலேயனிடம் இருந்து மீட்ப்பதுதான் அவரது இயங்கியல். இதை தவிர்த்து அவர் மக்கள் விடுதலை என்று பேசியவை எல்லாம் அன்றைக்கு நிலவிய கருத்துக்களால் தாக்கப்பட்டு அவற்றையும் பிரதி நிதித்துவ படுத்த வேண்டிய கட்டாயமே அன்றி வேறல்ல. அப்பொழுதும் அவர் நிலபிரபுத்துவத்தின் நலனில் ஒரு சிறு அளவு கூட சமரசம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில், எப்படி கீழே தள்ளிவிடப்பட்ட காந்தி விசனமுற்றாரோ அதே போலத்தானே உடமைகள் பிடுங்கப்படும் கொழுத்த சுரண்டல் நிலபிரபுவும் விசனப்படுவான் என்பதை அவரால பொருத்திப் பார்க்க முடிந்தது. ஆனால், எந்த உடமையும் இன்றி அந்த காலத்தில் அடிமையைவிட கேவலாமான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் போராட்டங்களை அவரால் அவ்வாறு பொருத்திப் பார்த்து உணர முடியவில்லை.




மா.சிக்கு சின்னக் கட்ட பொம்மன் என்பவர் கொடுத்த சில பதில்கள்:


*****

காந்தி வைக்கம் போராட்டத்தைச் சிதைத்திடச் செய்த ஈனத்தனமான செய்கையை, தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட, ஞானி இயக்கிய 'அய்யா' எனும் தொடர் அம்பலமாக்கியுள்ளது. அப்போராட்டத்தில், பெரியாருடன் இணைந்து போராடிய காங்கிரசுப் பிரமுகர் ஜார்ஜ் ஜோசப்பை, அப்போராட்டத்தினை விட்டு விலகிடுமாறு காந்தி கடிதம் எழுதினார். வைக்கம் போராட்டத்தில் ஜோசப் ஈடுபட்டபோது திருவிதாங்கூர் அரசு அவரை சிறையில் அடைத்தது. அப்போது சிறைக்குள் இருந்த ஜோசப்பிற்கு காந்தியின் வேண்டுகோள் வந்து சேர்ந்தது. "கிறிஸ்தவரான தாங்கள், இந்து மதத்தின் உள்விவகாரத்தில் அக்கரை காட்ட வேண்டாம். விலகிடுங்கள்" என்று. ஜோசப் மனம் நொந்து போனார். மனித உரிமை மீறலை எதிர்த்துத்தான் அவர் பெரியாருடன் இணைந்து வைக்கம் வந்தவர். அவரின் செயலை, இந்த பாவ ஆத்மாவோ, மதரீதியாய்த் தனிமைப்படுத்திடும் இழிவான செயலில் இறங்கியது.

தற்காலத்தில் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள், ராம கோபாலன் எனும் வானரக் கூட்டத்தினர் என்பதை எண்ணிப்பார்க்கலாம். கோவிலிலே தமிழில் வழிபாடு என்று கேட்டால், நாத்திகர்களுக்கு இதைச் சொல்ல உரிமை ஏது? என்று நரித்தனமாய்க் கேட்பார்கள்? ராமகோபாலன் கூட்டத்தின் முன்னோடியாக மோகன் தாசு இவ்வாறாக வெளிப்படுகிறார் பார்த்தீர்களா?

பிற்பாடு ஜார்ஜ் ஜோசப் காங்கிரசை எதிர்க்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் போய்ச் சேரும் வேலையை காந்தியே செய்தார் என்று வ.ரா. எழுதி இருக்கிறார்.

மதமாற்றம், கோமாதாவைப் பிரியாணி போடுவது பற்றி, நால்வகை வர்ணம் பற்றி காந்தி மஹ்ஹ்ஹ்ஹான் என்ன கருதினார்?

*****



*****

காந்தியின் எளிமை பற்றிய புரட்சிகர மயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது.

செல்வந்தராகவும், பிறப்பில் மேம்பட்ட வைசிய வர்ணத்தவராகவும் பிறந்த காந்தி, எளிய உடை உடுத்துவது என்பது அவ்வர்க்கத்தால் எளிதில் செய்யக்கூடிய செயல் என்பதையும், ஆனால் தூய்மையான உடையோ, ஆடம்பரமான உடையோ மறுக்கப்பட்ட மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், கோட் சூட் அணிந்து அதை மறுப்பதுதான் இங்கு புரட்சிகரமான விசயம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

காந்தியின் மற்ற எளிமைகளைப் பற்றி சரோஜினி நாயுடு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்:-

"அவரின் எளிமைக்காக காங்கிரசுக் கட்சி நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது".

பின்னே. இருக்காதா? மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் இவுக போகணும்னா, 72 டிக்கட்டையும் (பாதுகாப்பு கருதி) காங்கிரசு அல்லவா புக் செய்து மொய் எழுதியது! கூடவே பால் கறவையில் இருக்கும் ஆடுகளுக்கும் டிக்கட் எடுக்கணும்.

இந்த மாதிரி வெளி வேசம் போட்ட ஆசாமி எவ்வாறு தன்னிகரில்லா தலைவனானான்?

*****



*****

இந்த தன்னிகரில்லா தலைவலியால், நமது நாடு சந்தித்த இடையூறுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
1) வெள்ளையனை எதிர்த்துப் போர் முரசு கொட்டி மாண்ட லட்சுமிபாய்,திப்பு சுல்தான்,கட்டபொம்மன்,பூலித்தேவன்,அழகுமுத்துக் கோன் ஆகிய வீரர்களின் வாட்களோ, இந்த ஆசாமியால் சர்வோதயா/கதர் காரியாலயத்தில் 'கதர் சோப்பு' வெட்டிக்கொண்டிருந்தது.

தோழர் ஜீவானந்தம், 1920களில் காந்தி பக்தராக இருந்த காலத்தில் காரைக்குடியில் காந்தி ஆசிரமம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாசிரமத்திற்கு விஜயம் செய்த வ.உ.சி. சினத்துடன் சொன்ன வார்த்தை "வாளெடுத்துப் போர் புரிய வேண்டிய கைகளைப் போயும் போயும் கைராட்டை சுற்ற வைத்து விட்டாயேப்பா".

2) சௌரி சௌரா போலீஸ் ஸ்டேசனை மக்கள் கொளுத்தித் தம் கோபத்தைக் காட்டியதும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தீராக்காதலர் காந்திக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்.

பின்னே! செய்ய மாட்டாரா என்ன? கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் முதல் உலகப்போரில், பிரிட்டிசாருக்கு ராணுவத்தில் சேர்ந்து தொண்டு செய்ய மக்களிடம் அரும்பாடுபட்டிருந்தார். அதற்கு சற்று முன்னர், தென் ஆப்பிரிக்க போயர் யுத்தத்தில், வெள்ளையனுக்கு கங்காணி வேலை செய்து விட்டுத்தானே இங்கே கப்பல் ஏறி வந்தார்?

3)புரட்சிக்காரன் பகத்சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால், அதனை, லாகூர் காங்கிரசுக்கு முன்னரே செய்து விடுங்கள் என்று இர்வினிடம் பேரம் பேசி 'காந்தி-இர்வின்'ஒப்பந்தம் போட்ட துரோகத் தலைவனாச்சே!

4)ஆங்கிலேயனை, அவன் வந்திறங்கிய இந்திய வாசலான பம்பாயிலேயே துரத்தி அடிக்கும் பாய்ச்சலோடு 1946லே இந்தியக் கடற்படையினர் 'தல்வார்' கப்பலில் செய்த ராணுவப் புரட்சியைக் காட்டிக் கொடுத்த இவரல்லவா தலைவர்?

5) சக இந்தியரை சுட மறுத்த (வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில்) கூர்க்கா ராணுவப் படையினரின் செயலைக் கண்டித்த தேசத்தலைவரல்லவா?

6)தெலுங்கானா, புன்னப்புரா, வயலார், வயநாடு ஆகிய விவசாயிகள் புரட்சியை ரத்தச் சேற்றில் நிலப்பிரபுத்துவ சக்திகள் நசுக்கிக் கொண்டிருந்தபோது 'தர்மகர்த்தா' முறை மூலம் நமது உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு வரும் என கிலோக்கணக்கில் அல்வா கொடுத்த ஜென்மம் அல்லவா?

காந்தியின் சாதனைகள் தொடரும்..

*****



*****

அஹிம்சைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கும் நீர், கீழ்க்கண்ட விசயம் பற்றி என்ன கருதுகிறீர்?

தலித்களின் இரட்டை வாக்காளர் தொகுதியை அம்பேத்கர் ஆதரித்தபோது, அது இந்து தர்மத்தைப் பிளவுபடுத்தி விடும் என்று சொல்லி, அம்முறையைக் கைவிடக் கோரி உண்ணாவிரதம் இருந்த காந்தியின் பிளாக்மெயில் அணுகுமுறையும் அஹிம்சைதானா?(உண்ணாவிரதம் என்பதால் அஹிம்சைதானே)உயிரை ஊசலாட வைத்துக்கொண்டு அம்பேத்கரை மிரட்டி 'பூனா ஒப்பந்தத்தில்' கையெழுத்திடச் செய்து, தலித்களின் நலன்களுக்கு எதிராக காந்தி நடந்துகொண்ட அம்முறை, காந்தியின் பக்தர்களான தங்களுக்கு உவப்பானதா?

அவர் உண்ணாவிரதம் இருந்தபோது, ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார், அம்பேத்கருக்கு 'அவர் சாகட்டும். அவரின் உயிருக்காகப் பணிந்து போய் தாழ்த்தப்பட்டவர்களின் நலனைப் பலி கொடுக்காதீர்கள்' என்று தந்தி கொடுத்ததையும் இங்கு நினைவுகூர்கிறேன்.

அஹிம்சையை காந்தி யாருக்கு வலியுறுத்தினார்? ஒடுக்கப்படும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு மட்டுமே. அரசின் பயங்கரவாதத்தை அவர் எப்போதுமே ஆதரித்துள்ளார். நிலப்பிரபுக்களின் சுரண்டல் அவர் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்தச் சுரண்டல் எல்லாம் என்ன அஹிம்சைப் பரம்பொருளா என்ன?

பசுவைக் கொல்லக் கூடாது என எந்த அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள்?
பசுவின் கறியே மலிவு விலையில் (கிலோ 60 ரூபாய் இருக்கும். 3 வருடங்களுக்கு முன் சென்னையில் 55ரூபாய்க்கு வாங்கினேன்) ஏழை மக்களுக்குக் கிடைக்கும் அதிகப் புரதம் நிறைந்த உணவு. மேலும் பசுவைக் கொல்வதால் நமக்குக் கிடைக்கும் செல்வம் சொல்லி மாளாது. பேட்டா செருப்பு, கைப்பை, ஜெர்க்கின் என்று தோல்பொருட்களும், மாருதி காரின் சீட்டு, சர்க்கரை வியாதி மருந்து, செல்லப் பிராணிகளின் தீனி, சர்க்கரை சுத்திகரிப்புத் தொழிலில் முக்கிய இடுபொருள், என அதன் பயன்பாடு எண்ணிலடங்கா. பார்ப்பனர்களின் சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் பஞ்சகவ்யத்தில் கூட பசுவின் கோரோசனம் ஒரு பங்காகும்.

உபயோகமில்லா மாட்டை எந்த ஏழையாலும் தீனி போட்டுப் பராமரிப்பதென்பது ஏலாத காரியம்.

உயர்சாதி மனோபாவத்துடனும், முசுலீம் எதிர்ப்பு இந்து வெறியாலுமே, பசு வந்தனை பஜனைகள் பாட முடியும்.

*****



*****

காந்தியின் பசு வதை எதிர்ப்பும், சுரண்டும் வர்க்கத்தின் பண்பாடுதான்.அவர் எப்போதுமே ஆளும் வர்க்கக் கருத்தியலுக்கு ஊறு விளைவித்திடாத வகையில் மக்கள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்பதனால்தான் அஹிம்சையை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து மட்டும் எதிர்பார்த்தார்.

அஹிம்சையால் எதிராளியின் மனசை மாற்றுவது எனும் கற்பனையின் விஸ்தாரம் இருக்கட்டும். இப்போது நடைமுறையில் இருக்கும் சில நிகழ்வுகளைப் பேசுவோமே.

தாமிரபரணி ஆற்று நீரை அந்நிய நாட்டு கோக் நிறுவனம் ஒட்ட உறிஞ்சி நம்மைக் குடிநீர்ப் பஞ்சம் நோக்கித் துரத்த ஆரம்பித்துள்ளது. இது கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியது. நம் நாட்டில் இத்தகைய எதிர்ப்புகளை அஹிம்சை வழியில் செய்ய அரசியல் சட்டம் வழிவகை செய்துள்ளது.

போராடும் மக்கள், இதற்காக ஊர்வலம் நடத்திப் பிரச்சாரம் செய்திட முனைகிறார்கள். ஆனால் கோக்கிடம் காசு வாங்கிய காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கோக் பற்றி நீங்கள் உங்கள் பிரச்சாரத்தில் பேசக் கூடாது என மறுக்கிறது. பாருங்கள்! இங்கே அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோக் ஆலை அமைய இருக்கும் ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் கம்சன் என்பவர் அந்த நிறுவனம் தொடங்க அனுமதியை ரத்து செய்து தீர்மானம் போடுகிறார். உடனே, கோக்கின் ஆட்களால் கடத்தப்பட்டு, மர்மமான முறையில் சாகிறார். இது ஹிம்சை. அரசோ கோக் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எதிரி, ஹிம்சையைக் கையாள அரசு மவுனசாட்சியாக நிற்கும்போது, மக்கள் போராடுவதற்குக் கூட அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது.

மக்கள், கோக் ஆலைக்காரன் மனசை மாற்றிட ஏதாவது ஜெபமோ, பஜனையோ பாடிக் கொண்டிருக்க முடியுமா?

நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.

காந்தியின் சிந்தனைப்படி பார்த்தால், அவனை ஏன் எதிரியாக நினைக்க வேண்டும். அவன் அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் நம்மை வருத்திக் கொள்ளவேண்டும் என்பது 100% எதிரியின் நலன் காப்பதில்தான் போய் முடியும். இல்லையா?

நிலப்பிரபுத்துவம் உச்சிக்குப் போய் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தெலங்கானாவில் ஒவ்வொரு பண்ணையாளருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், அவர்களின் அதீத சுரண்டலும், உழைக்கும் விவசாயக் கூலிகளுக்கோ ஒட்டிய வயிறே சொத்தாக இருந்ததுமே அவர்களைப் புரட்சியை நோக்கி உந்தித் தள்ளியது.

இந்த இடத்தில் பண்ணையார்கள் துப்பாக்கியால் விவசாயிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது அவ்விவசாயிகளுக்கு அஹிம்சையை உபதேசிப்பது எவ்விதத்திலும் அவர்களை மேம்படுத்திட உதவி செய்யாது. இல்லையா?

விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டு போராடி பல மாவட்டங்களில் பண்ணையார்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. பண்ணையார்கள் ஹைதராபாத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். காந்தி ஏழை விவசாயிகளின் இச்செயலை ஏற்றுக் கொள்ளவில்லை.

உடனே அவரின் சீடர் வினோபா தலைமையில் பூமிதான இயக்கம் தோன்றிட விதை போட்டார். அதாவது நிலப்பிரபுக்களே மனசு மாறி உபரி நிலங்களை ஏழைகளுக்குத் தானமாய்த் தந்து விடுவது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கத்தி இன்றி நிலம் சொந்தமாகி விடும். இதன் நீட்சியாக தமிழ் நாட்டில் கூட பின்னாளில் காங்கிரசு அரசு எந்த ஒரு பண்ணையாருக்கும் 45 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது என சட்டம் போட்டது. காந்தியின் சீடர்கள்தான் கில்லாடிகளாச்சே. பினாமி பேரில் 45, 45 ஏக்கர்களாய் மாற்றிக் கொண்டார்கள். உதாரணமாக கோவிந்தசாமி மூப்பனார்(கருப்பையா மூப்பனாரின் அப்பா) தனக்கு சொந்தமாய் இருந்த 1000 ஏக்கர் நிலங்களில் பெரும்பாலானவற்றை டிரஸ்ட் ஒன்றின் கீழ் மாற்றி ஏய்த்தார். சிலவற்றை பினாமிகளாய் தனக்கு சாராயத்தில் சோடா கலந்து தரும் வேலை செய்த எடுபிடி 'சோடா மாணிக்கம்' என்பவரது பேரில் கூட 45 ஏக்கர் எழுதி வைத்தார்.

இவ்வாறு நிலப்பிரபுக்களின் நலன் சரிந்து விடாதபடிக்குத்தான் காந்தியின் 'தர்மகர்த்தா' பொருளாதார முறை விளங்கியது. காந்தியின் மனப்பான்மை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கானதில்லை.

*****





மா.சிக்கு அசுரனின் சில பதில்கள்:

*****

ஒவ்வொரு சமூக கட்டங்களையும் இயக்கும் பிரதான முரன்பாடு என்ன? காந்தி எந்த வர்க்கம்? அவரது பின்புலமாக உள்ள சமூக கட்டங்கள் என்ன? அவர் மீது ஆளுமை செலுத்திய தத்துவங்கள் என்ன? அன்றைய காலகட்டத்தின் புரட்சிகர நிலைமைகள் என்ன என்று பல்வேறு விசயங்களை கண்க்கில் எடுத்து ஆய்வு செய்தால் மிஞ்சுவது காந்தி சமூக விடுதலைக்கான ஒரு தலைவர் அல்ல. அவரிடம் தீர்வு என்று சொல்லுவதற்கான விசயங்கள் ஒன்றும் கிடையாது, அவர் சமூகத்தை பின்னுக்கிழுக்க முயற்சி செய்தவஎ என்பதுதான் முடிவாக வருகிறது. மேலும் நீங்களே சொல்லுவது போல் அவரை நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனம் ஆளுமை செலுத்துகிறது.

*****



*****
சிவகுமார்:

உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.



அசுரன்:

இதை நான் மறுக்கவே இல்லை. இன்னும் இந்த விசயத்தை மனதில் கொண்டுதான் எனது மாப்ளா கலகம் கட்டுரையில் கூட காந்தி பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இவை ஒரு தனிமனிதனுக்கு நல்ல முன்னுதாரணம். இவை ஒரு நல்ல மனித சமுதாயத்தில் தன்னலம் கருதாமல் சமூகத்தின் நலம் கருதி வாழ்வதற்க்கு நல்ல முன்ணுதாரனம். இவற்றை கட்டாயம் எந்த ஒரு சமூகப் போராளியும், தலைவரும் தனது பண்பாடாக சுவிகரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை எந்த காலத்திலும் அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடாது.

காந்தியின் நேர்மையை அவரது 'அறிவியல் பூர்வமான சித்தாந்தமில்லா' சுய தேடலை இப்படித்தான் அன்றைய ஏகாதிபத்தியம் தனக்கு முகமூடியாக பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் எனது மாப்ளா கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தேன்: ""பிறகு பாவம் காந்தி நிரந்தர முகமூடி ஆகிவிட்டார்""

இங்கு "பாவம்" என்ற சொல்லை - அவர் ஏகாதிபத்திய சதிகளுக்கு நீங்கள் அவரிடம் இருப்பதாக(//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு//) சொன்ன பல்வேறு நிலபிரபுத்துவ தத்துவ தாக்கங்கள் காரணமாக பலியானார் - என்பதை உண்ர்ந்து பயன்படுத்தினேன்.

*****


*****
சிவகுமார்:

எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.



அசுரன்:

அவர் எப்பொழுதுமே சூழ்நிலைக் கைதிதான்(may be some exceptional examples be exist). இதை நேரு பல இடங்களில் பதிவு செய்துள்ளார். நேரு கூறுவதை தொகுப்பாக கூறினால் "அவர் எப்பொழுதும் குழப்பமான மனநிலையில் முடிவுகள் தெளிவாக எடுப்பதில் குளறுபடிகளுடனேயே இருந்தார்" என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

இது மிக எடுப்பாக வெளிவந்தது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அவரிடம் ஏற்பட்ட தடுமாற்றங்களின் போது. காந்திக்கும் அன்றைய கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தும் இவ்விசயத்தில் சில புரிதல்களுக்கு உதவும்.

அவர் பெரும்பாலான நேரங்களில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்துள்ளார் சில நேரங்களில் மக்களின் கடும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார் (வைக்கம் போராட்டம், தெலுங்கான போராட்டம்- மேலும் பல எடுத்துக்காட்டுகள் ஞாபகம் இல்லை). ஆனால் மிக பெரும்பாலான நேரங்களில் ஆளூம் வர்க்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க சொல்லி மக்களை கேட்கிறார்.

நிலபிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்த நிலங்களை திருப்பி கொடுக்க சொல்லி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர்களை கண்டித்து, தனது அரசு வரும் பொழூதும் இதே போல் நீங்கள் அடிபணியாமல் போக வாய்ப்புள்ளது என்று கண்டிக்கிறார். அவர்களுக்கு(57 வீரர்கள்) தண்டனை கொடுத்ததை சரி என்றவர். இவற்றின் மூலம் ஒரு அரசு என்ற அளவில் தானும் கூட வன்முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்துகிறார்.

அவர் என்றைக்குமே existing system-த்தை மாற்றக் கோரியதில்லை. அதாவது நிலபிரபுத்துவ setup-ல் மாற்றம் வருவதை விரும்பவில்லை. அவர் போராட்டத்தில் இறங்க காரணமானதாக நீங்கள் மேற்சொன்ன அதே இயங்கியல் இங்கும் அவரை உந்தித் தள்ளுகிறது.

(//தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், //

//இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித் தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.//)


அவரது பெருமை குலைந்த பொழுது அவர் பட்ட கஸ்டம் போல்தானே மற்ற அந்தஸ்த்தில் கூடியவர்களும்(நிலபிரபுக்கள், பிரிட்டிஸார்) அவர்களிடமிருந்து அந்தஸ்த்து பிடுங்கப்படும் போது பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எண்ணியதாலேயே உழைக்கும் மக்களின் அப்படிப்பட்ட போரட்டங்களை அவரால் ஆதரிக்க முடியவில்லை. அப்படி ஆதரித்தாலும் அது தன்னியல்பான பெரும் மக்கள் பங்களிப்பின் நிர்பந்தத்தால் எடுத்த முடிவுகளாகத்தான் உள்ளன.

அவர் எல்லாவற்றையும் தனது சொந்த அனுபவத்தின் முடிவிலிருந்து நோக்கினார் அதனால்தான் அவரது முடிவுகளை அவரது பிற்போக்கத்தனங்கள்(நீங்களே குறிப்பிட்ட) ஆளுமை செலுத்தின.

நான் மேலே சொல்லியிருந்தேனே காந்தியை ஆய்வு செய்வதில் உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்று, அது இந்த விசயம்தான்:
அதாவது காந்தியை போராட்டதுக்கு இழுத்த விசயத்தை அடையாளம் கண்ட தங்களால் அதுதான் அவரது ஒவ்வொரு முடிவையும் தீர்மானிக்கும் காரணியாக இருந்ததை கவனிக்காமல் விடுகிறேர்கள்.


## வன்முறையை ஆதரித்தாக சொல்லுவது அந்த துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையிலும், பகத்சிங் பிரச்சனையிலும் அரசு பயங்கரவாதத்தை ஆதரித்ததை. குறிப்பாக துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையில் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்ற வீரர்களை கண்டிக்கிறார்.

*****



*****

சிவகுமார்:

காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது



அசுரன்:

இது உண்மை. அன்றைய வரலாற்றுச் சூழலை ஆய்வு செய்யுங்கள். சந்தைக்கான பகுதிகள் முற்றிலுமாக ஒரு சில ஏகாதிபத்தியங்களின் கையில் மாட்டிக்கொண்டு. சந்தைக்கு புதிதாக நாடுகள் இன்றி ஏகாதிபத்தியங்கள் நேரடியான ஒரு மோதலுக்கான சூழல். இவற்றை அன்றைய லெனினுடைய பல்வேறு புத்தகங்களில் காணலாம். அமேரிக்கா தனக்கு சந்தையில் பங்கு வேண்டி அரசியல் செய்தது, ரஸ்யா என்ற தத்துவம் நிதர்சனமான நிலை, ஜப்பானின் வளர்ச்சி, ஜெர்மனியின் தொழிற்புரட்சி, இந்தியாவில் ஒரு கம்யூனிச எழுச்சிக்கான சூழல் இப்படி இந்தியாவுக்கு கிடைத்த போலி சுதந்திரத்தில் உலக, உள்ளூர் நடப்புகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. இதில் காந்தியின் பங்கு நிச்சயமாக நெகடிவ்தான்.

காந்தியின் நடவடிக்கைகள் அனைத்தையுமே தொகுத்துப் பார்த்தால் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் இவர் மக்களின் குரலாக முன்வந்து பிசுபிசுத்துப் போகும் போராட்ட வழிமுறைகளை சொல்லுவார். பிறகு பின்வாங்குவார் . இதன் மூலம் தற்காலிகமாக மக்கள் மீண்டும் போராடும் மனநிலைக்கு வர இன்னும் ஒரு 5 அல்லது 10 வருட அவகாசம் கொடுப்பார். இதற்க்காக பல்வேறு போராட்டங்களில் பிரிட்டிஸ் அரசால் நன்றியுடன் நினைவுகூறப்பட்டுள்ளார்.

காந்தி உண்மையில் சுதந்திரம் என்ற விசயத்தை தள்ளிப் போட்டார். இது காந்தி என்ற தனிமனிதரை மட்டும் பார்க்காமல் அவரது காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை பகுத்தாய்வு செய்தால் புரியும்.

காங்கிரஸ் என்ற கட்சியை ஆங்கிலேயனே உருவாக்கியது ஏன்?"வெடி மருந்துகள் நிரப்பட்ட பீரங்கி திரி கொழுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக" அன்றைய பிரிட்டிஸ் அரசு இந்தியாவின் நிலையை சொல்லுகிறதே அப்பொழுது காந்தி சிறுவன்தான்.

எதிர்ப்பை நிறுவனப்படுத்தி அழிக்கும் பழைய தந்திரம் தான் அது(இன்றைக்கு WSF அதுபோன்ற ஒரு அமைப்புதான்). பிரிட்டிஸ் அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா தனக்கான அமைப்பை தானே கட்டிக்கொள்ளும் சூழல் அன்று நிலவியதால். பிரிட்டிஸ் அரசே அப்படி ஒரு அமைப்பை உருவாக்கியது. அதுதான் காங்கிரஸ்.

காங்கிரஸ் பத்தாத பொழுது பாராளுமன்ற செட்டப், தேர்தல் என்று சலுகைகளை கொடுத்து கொடுத்து போராட்டத்தை தள்ளிப் போட்ட பிரிட்டிஸ் அரசுக்கு காந்தியும் அப்படித்தான் பயன்பட்டார் என்பது பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து சூழல், அவற்றை காந்தி சுவிகரித்து நிர்முலமாக்கியதை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிகிறது.

முதலுக்கே மோசமாக பம்பாய் தொழிலாளர் கலகம், தெலுங்கானா விவசாயிகல் கிளர்ச்சி, இரண்டாம் உலக்ப்போரால் பலவீனமான பிரிட்டிஸ் அரசு, அமேரிக்க பொருளாதார உதவி வேண்டி நிற்க்கும் பிரிட்டிஸ் அரசின் நிலை, சந்தையில் பங்கு கேட்கும் அமேரிக்கா.....

இச்சூழலில் ஏற்கனவே அவர்களது ஏஜன்டுகளாக, முகமூடிகளாக இருந்த காங்கிரஸ் பிற்போக்கு கோஸ்டிகளிடம் நாட்டை ஒப்புடைத்துவிட்டு. தங்களது தொடர் சுரண்டலுக்கு உறுதி செய்துகொண்டு கிளம்பிவிட்டனர்.(இது பற்றிய எனது ஆங்கில பதிவை பார்க்கவும் அதில் ஒரு தமிழ் கட்டுரை உள்ளது:http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html )

காமராசர் விசயத்தில் ராஜாஜிக்கு ஆதரவாக காந்தி செய்ததை எந்த லிஸ்டில் சேர்க்க. அதில் அவரது மேல்சாதி தாக்கம் வேலை செய்யவில்லை என்று கூறுகிறேர்களா?

மேலும் நீங்கள் சொல்லுவது போல் தீண்டாமை போராட்டத்தை காந்தி தொடங்கவில்லை. வைக்கம் போராட்டத்திற்க்கு தீர்மானம் இயற்றக்கூட தாயாராயில்லை அன்றைய காங்கிரஸ்.

அவரது தீண்டாமை எதிர்ப்பும்கூட புற நிலையில் நிலவிய நிர்பந்தத்தால் அவர் தள்ளப்பட்டதுதான்.

அதனால்தான் எந்த தலித் கட்சியும் காந்தியை தலைவராக சொல்ல விரும்புவதில்லை.

காந்தி ஒரு தனிமனிதராக நேர்மை, தியாகம், சகிப்புத்தன்மை, இன்ன பிற விசயங்களுக்கு முன்னுதரனமான தலைவர் ஆனால் அவர் சமூக மாற்றத்துக்கான தலைவர் அல்ல. அவரது முடிவுகளை வைத்து இந்தியாவின், உலகின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது.

*************



யாருக்கு அஹிம்சை:
இவை தவிர்த்து அஹிம்சா தத்துவத்தின் மூல வேர் எங்குள்ளது என்று தேடினால், அது வர்ணாஸ்ரம தர்மத்தின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு நிலபிரபுத்துவ மயக்கத்தில் அதன் பின்பு அணி திரண்ட பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நத்தை மனோபாவத்தில்(அடக்குமுறையைக் கண்டால் கூட்டுக்குள் தலையை இழுத்துக்கொண்டு விதியை நொந்து மருகும் மனோபாவம்), அடிமை மனோபாவத்தில் உள்ளது.

ஆக, மக்கள் தங்களை உணர்ந்து கிளர்ந்து போராட வேண்டுமானால் வர்ணாஸ்ரம கட்டமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். இது குறித்து காந்தியிடம் ஆழ்ந்த அறிவு, வியாக்கியானமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே இந்த நிலவுகின்ற வர்ணாஸ்ரம கட்டமைப்பு உருவாக்கிய, நிலபிரபுத்துவத்தின் பின்னே அணி திரள்கிற மக்களின் மந்தை மனோபாவத்தை காந்தி புரிந்து கொள்கிறார், அதற்க்கேற்ற தத்துவம்தான் அஹிம்சை என்கிற ஆளும் வர்க்கத் தத்துவம்.


அசுரன்

**********

related article: மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்


பதிந்தவர் அசுரன் at Tuesday, October 03, 2006


http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.html

  • இணைப்புகள்

  •